உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சந்திராஷ்டமம். இதனால் மன அமைதி குறையும். காரியம் தாமதம் ஆகும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் தொல்லைகள் ஏற்படும். 10-ஆம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். தெய்வப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
மனத்தில் தெளிவு பிறக்கும். புதிய சொத்துக்கள் சேர வழிபிறக்கும். வாரப் பின்பகுதியில் காரியானுகூலம் உண்டாகும். நெருங்கிய நண்பர்கள் உதவி புரிவார்கள். மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் சிறுசிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது. பொருளாதாரப் பிரச்சினை உண்டாகும். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 13, 14.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 7.
பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஆஞ்சநேயரை வழிபடவும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 8-ஆமிடம் மாறுவது குறை ஆகும். நண்பர்கள், உறவினர்களால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். அறப்பணிகளில் நாட்டம் கூடும்.
எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். இயந்திரப்பணியாளர்கள், பொறியாளர்கள், சட்ட வல்லுநர்கள், காவல் மற்றும் இராணுவத்தில் பணிபுரிபவர்கள், ரியல் எஸ்டேட் இனங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கெல்லாம் சோதனைகள் சூழும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். கெட்டவர்களின் தொடர்பைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் பதற்றம் அடியோடு கூடாது. வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் ராகுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 7-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். நிலபுலங்கள், வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். விவசாயிகளும் தொழிலாளர்களும் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும்.
வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். செய்து வரும்தொழிலில் அதிக கவனம் செலுத்தி, அயராது பாடுபட்டால் வளர்ச்சி காணலாம். கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். எதிர்ப்புக்கள் இருக்கும் என்றாலும் சமாளிக்கும் சக்தி உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்: 1, 4, 6, 8.
பரிகாரம்: மலையப்பப் பெருமாளை வழிபடவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுவது நல்லது.
கடகம்
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். பண வரவு சற்று அதிகரிக்கும். திறமை வீண்போகாது. எதிரிகள் அடங்கிப் போவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். தகவல் தொடர்பு இனங்களால் வருவாய் கிடைத்துவரும். வியாபாரிகளுக்கு அனுகூலமான போக்கு தென்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் ஆதாயம் கொண்டுவரும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.
கணவன் மனைவி உறவு நிலை சீராகும். குரு, சனி, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். முன்பின் தெரியாதவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அவர்களால் ஏமாற்றப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. கண், வலது காது, வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் ஓரளவு நலம் புரிவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். நண்பர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். மக்களால் அனுகூலம் உண்டாகும். குடும்ப நலம் திருப்தி தரும். சுப காரியங்கள் நிகழும். மகப்பேறு பாக்கியம் சிலருக்குக் கிட்டும். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இனங்கள் லாபம் தரும். செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். ஸ்பெகுலேஷன் துறைகள் லாபம் தரும். தர்ம குணம் வெளிப்படும். எதிரிகள் அடங்குவார்கள். பிரச்சினைகள் எளிதில் தீரும். பேச்சில் திறமையும் இனிமையும் வெளிப்படும். சனி 4-லும், ராகு ஜன்ம ராசியிலும் கேது 7-லும் உலவுவதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்பட்டு விலகும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. திறமைக்கும் உழைப்புக்கும் உரியப் பயன் கிடைத்துவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.
மாதர்களது நோக்கம் நிறைவேறும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்கள் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். சூரியன், புதன், ராகு ஆகியோர் 12-ல் இருப்பதால் பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் உண்டாகும். அரசுப்பணிகளில் அதிக கவனம் தேவை. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் தடைப்படும். பயணம் சார்ந்த இனங்களில் எச்சரிக்கை தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. நண்பர்கள், உறவினர்களாலும் தந்தையாலும் சங்கடங்கள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். சுபச் செலவுகள் செய்ய வேண்டிவரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். நல்ல தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு கூடும்.
எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத்துறைகள் லாபம் தரும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் ஏற்படும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேர வழிபிறக்கும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மதிப்பு உயரும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் இருப்பதால் மக்களால் மன அமைதி குறையும். செலவுகளும் ஏற்படும். மறதியால் அவதிப்பட வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்குப் பின்வாங்காமல் அயராது பாடுபடுபவர்களுக்கு வருவாய் கூடும். அலைச்சல் சற்று அதிகரிக்கவே செய்யும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். அதிர்ஷ்ட இனங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம்.
உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். மக்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் சிலருக்குக் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைஞர்கள் முன்னணிக்கு உயருவார்கள். சிலருக்கு மறுமணம் ஆக வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். தாய் நலனில் கவனம் தேவை.
உங்கள் ஜன்ம ராசிக்கு 3-ல் கேது உலவுவது நல்லது. சூரியனும் புதனும் 9-ல் இருப்பதும் ஓரளவு நலம் தரும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ஆம் இடங்களைப் பார்ப்பது நல்லது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். 10-ஆம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும்.
முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். தெய்வப்பணிகளிலும், தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். ஆன்மிக, அறநிலையப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். தந்தையால் ஓரிரு நன்மைகள் உண்டாகும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் அளவோடு உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 11, 14 (காலை).
திசைகள்: வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 7.
பரிகாரம்: ஏழை, எளியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி செய்வது நல்லது. சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடவும்.
மகரம்
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 12-ஆமிடம் மாறுவது குறை. ஜன்ம ராசியை குருவும், சனியும் பார்ப்பதால் உடல்நலம் சீராக இருந்துவரும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் செழிப்புக் கூடும்.
முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். நல்லவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். 2-ல் கேதுவும், 8-ல் சூரியனும் ராகுவும் உலவுவதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். கண், மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். என்றாலும் சமாளிப்பீர்கள். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை. 9-ஆம் தேதி முதல் சொத்துக்கள் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களாலும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். கெட்டவர்களின் தொடர்பு கூடாது. விளையாட்டு, விநோதங்களில் ஈடுபடும்போதும் பயணத்தின்போதும் பாதுகாப்பு தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 13, 14 (காலை).
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.
கும்பம்
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 11-ஆமிடம் மாறுவது வரவேற்கத்தக்கது. மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். எதிரிகள் அடங்குவார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் அனுகூலம் உண்டாகும். கலைஞர்கள் அளவோடு நலம் பெறுவார்கள். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் சூரியனும் புதனும் ராகுவும், 8-ல் குருவும் உலவுவதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. வாழ்க்கைத்துணை நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவை. கூட்டாளிகளிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும், ஆன்மிகவாதிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். செலவுகளைக் கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, நீலம்.
எண்கள்: 6, 8, 9 .
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய்தீபம் ஏற்றி வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கும் வேதம் பயில்பவர்களுக்கும் உதவி செய்வது நல்லது.
மீனம்
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 9-ஆம் தேதி முதல் செவ்வாய் 10-ஆமிடம் மாறுவது விசேடம் ஆகும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும்.
பொறியியல், சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பொருளாதார நிலை உயரும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடங்கள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பங்குதாரர்களால் தொல்லைகள் உண்டாகும். என்றாலும் குரு பலத்தால் சமாளிப்பீர்கள். வாரப் பின்பகுதியில் மக்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 11, 14 (காலை).
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு .
எண்கள்: 1, 3, 4, 5, 9.
பரிகாரம்: ஸ்ரீலட்சுமி, கணபதி வழிபாடு நலம் சேர்க்கும். ஏழைப் பெண்களுக்கு நல்லுதவி செய்வது நல்லது.
2016 செப்டம்பர் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2016 September Madha Rasipalan
வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்படும் மேஷ ராசியினரே இந்த மாதம் மறைந்திருக்கும் ராசிநாதன் செவ்வாய், குரு மூலம் வீண்குழப்பம் ஏற்படும். எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. பணவரத்து இருந்த போதிலும், எதிர்பாராத செலவும் வந்து சேரும். அடுத்தவர்களுக்காக உதவி செய்வது மற்றும் அவர்களுக்காக பரிந்து பேசுவது போன்றவற்றை செய்யும் போது கவனம் தேவை. இல்லையெனில் வீணான அவச்சொல் வாங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். வியாபாரம் தொடர்பான சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது அவை போய் சேர்ந்தனவா என்று கண்காணிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. வேலை தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்ப்பதும் நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே சிறு பூசல்கள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளிடம் நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு எதைப் பற்றியும் அதிகம் யோசித்து மனதை குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். வரவும் செலவும் சரியாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியை அதிகம் கவலைப்படாமல் பாடங்களை நன்கு படிப்பது நல்லது.
அஸ்வினி:
ஒரு குறிக்கோளை மனதில் வைத்து துணிவுடன் செயலாற்றுவீர்கள். உங்கள் பேச்சு திறமை அதிகரித்து அதனால் பல காரியங்கள் சிறப்பாக நடந்துமுடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் அவர்களால் உதவி ஆகியவையும் கிடைக்கலாம். நீங்கள் செய்யும் காரியங்களுக்கு உதவுவதற்காக யாராவது ஒருவர் துணை நிற்பார். பகைகள் விலகும்.
பரணி:
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்ய எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தொல்லை தராது. போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள். உழைப்புக்கு பலன் கிடைக்கும். உங்கள் மீதான மதிப்பு உயரும்.சக தொழிலாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத செலவு இருக்கும்.
கார்த்திகை 1ம் பாதம்:
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள், எதிர்ப்புகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் உங்களுக்கு பெருமை உண்டாகும். பெண்கள் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும். தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து கந்தர்சஷ்டி கவசம் படித்து முருகனை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 7 – 8
அதிர்ஷ்ட எண்கள்: 22 – 23
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி
எந்த ஒரு காரியத்திலும் அனுபவ அறிவைக் கொண்டு திறம்பட செயலாற்றும் ரிஷப ராசியினரே இந்த மாதம் ராசிக்கு சுகஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் ராசிநாதன் சுக்கிரனால் பணவரத்து திருப்தி தரும். ஆனால் உங்களுக்கு நன்மை செய்கிறேன் என்று கூறிக் கொண்டு உங்களை சுற்றி வருபவர்களால் செலவு உண்டாகும் கவனம் தேவை. திடீர் கோபம் ஏற்பட்டு அதனால் அடுத்தவர்களிடம் சண்டை உண்டாக நேரலாம். எனவே மிகவும் நிதானமாக இருப்பது நல்லது. வீண் பேச்சை குறைப்பது நன்மை தரும். அடுத்தவருக்கு ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களை மற்றவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதோ அல்லது அதைப் பற்றி விவாதிப்பதையோ தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களது செய்கைகள் உங்களது கோபத்தை தூண்டும் படியாக இருக்கலாம். நிதானத்தை கடைபிடிப்பது வீண் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கைத் துணை ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
பெண்களுக்கு வீண் பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் ஈடுபடுவது வெற்றியை தரும். மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதமும் தராமல் இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு நட்பு வட்டத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசி பழகுவது நல்லது. பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
ரோகிணி:
எடுத்த காரியத்தை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள். வாழ்க்கைக்கு தேவையான புதிய வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய ஆடை அணிகலன்கள் – ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு, மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். எடுக்கும் காரியம் சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.
மிருகசிரீஷம் 1, 2, பாதம்:
தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்தது இனி சீராகும். ஆனால் பழைய பாக்கிகளை வசூலிப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். அதே நேரத்தில் பணிகளை செய்து முடிக்க தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும். தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பது நன்மை தரும்.
பரிகாரம்: பவுர்ணமியில் மகாலட்சுமியை அர்ச்சனை செய்து வணங்க எல்லா செல்வங்களும் சேரும். கடன் பிரச்சனை தீரும்.
எதையும் ஆராய்ந்து பார்த்து அதில் இருக்கும் சாதகபாதகங்களை தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படும் மிதுன ராசியினரே இந்த மாதம் ராசிக்கு சுகஸ்தானத்தில் ராசிநாதன் புதன் குருவுடன் இணைந்து சஞ்சாரம் செய்வது எந்த ஒரு காரியத்திலும் லாபம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் மூலம் நன்மை உண்டாகும். எதை விரும்பினாலும் அது கிடைக்க வழி தெரியும். தொலை தூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக வந்து சேரும்.
தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். பணியாளர்கள் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். தொழில் விரிவாக்கம் செய்யும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பணவரத்து கிடைக்க பெறுவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் அவ்வப்போது ஏதாவது சிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். உடல் ஆரோக்யம் அடையும் சொல்வன்மை அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் திறம்பட செய்து முடிப்பீர்கள். தொலை தூர தகவல்கள் நல்ல தகவலாக வரும். பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெறும்.
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். எடுத்த காரியம் நல்லபடியாக முடிய வேண்டும் என்ற மனக்கவலை ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
திருவாதிரை:
உடனிருப்பவர்களை ஆலோசித்து காரியங்களை முன்னெடுப்பது உங்கள் வெற்றிக்குத் தடை வராமல் காக்கும். அரசியல் துறையினருக்கு சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். மேலிடத்திற்கும் உங்களுக்கும் தேவையற்ற வாக்குவாதம் வரலாம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் தீரும். ஆசிரியர்களின் ஆலோசனை கூடுதல் மதிப்பெண் பெற உதவும். வாழ்வில் வளம் பெறும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். தொலை நோக்கு சிந்தனையுடன் புதிய கருத்துக்களுக்கு மதிப்பளிப்பீர்கள். நீங்கள் எடுத்த காரியத்தை நிதானமாக செய்து முடிப்பீர்கள். எதையும் சாதிக்கும் திறமை உண்டாகும்.
பரிகாரம்: வியாழக்கிழமையில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனோ தைரியம் கூடும்.
எந்த ஒரு செயலையும் முன்கூட்டியே திட்டமிட்டு செய்து எதிரிகளை அசத்தும் கடக ராசியினரே இந்த மாதம் ராசிக்கு தனஸ்தானத்தில் தனாதிபதி சூரியன் ஆட்சியாக இருப்பதால் வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும். செய்யும் காரியத்தை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து முடித்து மற்றவர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு உங்கள் செல்வாக்கை கண்டு பொறாமை உண்டாகலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். காரிய தடைகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் வேகம் பிடிக்கும். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலைப் பளு இருந்தாலும் எல்லா பணிகளையும் திறம்பட செய்து முடிப்பார்கள். பணவரத்து திருப்தி தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளால் பெருமை சேரும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.
பெண்களுக்கு காரிய தடைகள் நீங்கி எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு படிக்காமல் விட்ட பாடங்களை படிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள்.
புனர்பூசம் 4ம் பாதம்:
வெளியில் தங்கும் சூழல் ஏற்படும். எடுத்த காரியத்தை செய்யும் போது எது சரி, எது தவறு என்று தடுமாற்றம் ஏற்பட்டாலும் திறமையால் அதனை செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். நிதி உதவி கிடைக்கும். வாடிக்கையாளர் மத்தியில் மதிப்பு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சம்பள உயர்வும் வரலாம்.
பூசம்:
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பெண்களுக்கு மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை தரும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும்.
ஆயில்யம்:
நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் மக்கள் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட மனக்குழப்பம் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும்.
எதிரியின் நிலை அறிந்து அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய சிம்ம ராசியினரே இந்த மாதம் புதன் சஞ்சாரம் ராசிக்கு 9ல் இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆராய்ந்து முடிவு எடுப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகலாம். முயற்சிகளில் உடனடியாக பலன் காண்பது அரிது. எந்த ஒரு வேலைக்கும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். ராசியைப் பார்க்கும் சனியின் பார்வையால் வாகனங்களில் செல்லும் போதும் ஆயுதங்களைக் கையாளும் போதும் கவனம் தேவை. சகோதரர்கள் வழியில் ஏதேனும் பிரச்சனை வரலாம்.
தொழில் வியாபாரம் குறிப்பாக விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் குறைவான லாபம் வரக் காண்பார்கள். தொழில் வியாபரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் கோபம் தூண்டக்கூடிய வகையில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதும் நன்மை தரும்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலைக்காகவும் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். பயணம் செய்யும் போது கவனம் தேவை.
மாணவர்களுக்கு எதிர்கால கல்வியை பற்றி சிந்தனை மேலோங்கும். கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது வெற்றிக்கு உதவும்.
மகம்:
சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். பணம் வருவது அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்புகள் வரும். வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். மற்றவர்களின் நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கவுரவம், அந்தஸ்து உயரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆர்டர்கள் வருவது திருப்திகரமாக இருக்கும்.
பூரம்:
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே அன்பான நிலை காணப்படும். பிள்ளைகளின் அறிவு திறமை வெளிப்படும். பெண்கள் அடுத்தவர்கள் பிரச்சனையை தீர்த்து வைப்பீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தரும். பொறுப்புகள் கூடும்.
உத்திரம் 1ம் பாதம்:
சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது உங்களுக்கு எதிர்காலத்தில் ஏற்பட இருக்கும் பிரச்சனைகளை தவிர்க்க வழிவகை செய்யும். அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உங்களிடம் உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப் படுத்தாதீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் திருப்தி உண்டாகும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடலாம்.
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 16 – 17
அதிர்ஷ்ட எண்கள்: 1 – 2
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: ஞாயிறு, வெள்ளி
மிக எளிதில் எதிலும் உயர்ந்த நிலைக்கு வரக்கூடிய திறமை மிகுந்த கன்னி ராசியினரே இந்த மாதம் ராசியாதிபதி புதன் குருவுடன் இணைந்து சஞ்சாரம் செய்வது காரியங்கள் வெற்றியை தரும். பணவரத்து வழக்கத்தை விட அதிகரிக்கும். ஆனால் செலவும் அதற்கு ஏற்றார் போல் இருக்கும். மற்றவர்களது உதவியும் கிடைக்கும். சாதூர்யமாக பேசி எதிலும் வெற்றி காண்பீர்கள். அனுபவப் பூர்வமான அறிவுத்திறன் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். பங்கு மார்க்கெட் லாபம் ஓரளவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செயல்திறன் அதிகரிக்கும். பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் வந்து சேரும்.
குடும்பத்தில் மனம் மகிழும்படியான நிகழ்ச்சி நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். சிலர் அதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்யம் உண்டாகும்.
பெண்களுக்கு சாதூர்யமாக பேசி எல்லா காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து கூடும். பொறுப்புகள் அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். சகமாணவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4 பாதம்:
தானும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், தன்னுடன் பழகுபவர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நிதானமாக பேசுவது காரிய வெற்றிக்கு உதவும். மற்றவர்களின் காரியங்களில் ஈடுபடும் போது கவனம் தேவை. உழைப்பு வீணாகலாம். எனவே திட்டமிட்டு எதையும் செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களை அனுசரித்து நிதானமாக பேசுவது நன்மை தரும்.
அஸ்தம்:
கடனுக்கு பொருள்களை அனுப்பும் போது எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகளுடன் கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் அனுசரித்து செல்வது நல்லது.
சித்திரை 1, 2, பாதம்:
திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். கோபத்தை குறைப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு மிகவும் நன்மை பயக்கும் காலமாக இது அமையும். தொடர் பணிகளால் களைப்படைவீர்கள். வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு உற்சாகமான காலமாக அமையும். கட்சிப் பணிகளுக்காக கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நேரத்தை வீணாக்காமல் உபயோகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம்.
பரிகாரம்: பெருமாளை வணங்க கடன் சுமை குறையும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
சொந்த முயற்சியில் முன்னுக்கு வரக்கூடிய ஆற்றல் உடைய துலா ராசியினரே இந்த மாதம் ராசிக்கு 11ல் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் திடீர் கோபம் உண்டாகும். விருப்பத்திற்கு மாறாக எதுவும் நடக்கும். ஆனால் பகைகளில் வெற்றி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்கள் சாதகமான பலன் தரலாம்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் மன நிறைவு காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலைச்சலுக்கு பிறகு கடினமான காரியம் கூட கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். சக ஊழியர்கள், தொழில் கூட்டாளிகள் விஷயங்களில் கவனமாக செயல்படுவது நல்லது.
குடும்பத்தில் வீண் பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கை துணையின் செயல்கள் உங்களுக்கு அதிருப்தி ஏற்படும் விதத்தில் இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பது ஆறுதலை தரும்.
பெண்களுக்கு கோபகத்தை குறைத்துக் கொள்வது நன்மை தரும். எதிர்ப்புகள் விலகும். பயணங்கள் சாதகமான பலன் தரும்.
மாணவர்களுக்கு சக மாணவர்களிடமும் நண்பர்களிடமும் கோபப்படாமல் சாதுரி யமாக பேசுவது நன்மை தரும். கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதம்:
மாணவர்கள் சகமாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மனதில் கொண்ட குறிக்கோளை அடையும் வரை சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். கெட்ட கனவுகள் உண்டாகலாம். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படலாம்.
சுவாதி:
எதிர்பார்த்த பணம் கைக்கு வர தாமதமாகும் அதனால் திடீர் பண நெருக்கடி வரலாம். இடம் பொருள் அறியாமல் பேசுவதால் அடுத்தவர்களிடம் மனஸ்தாபம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும். பணவசூல் தாமதப்படலாம். வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற பயணம் செல்ல நேரலாம். கூடுதல் பொறுப்புகள் அடுத்தவர் பணியை செய்வது போன்றவையும் வந்து சேரும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தருவதாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய கவலை உண்டாகலாம். எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். கலைத்துறையினருக்கு சோதனைகள் மிகுந்த காலமாக இருக்கும். வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானை தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். பணவரத்து கூடும்.
உழைப்பு, செயல்திறன், பேச்சு ஆகியவற்றில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் விருச்சிக ராசியினரே இந்த மாதம் ராசியில் சஞ்சாரம் செய்த ராசிநாதன் செவ்வாய் தனஸ்தானத்திற்கு மாறியிருக்கிறார். இதனால் பலவகையான யோகம் வந்து சேரும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். எங்கும் எல்லோரிடத்திலும் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பலரும் உங்களை தேடி வருவார்கள். அடுத்தவர்களுக்காக உதவிகள் செய்வதில் உற்சாகம் உண்டாகும்.
தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். தொழில், வியாபாரம் தொடர்பாக துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் வெற்றியை தரும். பணியாட்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். மேல் அதிகாரிகள் மூலம் நன்மை கிடைக்க பெறுவீர்கள்.
குடும்பத்தில் சந்தோஷமும் மன நிம்மதியும் இருக்கும். உறவினர்கள், நண்பர்களின் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாமல் நிதானமாக பேசுவது நல்லது. வழக்கு விவகாரங்களை தள்ளிப்போடுவதும் நன்மை தரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு துணிச்சலுடன் எதையும் செய்து வெற்றி பெறுவீர்கள். உங்கள் உதவியை நாடி பலரும் வருவார்கள். சந்தோஷமான மன நிலை இருக்கும்.
மாணவர்களுக்கு போட்டி, பந்தயங்க ளில் துணிச்சலுடன் ஈடுபட்டு சாதகமான நிலை காண்பீர்கள். ஊக்கத்துடன் படிப்பது நல்லது.
விசாகம் 4ம் பாதம்:
சிறு பிரச்சனையாக இருந்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாக கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மிகவும் பொறுமையாக செயல்பட வேண்டிய காலகட்டமிது. மாணவர்கள் எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.
அனுஷம்:
எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
கேட்டை:
தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் தீரும். மனக்கவலை நீங்கும்.
பிறர் மதிக்கும்படி நடந்துகொள்ளும் தனுசு ராசியினரே நீங்கள் சுயமாக சிந்தித்து செயலாற்றும் திறமை பெற்றவர். இந்த மாதம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் சஞ்சாரம் செய்ய, ராசிக்கு செவ்வாய் பெயர்ச்சியாகி இருக்கிறார். பணவரத்து அதிகரிக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க காலதாமதம் ஆகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகவும் பாடுபட வேண்டி இருக்கும். எனவே யாருக்கும் எந்த வாக்குறுதியையும் அளிக்கும் முன் யோசிப்பது நல்லது. அடுத்தவருக்கு செய்யும் உதவிகள் சில நேரத்தில் உங்களுக்கு எதிராகவே மாறலாம் கவனமாக செயல்படுவது நல்லது.
தொழில் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் பழைய பாக்கிகள் வசூலாவது ஆறுதலை தரும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமாக தங்களது பணிகளை கவனிப்பது நல்லது. மேல் அதிகாரிகள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மன மகிழ்ச்சி ஏற்பட அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு எதிலும் காலதாமதம் உண்டாகும். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படலாம்.
மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் மெத்தனம் காட்டாமல் இருப்பது நல்லது.
மூலம்
தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் தானே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
பூராடம்:
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். கொடுத்த வேலையை சரியான நேரத்தில் செய்து பெயர் எடுப்பீர்கள். பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். ஆனாலும் சுபச்செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும்.
உத்திராடம் 1ம் பாதம்
தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமையில் வணங்கி வர மன அமைதி உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும்.
சொந்த உழைப்பினால் உயரும் திறமை உடைய மகர ராசியினரே உங்களுக்கு பிறரின் உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் ராசிக்கு ஒன்பதில் குரு சஞ்சாரம் செய்வதன் மூலம் ஆக்கபூர்வமான யோசனைகள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும்.
தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவுபடுத்த ஆலோசனைகளை மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிப்படும். அதனால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் அதிகப்படி வருமானம் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான உறவு காணப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். தாய், தந்தையரின் உடல் நிலையில் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த விஷயத்திலும் தெளிவான முடிவை எடுப்பீர்கள். புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் உண்டாகும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். அறிவியல், கணித பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. ஆரோக்கியம் சம்பந்தமான குறைபாடு வரலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.
திருவோணம்:
தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினர் கடுமையான உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.
அவிட்டம் 1,2 பாதம்
எப்போதும் உற்சாகமாக காணப்படுவீர்கள். சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும்.
பரிகாரம்: துர்கை அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமையில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1 – 27 – 28 – 29
அதிர்ஷ்ட எண்கள்: 12 – 13 – 14
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: வியாழன், வெள்ளி; தேய்பிறை: வியாழன், வெள்ளி
எதிர்காலத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு செயலாற்றும் கும்ப ராசியினரே இந்த மாதம் அடுத்தவர்களுக்கு உதவப் போய் அதனால் அவதிப்பட்ட நேரலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பணிபுரியும் இடத்தில் ஆயுதங்களை கையாளும்போதும் கவனம் தேவை. ராசிக்கு எட்டாமிடத்தில் புதன் குரு சஞ்சாரம் இருப்பதால் செலவு அதிகரிக்கும். மனதில் இருந்த உற்சாகம் குறையும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் இருப்பவர் கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம்.
குடும்பத்தில் திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. சகோதரர்களுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எச்சரிக்கை தேவை.
பெண்களுக்கு அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்யும்போது கவனமாக இருப்பது நல்லது. செலவு அதிகரிக்கும். வீண் கவலை உண்டாகலாம்.
மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
அவிட்டம் 3, 4 பாதம்:
தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள்.
சதயம்:
வீடு, வாகனம் போன்றவற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் சாதகமாக நடந்து முடியும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். கலைத்துறையினருக்கு மிகவும் அனுகூலமான காலமிது. வாய்ப்புகள் குவியும். புத்திசாதுர்யத்துடன் கையாள்வதால் லாபமான காலமாக அமையக்கூடிய வாய்ப்பு உண்டு.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்
அரசியல்வாதிகளுக்கு இனிமையான செய்திகள் தேடி வரும். நீண்ட நாளாக எதிர்பார்த்த உதவி கிடைக்கப்பெறுவீர்கள். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும் வாய்ப்புகள் இருப்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் சகமாணவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். கல்வியில் ஆர்வம் உண்டாகும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் எள் சாதம் சனி பகவானுக்கு நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க கஷ்டங்கள் குறையும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.
அடுத்தவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதிக்கும் திறமை உடைய மீன ராசியினரே நீங்கள் பொது வாழ்க்கையில் புகழ்பெறுவீர்கள். இந்த மாதம் சுபச் செலவுகள் கூடும். எதையும் எதிர்த்து நிற்பதை தவிர்த்து அனுசரித்து செல்வது முன்னேற்றத்திற்கு உதவும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டி இருக்கும். சொத்துக்களை வாங்கும்போதும் விற்கும்போதும் கவனமாக இருப்பது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். ஆடை, ஆபரணம் சேரும்.
தொழில், வியாபாரம் சற்று நிதானமாக நடக்கும் எதிர்பார்த்த லாபம் இருந்தாலும் தொழில் தொடர்பான செலவும் கூடும். சரக்குகளை வாங்கும்போது கவனித்து வாங்குவதும் பாதுகாப்பாக வைப்பதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக பணியாற்ற வேண்டி இருக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபப்படாமல் நிதானமாக பேசி அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர் வகையில் உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள்.
பெண்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். நிதானமாக பேசி மற்றவர்களிடம் அனுசரித்து செல்வது காரிய வெற்றிக்கு உதவும்.
மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான உபகரணங்கள், புத்தகங்கள் வாங்குவீர்கள். கூடுதலாக நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
பூரட்டாதி 4ம் பாதம்:
எல்லா வசதிகளும் உண்டாகும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெறுவீர்கள். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் ஏற்படலாம். எதிர்பாராத காரிய தடைகள் வரும். வாகனங்களில் செல்லும் போது மிகவும் கவனம் தேவை.
உத்திரட்டாதி:
தொழில் வியாபாரத்தில் சுமாரான போக்கு காணப்படும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செயலாற்றுவதன் மூலம் நன்மை அடைவார்கள். அலுவலக பணிகளில் தாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருக்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை காணப்படும். பிள்ளைகளின் கல்வி அவர்களது செயல்களில் கவனம் செலுத்துவீர்கள்.
ரேவதி:
பெண்களுக்கு எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி அடைவீர்கள். கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.
பரிகாரம்: குல தெய்வத்தை தீபம் ஏற்றி வணங்கி வருவது குழப்பத்தை போக்கும். செல்வம் செல்வம் செல்வாக்கு உயரச் செய்யும். தடை, தாமதம் நீங்கும்.
# அயோடின் குறைபாடு ஏற்படுத்துவது
a. நீரிழிவு
b. ஸ்கர்வி
c. ரிக்கட்ஸ் d. முன் கழுத்துக் கழலை (விடை)
# புகையிலையில் உள்ள நச்சுத் தன்மையுள்ள பொருள்
a. மார்பீன்
b. ஆஸ்பிரின் c. நிகோட்டின் (விடை)
d. ரெசர்பின்
# சிறுநீரில் வெளியேற்றப்படும் பொருள்.
a. சர்க்கரைப் பொருள் b. கிரியேடின் (விடை)
c. புரதப் பொருள்
d. கொழுப்புப் பொருள்
# நாடாப்புழு யாரிடம் அதிகமாகக் காணப்படும்?
a. மீன் உண்பவர்களிடம் b. பன்றி மாமிசம் உண்பவர்களிடம் (விடை)
c. மாமிசம் உண்பவர்களிடம்
d. மாட்டுக் கறி உண்பவர்களிடம்
# எய்ட்ஸ் வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம்
a. எலி
b. முயல்
c. குதிரை d. குரங்கு (விடை)
# ஹர்கோவிந் குரானா என்பவர் கீழ்க்கண்டவற்றுள் எந்த கண்டுபிடிப்பிற்காக கௌரவிக்கப்பட்டார்?
a. புரத உற்பத்தி
b. ஜீன் உற்பத்தி
c. நைட்ரஜன் பேஸ் உற்பத்தி d. இவற்றுள் எதுவுமில்லை (விடை)
# நைட்ரஜன் அடங்கிய ஒரு பொதுவான் உரம் a. யூரியா (விடை)
b. சூப்பர் பாஸ்பேட்
c. ட்ரிபின் பாஸ்பேட் d. பொட்டாசியம் குளோரைடு
# கீழ்க்கண்டவற்றுல் எது ஓர் உலோகப் போலி?
a. தாமிரம் b. ஆர்சனிக் (விடை)
c. அலுமினியம்
d. தங்கம்
# ‘மாலைக்கண் நோய்’ ஏற்ப்பட எந்த வைட்டமின் சத்து குறைவு காரணம்? a. வைட்டமின் A (விடை)
b. வைட்டமின் B
c. வைட்டமின் K
d. வைட்டமின் E
# பாதரசம் வெப்பமானிகளில் பயன்படுத்தப்படுவதற்க்கான காரணம்
a. கணமானது
b. திரவம் c. சீராக விரிவடையும் (விடை)
d. உலோகம்
# சோடியம் குளோரைடு என்பது கீழ்க்கண்டவற்றில் எந்தனுடைய வேதி பெயர்? a. சாதாரண உப்பு (விடை)
b. மிருக கரி
c. துரு
d. சுண்ணாம்புக் கல்
# பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
a. புரத சத்து
b. கொழுப்பு சத்து c. வைட்டமின் கள் (விடை)
d. மாவு சத்து
# மின்சார பல்புகளில் நிரப்பப்பட்டுள்ள வாயு
a. ஆக்ஸிஜன்
b. கார்பன்டை ஆக்ஸைடு c. ஆர்கான் (விடை)
d. நைட்ரஜன்
# தீப்பெட்டியின் பக்கங்களில் உள்ள பொருள் a. சிவப்பு பாஸ்பரஸ் (விடை)
b. வெண் பாஸ்பரஸ்
c. பாஸ்பரஸ் பென்டாக்ஸைடு
d. இவற்றுள் எதுவுமில்லை
இந்த வார ராசிபலன் 01-09-2016 முதல் 07-09-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 11-ல் கேது உலவுவது சிறப்பாகும். 5-ல் சூரியன் இருந்தாலும்தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. நிர்வாகத்துறையினருக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் திறமைக்குரிய பயன் கிடைத்துவரும். மக்களாலும் தந்தையாலும் நலம் உண்டாகும். எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினருக்கு வருவாய் வரும். செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சகிப்புத்தன்மை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். கூட்டாளிகளால் அனுகூலமிராது.
அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 1, 4, 5.
திசைகள்: கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 1, 7.
பரிகாரம்: குரு, சுக்கிரன் ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 5-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. புதிய பொருட்களும் சொத்துகளும் சேரும். நண்பர்கள் உதவுவார்கள். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். நல்லவர்கள் நலம் பல புரிவார்கள். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மந்திர சாஸ்திரங்களில் நாட்டம் அதிகரிக்கும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மக்களால் அனுகூலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். மனமகிழ்ச்சி பெருகும். அதிர்ஷ்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். கலைஞர்கள், உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள் நிலை உயரப் பெறுவார்கள். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும்.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்:3, 5, 6, 7
பரிகாரம்:ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியனும் செவ்வாயும் நலம் புரிவார்கள். செல்வாக்கும் மதிப்பும் உயரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறையினருக்கு வருவாய் கிடைத்துவரும். கலைத் துறையினருக்குத் திறமைக்குரிய பயன் கிடைக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். தகவல் தொடர்பு லாபம் தரும். குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்னைகள் ஏற்படும். ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் நலம் புரிவார்கள். அலைச்சல் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடுகூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். முக வசீகரம் கூடும். கலைத் துறை ஊக்கம் தரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் வருவாய் வந்து சேரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், சட்ட வல்லுனர்கள், மேடைப் பேச்சாளர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும்.
உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் உலவுவதால் தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மனத்தில் தெளிவு பிறக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். இடமாற்றம், நிலைமாற்றம் ஆகியவை உண்டாகும். ராசிக்கு 12-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அரசுப் பணிகளில் விழிப்புத் தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். வார முன்பகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த எண்ணம் இனிதே நிறைவேறும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற நவீன விஞ்ஞானத் துறைகள் லாபம் தரும். காடு, மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வார நடுப்பகுதியில் சுபச்செலவுகள் இருக்கும். வாழ்க்கை வசதிகள் பெருகும். வாரப் பின்பகுதியில் தொழில்ரீதியாக நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான போக்கு தென்படும். 2-ல் செவ்வாயும் சனியும் 5-ல் கேதுவும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். அரசால் உதவி கிடைக்கும். நிர்வாகத் திறமை வெளிப்படும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர், நவீன விஞ்ஞானத் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள், வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத் துணைவராலும் மக்களாலும் தந்தையாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
உங்கள் ராசிக்கு 3-ல் கேது உலவுவது நல்லது. 9-ல் இருக்கும் சூரியனும் நலம் புரிவார். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். செய்தொழிலில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் நிலைமாற்றமும் சிலருக்கு ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். நெருங்கிய நண்பர்கள் ஓரளவு உதவுவார்கள். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்னைகள் சூழும். இயந்திரப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்கள், விளையாட்டு வீரர்கள், பயணம் சார்ந்தவர்களுக்கு சங்கடங்கள் ஏற்படும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் தொல்லைகள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:செப்டம்பர் 1, 4, 5.
திசைகள்:வடமேற்கு, கிழக்கு.
நிறங்கள்:மெரூன், ஆரஞ்சு.
எண்கள்:1, 7.
பரிகாரம்:குரு, சுக்கிரனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் குருவும் சுக்கிரனும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். வியாபாரம் பெருகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைஞர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். மக்களாலும் பேரன், பேத்திகளாலும் அனுகூலம் உண்டாகும். செய்தொழில் விருத்தி அடையும். புதிய முயற்சிகள் கைகூடும். 8-ல் சூரியன், ராகு ஆகியோர் உலவுவதால் உஷ்ணாதிக்கம் கூடும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்பு தேவை.
பரிகாரம்:சூரியன், ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். செய்தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். இயந்திரங்கள், எரிபொருட்கள், கட்டிடப் பொருட்கள், தாதுப் பொருட்கள் ஆகியவை லாபம் தரும். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்பு வீண்போகாது. கலைத் துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். 7-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரிடமும் தொழில் கூட்டாளிகளிடமும் பக்குவமாகப் பழகுவது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. குடும்ப நலனிலும் மக்கள் நலனிலும் அக்கறை தேவை. உத்தியோகஸ்தர்களும் ஆசிரியர்களும் பொறுப்புடன் காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காணலாம். முக்கியஸ்தர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். அரசாங்கப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் நலம் உண்டாகும். ஆராய்ச்சியாளர்களுக்கு மதிப்பு உயரும். மருத்துவம், இரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு கூடிவரும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் மக்களால் இடர்ப்பாடுகள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் ராகுவும், 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. நிர்வாகத் திறமையாலும் செயல்வேகத்தாலும் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கலைஞர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைத்துவரும். பயணம் பயன்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். தந்தை நலனில் அக்கறை தேவை. நண்பர்கள், உறவினர்களால் செலவுகள் ஏற்படும். மக்களுக்காக சுபச்செலவுகளை மேற்கொள்ள வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:செப்டம்பர் 1, 4, 5, 6.
திசைகள்:தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்:புகை நிறம், வெண்மை, இளநீலம், ஆரஞ்சு.
எண்கள்:1, 4, 6.
பரிகாரம்:திருமலை வேங்கடேசனை வழிபடவும்.
TNPSC Group 4 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?
10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா?
அரசுப் பணியில் சேர வேண்டும் என்பது இன்றைய இளைஞர்கள் பலரின் கனவு. சமூக அந்தஸ்து, பணி பாதுகாப்பு, நல்ல சம்பளம் போன்ற காரணங்கள் இளைஞர்களை அரசு வேலை நோக்கி ஈர்க்கின்றன. தமிழக அரசுப் பணிக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர்களும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அந்த வகையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் தற்போது காலியாகவுள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் வரித்தண்டலர் ஆகிய பல்வேறு விதமான பதவிகளில் 5,451 காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் வரும் நவம்பர் 6-ல் நடைபெற உள்ள குரூப்-4 தேர்வுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி வெளி யிட்டுள்ளது.
குரூப்-4 தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து தட் டச்சர் பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். அதிகபட்சமாக பொதுப் பிரிவினருக்கு 30, பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35 என வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்-2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்றாலும் கூட பெரும்பாலும் பிளஸ்-2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித் தகுதி உடையவர்களும் குரூப்-4 தேர் வுக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
இவ்வாண்டு 12 லட்சம் பேர்
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-4 தேர்வுக்கு 10 லட்சத்துக்கும் மேற் பட்டோர் விண்ணப்பித்தனர். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு ஏறத்தாழ 12 லட்சம் பேர் விண்ணப் பிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. காரணம், மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந்துரையின்பேரில் சம்பளம் உயர்த் தப்பட்டுள்ள நிலையில், விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் திருத்தியமைக்கப்பட இருக்கிறது. குரூப்-4 தேர்வுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே அரசு வேலை உறுதி. எனவேதான், குரூப்-4 தேர்வுக்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் முட்டி மோதுகிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 பணிகளுக்கான எழுத்துத் தேர்வு நவம்பர் 6-ம் தேதி தமிழகம் முழுவதும் ஏராளமான மையங்களில் நடைபெற இருக்கிறது. இதற்கு செப்டம்பர் 8-ம் தேதிக்குள் டிஎன் பிஎஸ்சி இணையதளத்தின் (tnpsc.gov.in) மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண். அப்ஜெக்டிவ் (கொள்குறி வகை) முறையில் 200 கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இருக்கும். ஒரு கேள்விக்கு 5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்.
பொது அறிவு பகுதியானது அனை வருக்கும் பொதுவானது. பொது தமிழ், பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை விண்ணப்பதாரர்கள் தேர்வுசெய்து கொள்ளலாம். பெரும்பாலான விண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வுசெய்கிறார்கள்.
போட்டித் தேர்வின் உத்திகள்
12 லட்சம் பேர் விண்ணப்பிப்பதால் போட்டி கடுமையானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. எனினும், இதில் 12 லட்சம் பேருமே உண்மையான போட்டியாளர்களாக இருக்க முடியாது. அரசு வேலை என்ற ஆசையில் நாமும் எழுதிப் பார்ப்போமே என விண்ணப்பிப்ப வர்களும், தேர்வுக்கான தயாரிப்பே இல்லாமல் எழுதுபவர்களும் இதில் பெரும்பான்மையினராக இருப்பர்.
டிஎன்பிஎஸ்சி நடத்தி வரும் போட்டித் தேர்வுகளுக்காக முழுமை யான தயாரிப்பில் உள்ளவர்கள் மத்தியில் தான் உண்மையான போட்டி இருக்கும். எனவே, எண்ணிக்கையை கண்டு அஞ்ச வேண்டியதில்லை. இன்று முதல், இருக்கும் காலத்தை துல்லியமாக திட்டமிட்டு பயன் படுத்தி தயாரிப்பில் ஈடுபட்டாலே வெற்றி வசப்படும். முதல் கட்டமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தின் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான தமிழ் அல்லது ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். 10-ம் வகுப்பு தரத்தில்தான் தேர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எனினும், வெற்றிக்கான மதிப்பெண்ணை தரும் கேள்விகள் சில நேரங்களில் 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடங்களில் இருந்தும் கேட்கப்படலாம் என்பதால் அடுத்த கட்டமாக மேல்நிலைப் பள்ளி பாடங்களை படிப்பது கூடுதல் சிறப்பு.
நாட்டு நடப்புகள், கணிதம், திறனறிவு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை இனிவரும் காலங்களில் துறைசார் வல்லுநர்கள் விளக்குவார்கள். அவர் களின் வழிகாட்டுதலின்படி தயாரிப்பில் ஈடுபட்டாலே போதும். எனினும், தயாரிப் பின் தொடக்கம் என்பது மாநில கல்வி வாரியத்தின் பாடத்திட்டங்களை படிப் பதில் இருந்து தொடங்குவதே நலம்.
மாநில நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் தலங்கள், முக்கிய இடங்கள் என தமிழ்நாட்டை மையமாக வைத்து அதிக கேள்விகள் கேட்கப்படும் என்ப தால் தமிழகம் குறித்த பொது அறிவு புத்தகத்தை வாங்கி படிப்பது அவசியம்.
கணிதம் மற்றும் திறனறிவு பகுதியில் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் கேள்விகள் கேட்கப்படும். கணித மாதிரி வினா – விடைகளை தொடர்ச்சியாக முயன்று பார்ப்பது நேர மேலாண்மைக்கு உதவும்.
TNPSC Group IV 5 Year Question Paper Analysis
TNPSC GROUP 4 MATERIALS
AUDIO CURRENT AFFAIRS
TAMIL VIDEOS
MATHS VIDEOS
ONLINE Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
LATEST GOVERNMENT JOBS
The post TNPSC Group 4 10 லட்சம் பேர் போட்டிபோடும் தேர்வில் வெல்ல வேண்டுமா? appeared first on MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET.
Source: storiesintamil.in
# பென்சிலின் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
a. எட்வர்டு ஜென்னர்
b. ஜே.சி. போஸ் c. அலெக்சாண்டர் ஃப்ளெம்மிங் (விடை)
d. வில்லியம் ஹார்வி
# கண்ணாடி கரைக்கும் அமிலம்
a. நைட்ரிக் அமிலம்
b. கந்தக அமிலம் c. ஹைட்ரோபுளோரிக் அமிலம் (விடை)
d. ஹைபோகுளோரஸ் அமிலம்
# பண்டைய இந்தியா ரசவாதிகள் தங்கம் தயாரிக்கவும், சாகாத மருந்து தயாரிக்கவும் உபயோகித்தவை
a. இரும்பும் வெள்ளியும்
b. துத்தநாகமும் கந்தகமும் c. தங்கமும் பாதரசமும் (விடை)
d. பாதரசமும் கந்தகமும்
# ஈஸ்ட் கீழ்கண்டவற்றுள் எதனை உண்டாக்க பயன்படுகிறது.
a. ஆக்ஸிஜன்
b. குளுக்கோஸ் c. ஆல்கஹால் (விடை)
d. உப்பு
# பெரும்பாலன் பருப்பு வகை தாவரங்கள் உள்ள குடும்பம்.
a. யூபோர்பியேஸியி b. பேபேஸியி (விடை)
c. ஆஸ்டிரேஸியி
d. மியுஸேஸியி
# கீழ்கண்ட புரோட்டோஸூவாங்களில் எதற்க்கு தெளிவான வடிவம் உள்ளது?
a. அமீபா b. பாரமீஸியம் (விடை)
c. இவை இரண்டும்
d. இவற்றுள் எதுவுமில்லை
# பாக்டீரியாக்களின் வளர் ஊடகத்தில் பயன்படுத்தப்படுவது எது?
a. அயோடின் b. அகார்-அகார் (விடை)
c. சர்க்கரை
d. ஆல்கஹால்
# மலேரியா நோயை உண்டாக்குபவை
a. வைரஸ்கள்
b. பாக்டீரியா c. புரோட்டோசோவா (விடை)
d. பூஞ்சைகள்
# எளிய வகை நிலவாழ் தாவர வகையானது a. பிரையோபைட்டுகள் (விடை)
b. லைகன் கள்
c. ஆல்காக்கள்
# பாக்டீரியா பொதுவாக பகுப்படையும் வகை a. இரட்டை பகுப்பு (விடை)
b. ப்ல பகுப்பு
c. நீள் பகுப்பு
d. இவை அனைதும்
# அகார்-அகார் எதிலிருந்து தாயாரிக்கப்படுகிறது a. ஜெலிடியம் (விடை)
b. லாமினேரியா
c. எக்டோகார்பஸ்
d. பியூக்கஸ்
# நைட்ரஜன் நிலைநிருத்துதல் செய்பவை a. நீலப் பசும் பாசிகள் (விடை)
b. பசும் பாசிகள்
c. பழுப்பு நிற ஆல்கா
d. சிகப்பு ஆல்கா
# அடர்த்தி என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது. a. நிறை / பருமன் (விடை)
b. நிறை x பருமன்
c. பருமன் / நிறை
d. இவற்றுள் எதுவுமில்லை
இந்த வார ராசிபலன் 25-08-2016 முதல் 31-08-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவது குறை ஆகும். குடும்பநலம் கவனிப்பின்பேரில் சீராக இருந்துவரும். நல்ல தகவல் வந்து சேரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். கடல் சார்ந்த பொருட்கள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பிரச்சினைகள் சூழும். உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் தொல்லைகள் உண்டாகும். 26-ம் தேதி முதல் வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவைப்படும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 26-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அலுவலகப் பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும். மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். அலைச்சல் சற்றுக் கூடும் என்றாலும் அதற்கான பயன் கிடைக்கும். கெட்டவர்களின் தொடர்பை விலக்கி, நல்லவர்களின் நட்புறவை நாடிப் பெற்றால் நலம் கூடப் பெறலாம். வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும்.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு அர்ச்சனைகள் செய்யவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. வார முன்பகுதியில் செலவுகள் அதிகரிக்கவே செய்யும். இடமாற்றம் உண்டாகும். குடும்ப நலனில் கவனம் தேவைப்படும். வாரப் பின்பகுதியில் பண வரவு கூடும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 4-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களுக்கு லாபம் கூடும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். தந்தையால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் ஏற்படும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 29.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், கருஞ்சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 8, 9.
பரிகாரம்: மகா விஷ்ணுவை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியனும் செவ்வாயும் நலம் புரிவார்கள். வார முன்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் ஈடேற வழி பிறக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நிலை உயரும். ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். வாரப் பின்பகுதியில் ஜலப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். 2-ல் சூரியனும், ராகுவும், 3-ல் குருவும், 5-ல் சனியும், 8-ல் கேதுவும் உலவுவதால் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் ஏற்படும். மக்களால் மன அமைதி குறையும். தொலைதூரச் செய்திகள் மகிழ்ச்சி தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 29.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கும் துர்க்கைக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. குடும்பத்தில் குதூகலம் கூடும். முக வசீகரத்தாலும் இனிமையான, திறமையான பேச்சாலும் மற்றவர்களைக் கவருவீர்கள். பொருளாதார நிலை திருப்திகரமாக இருந்துவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் கிடைக்கும். செய்தொழில் வளர்ச்சி பெறும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். சொத்துகள் சேரும். சுப காரியங்கள் நிகழும். பெரியவர்களின் ஆதரவும் ஆசிகளும் கிடைக்கும். பிரார்த்தனைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பம் உருவாகும். அலைச்சலும் உழைப்பும் வீண்போகாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஆகஸ்ட் 27, 28 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 9.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகளின் வலு குறையும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துகள் மூலம் வருவாய் கிடைக்கும். திரவப் பொருட்கள் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மதிப்பு உயரும். மக்களால் எண்ணங்கள் ஈடேறும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் பிரச்னைகள் சூழும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திவருவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29.
திசைகள்: வடமேற்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும்.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் உலவுவது சிறப்பாகும். குரு, செவ்வாய், சனி ஆகிய முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. வார முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். முக்கியஸ்தர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். வியாபாரத்தில் வளர்ச்சி உண்டு. பயணத்தால் எண்ணம் ஈடேறும். கலைத் துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் சுபசெலவுகள் கூடும்.
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகும். நல்லவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். கூட்டுத்தொழில் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை வெளிப்படும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளால் ஆதாயம் கிடைக்கும். மருத்துவர்கள் நற்பெயர் பெறுவார்கள். வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை உருவாகும். பொருளாதார நிலை உயரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 29, 30, 31 (பிற்பகல்).
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குரு, செவ்வாய், சனி ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். எதிர்ப்புகள் இருக்கும். விழிப்புடன் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் சங்கடங்கள் சூழும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத் தெளிவும் நம்பிக்கையும் உண்டாகும். நல்லவர்களின் நட்புறவை வலுப்படுத்திக்கொண்டு அவர்களின் ஆலோசனைகளின்படி செயல்படுவது நல்லது. நல்லவர் அல்லாதவர்களை விட்டு விலகுவது அவசியமாகும். உடல் நலனில் கவனம் தேவைப்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 28 (பிற்பகல்), 31 (பிற்பகல்).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்கு அர்ச்சனைகள் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். பயணம் நலம் தரும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். வியாபாரம் பெருகும். கலைத் துறையினருக்கு நல்வாய்ப்புக்கள் கூடிவரும். புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு கூடும். உடன்பிறந்தவர்களால் காரியங்கள் நிறைவேறும். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29.
பரிகாரம்: நாக பூஜை செய்வது நல்லது. தந்தைக்கும் தந்தை வழி உறவினருக்கும் உதவி செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். 26-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். விவசாயிகள் வருவாய் கூடப் பெறுவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கூட்டாளிகளிடம் விழிப்புத் தேவை. குரு 8-ல் இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது அவசியமாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 27 (முற்பகல்), 28 (பிற்பகல்), 29, 30.
திசைகள்: தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, கருநீலம்.
எண்கள்: 8, 9 .
பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். மக்கள் நலம் சீராகும். பொருளாதார நிலை உயரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களில் அனுகூலமான திருப்பமும் வெற்றியும் கிடைக்கும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் நோக்கம் நிறைவேறப் பெறுவார்கள். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். ஊதிய உயர்வு பெற வாய்ப்பு கூடிவரும். பெரியவர்கள், தனவந்தர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். பயணத்தால் நலம் உண்டு. வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வாரப் பின்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 26, 28 (பிற்பகல்), 29.
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 5, 9
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவவும்
Bharat Ratna Award Winners List in India from 1954 till Date. :The Bharat Ratna is the highest civilian award of the Republic of India. Instituted in 1954, the award is conferred “in recognition of exceptional service/performance of the highest order”, without distinction of race, occupation, position, or sex.
Some Important Notes about Bharat Ratna Awards
First awarded was given to Sarvapalli Radhakrishnan, Sir C.V. Raman, and Chakravarti Rajagopalachari in the year of 1954.
Last Bharat Ratna was awarded to Atal Bihari Vajpayee & Madan Mohan Malaviya in the year of 2014.
Mother Teresa was the first naturalized Indian citizen of Bharat Ratna Award Winner in 1980.
Khan Abdul Gaffar Khan (1987) The first overseas – Pakisthan and Second And Nelson Mandela (1990) are two non Indians of Bharat Ratna Award Winners.
Sachin Tendulkar is the first sportsperson and the youngest Bharat Ratna Award Winner in 2014.
Bharat Ratna Award Winners List
Sl. No
Year
Name of the Awardee
01
1954
Dr. S. Radhakrishnan, Chakravarti Rajagopalachari, C.Venkataraman
02
1955
Dr. Bhagwan Das, Dr. Mokshgundm Visveswaraya, Jawaharlal Nehru
03
1957
Govind Vallabh Pant
04
1958
Dhondo Keshav Karve
05
1961
Dr. BC Roy, Purushottam Das Tandon
06
1962
Dr. Rajendra Prasad
07
1963
Dr. Zakir Hussain, Pandurang Vaman Kane
08
1966
Lal Bahadur Shastri (Posthumous). Known for his slogan “Jai Jawan Jai Kisan”
09
1971
Indira Gandhi. Known as the “Iron Lady of India”
10
1975
V. V. Giri
11
1976
K. Kamaraj (Posthumous)
12
1980
Mother Terisa
13
1983
Acharya Vinoba Bhave (Posthumous)
14
1987
Khan Abdul Ghaffar Khan (The first overseas – Pakisthan)
# திரவத்தினுள் ஒரளவுக்கு மூழ்கியிருக்கும் ஒரு பொருளின் மீது செயற்படும் முடிவான மேல் நோக்கு அழுத்தம். a. அந்த பொருளின் புவி ஈர்ப்பு மையத்தின் வழியாகச் செயல்படுகிறது (விடை)
b. வடிவ மையத்தின் வ்ழியாகச் செயல்படுகிறது.
c.அழுத்தத்தின் மையத்தின் வ்ழியாக செயல்படுகிறது.
d. இவற்றுள் எதுவுமில்லை.
# குருக்கலை z-அச்சு வழியாக செல்லும்போது ஊடகத்தில் உள்ள துகள்கள் கீழ்க்கண்டவாறு அசையும்.
a. z-அச்சு
b. x-அச்சு
c. y-அச்சு d. x-y தளத்தில் (விடை)
# ஜூல்-தாம்சன் குளுமையானது
a. வெப்பநிலையைப் பொருத்தது.
b. வெப்பநிலையைப் பொருத்தது அல்ல. c. வாயுவின் மூலக்கூறு எடையைப் பொருத்தது (விடை)
d. வாயுவின் மொத்த நிறையைப் பொருத்தது
# புள்ளி செயல்பாடு தத்துவம் எங்கு உபயோகப்படுகிறது?
a.மின் தேக்கிகள்
b.மின் தூண்டுச் சுருள்கள்
c.மின் தடைகள் d.இடிதாங்கிகள் (விடை)
# ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்
a. நிறை
b. ஆற்றல் c. நேர்கோட்டு உந்தம் (விடை)
d. கோண உந்தம்
# சூரியனின் வெப்பநிலை காண உதவும் விதி
a. சார்லஸ் விதி b. ஸ்டீபனின் நான்மடி விதி (விடை)
c. பாயில் விதி
d. கிர்சாப் விதி
# தசைகளில் இரத்த ஓட்டம் நடைபெறுவது
a. இரத்ததின் மெல்லிய அடர்த்தியால் b. இரத்ததின் பாகுநிலையால் (விடை)
c. நுண்புழையேற்றத்தால்
d. உறிஞ்சுவதால்
# கதிரியக்கக் கார்பன் வயதுக் கணிப்பு பயன்படுவது
a. நோய்களைக் கண்டறிய b. சரித்திரச் சான்றுகளின் வயதைக் காண (விடை)
c. வளிமண்டலத்தில் கார்பன் அளவைக் காண
# வீச்சு பண்பேற்றத்தை விட அதிர்வெண் பண்பேற்றம் சிறந்தது. ஏனெனில் a. உருக்குலைவு இருக்காது (விடை)
b. உருக்குலைவு மிக அதிகம்
c. உட்புற ஒலி உண்டாக்கப்படுவதில்லை
d. உட்புற ஒலியை வடிகட்டி விடலாம்.
# X-கதிர்கள் செல்லும் திசைவேகம் எதற்குச் சமம்? a. ஒளி (விடை)
b. ஒலி
c. நேர்மின் கதிர்கள்
d. ஆல்ஃபா கதிர்கள்
# ஓலிப்பெருக்கி a. மின்சக்தியை ஒலி சக்தியாக மாற்றுகிறது (விடை)
b. ஒலி சக்தியை மின் சக்தியாக மாற்றுகிறது
c. சிறிய ஒலியைப் பெரிதாக மாற்றும்
# ஒளியின் குறுக்கலைப் பண்பு எதனால் நிரூபிக்கப்படுகிறது?
a. குறுக்கீட்டு விளைவு
b. விளிம்பு விளைவு c. தள விளைவு (விடை)
d. ஒளி விலகல்
# மின்சார இஸ்திரிப்பெட்டி குளிர அதிக நேரம் எடுக்கக் காரணம்
a. கதிர் வீச்சு திறன் அதிகம் b. கதிர் வீச்சு திறன் குறைவு (விடை)
c. உட்கவர் திறன் குறைவு
d. உட்கவர் திறன் அதிகம்
# ஹீலியம் வாயு ஹைட்ரஜன் வாயுவுக்கு பதிலாக நிரப்பப்படுவதற்க்கு காரணம்
a. உந்துவிசை அதிகம்
b. குறைந்த அடர்த்தி உள்ளது
c. சிக்கனமானது d. காற்றுடன் கலந்த கலவை வெடிக்கும் ஆபத்து தராதது (விடை)
Tnpsc Tamil Current Affairs 20th August 2016 is given here. Tnpsc candidates are requested to visit our website winmeen.com to get tamil current affairs daily. Current affairs section is one of the major section in tnpsc exam. Hope these current affairs will be helpful to you.
Latest Tamil Nadu Jobs
நடப்பு நிகழ்வுகள்: 20 August 2016
1. 2016 ரியோ ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற கரோலினா மரின் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? A. ஷ்பெயின்
B. அமெரிக்கா
C. சீனா
D. பிரேசில்
2. 2016 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பிரிக்ஷ் மாநாடு சமீபத்தில் எங்கு துவங்கியது ?
A.புது டெல்லி B. ஜெய்ப்பூர்
C. லக்னோ
D. கொச்சி
3. 2016 இளைஞர் வாக்காளர் திருவிழா (The 2016 Youth Voters’ Festival) இந்தியாவின் எந்த மாநிலத்தில் நடைபெற உள்ளது ?
A. அசாம்
B. ஒடிசா C. நாகலாந்து
D. ஆந்திரப் பிரதேசம்
4. 2015-ம் ஆண்டிற்க்கான வியாசர் சம்மன் (prestigious Vyas Samman 2015) விருது பெற்றவர் யார் ? A. சுனிதா ஜெய்ன்
B. நிர்மலா வெர்மா
C. கலியாஷ் குப்தா
D. ராஜேஷ் மஹோர்
5. 2016 உலக மனிதநேய தினத்தின் World Humanitarian Day மையக்கருத்து யாது ? (Friday, August 19)
A. மனிதநேயத்தை பகிர் B. ஒரே மனிதநேயம்
C. மக்களுக்கு உதவும் மக்கள்
D. உலக மனிதநேயத்தினை ஊக்குவி
6. “The Ocean of Churn: How the Indian Ocean Shaped Human History” என்ற நூலின் ஆசிரியர் யார் ?
A. அனிர்பன் கங்குலி
B. சாய்ஷ்வரூப் ஐயர் C. சஞ்ஜீவ் சன்யால்
D. ஷிவ் விஷ்வநாதன்
7. ஆசியா மற்றும் பசிபிக்கிற்கான ஐ.நா வின் பொருளாதார மற்றும் சமூக அமைப்பு வெளியிட்டுள்ள ‘நிலையான அகலக்கற்றை தத்தெடுப்பு’ (fixed broadband adoption) அறிக்கையில் இந்தியாவின் தரம் என்ன ? United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP)
A. 45வது
B. 53வது C. 39வது
D. 27வது
8. ‘iMobile SmartKeys’ என்ற பெயர் கொண்ட செல்லிடச்செயலியை ( Mobile App) அறிமுக படுத்தியுள்ள வங்கி ?
A. Axis வங்கி B. ICICI வங்கி
C. SBI வங்கி
D. HDFC வங்கி
9.பின்வரும் எந்த இந்திய விளையாட்டு வீரருக்கு உத்திரப்பிரதேச அரசு ‘ராணி இலட்சுமிபாய்’ விருது வழங்க உள்ளது.?
A. சாய்னா நேவால்
B. தீபா கர்மாகர் C. சாக்ஷி மாலிக்
D. பி.வி.சிந்து
10. ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் யார் ?
A. R காந்தி B. உர்ஜித் பட்டேல்
C. S S முந்த்ரா
D. N S விஷ்வநாதன்
Latest Tamil Nadu Jobs
The post Tnpsc Tamil Current Affairs 20th August 2016 appeared first on WINMEEN.
Tnpsc Maths Area is one compulsory question of tnpsc aptitude section. We have givenArea, perimeter of different figures in below image (Tamil and English).
Tnpsc maths Ratio and Proportion is one of the important portion of tnpsc maths section. Here we have given some examples with tamil explanation. If u have any doubts, please post your comments here.
Tnpsc group 2 mains exam answer key question paper 2016
Tnpsc group 2 mains exam answer key question paper 2016 is available here to download and know their correctly answered questions. Candidates are advised to read full article here to get full details of Tnpsc group 2 mains exam.
Earlier Tnpsc conducted Group 2 exam prelims exam for large number candidates and published result for selected candidates list for Mains exam. The tnpsc group 2 mains exam conducted on today 21.08.2016. Good news to all tnpsc aspirants that here we have uploaded tnpsc group 2 mains exam question paper and answer key of tnpsc group 2 mains exam. Those who are written the group 2 mains exam, They are now able to download group 2 mains exam answer key and question paper here. Those who are not selected for tnpsc group 2 mains exams, they are in hurry to see the questions of tnpsc group 2 exam. Because these students are preparing for tnpsc group 4 exam.
The primary use of this answer and question paper of tnpsc group 2 mains exam is reference for upcoming next exam. Please follow the steps to download answer key of tnpsc group 2 mains exam. First go to official website of tnpsc. Official website is tnpsc.gov.in. In offical website, Right side answer key tab is available. Click that answer key tab. In that tnpsc group 2 mains exam answer key is available. Click that link and download that official answer key of tnpsc group 2 mains exam.
தற்போது தேர்வுகாலம், பல்வேறு போட்டி தேர்வுகள், அரசு நடத்தும் 10 ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் மாணவ மாணவிகளை நெருங்கி கொண்டு இருக்கின்றன. இந்த சூழ் நிலையில் நாம் நுழைவு தேர்வுகளிலும், அரசு பொது தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நாம் நினைக்கும் படிப்பை குறைவான செலவில் படித்து நாம் நினைத்த வேலைக்கு போக முடியும். இந்தியாவை பொருத்தவரை நாம் எடுக்கும் மதிப்பெண் தான் நம்முடைய அறிவு திறனை தீர்மானிப்பதாக இருக்கின்றது. எனவே நாம் கல்வி துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
குறைவான மதிப்பெண் எடுப்பதினால் ஏற்படும் விளைவுகள் :
நல்ல கல்லூரியில் இடம் : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, அல்லது நல்ல கல்லூரிகளில் இடம் வேண்டும் என்றால் லட்ச கணக்கில் பணம் கேட்கின்றனர். பொதுதேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் அண்ணா பல்கலை கழகம் மற்றும் சிறந்த கலை, அறிவியல் கல்லூரிகளிலும், நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் இல்லாவிட்டால் IISc, IIT, NIT என்று உயர் கல்வி நிறுவனக்களில் படிக்கும் வாய்ப்பு முற்றிலும் தடுக்கப்படுகின்றது.
நல்ல தரமான கல்வி : மதிப்பெண் குறைவாக எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்காததால், கல்வி தரம் குறைவாக உள்ள கல்லூரிகளில் சேர வேண்டிய கட்டயம் ஏற்படுகின்றது, இதானால் நமக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை, பாடங்களில் தேர்ச்சி பெற இயலாமல் ஃபெயிலாகக்கூடிய (அரியர் வைக்க வேண்டிய) நிலைக்கு ஆளாகின்றோம். படித்து தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. நாம் எந்த துறை பற்றி படிக்கின்றோமோ அதை பற்றிய ஆழ்ந்த அறிவு (Subject knowledge) இல்லாமல் போகின்றது.
வேலை வாய்ப்பு :
மதிப்பெண் குறைவாக எடுத்து தரம் குறைவான கல்லூரியில் சேர்வதினால் தேர்ச்சி பெறுவதே (பாஸ் பன்னுவதே) மிகப்பெறிய விஷயமாகின்றது. இதனால் நம்முடைய பிற திறன்களை (Extra curricular activities) வளர்த்து கொள்ள முடியாமல் போகின்றது. குறிப்பாக நல்ல வேலையில் சேறுவதற்கு ஆங்கில பேச்சாற்றல் (English speaking skill) மற்றவர்களோடு கலந்துரையாடும் திறன் (communication skill) மிக மிக அவசியமாகும். படிக்கும் காலத்தில் நமது துறை சார்ந்த அறிவோடு (Subject knowledge) இது போன்ற திறன்களை (English speaking skill and communication skill) வளர்த்து கொள்வது மூலம் எளிதில் வேலை பெறலாம்.
மேலும் படிக்கும் காலத்தில் பிற கல்லூரிகளில் நடக்கும், (நாம் படிக்கும் துறை சார்ந்த) போட்டிகளில் (Technical competitions : Paper presentation and technical debate etc..) கலந்து கொள்வதன் மூலமும், வெற்றி பெறுவதன் மூலமும் நமக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன. இந்த சான்றிதழ்கள் படித்ததிற்க்கு தகுந்த வேலை கிடைப்பதற்க்கு பெறிதும் உதவியாக இருக்கின்றன, நல்ல கல்லூரிகளில் படிப்பதன் மூலமே இது போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவதற்க்கு வாய்ப்புகளும் தொழில் நுட்ப உதவிகளும் (Technical assistance) கிடைக்கும்.
கல்வி உதவி :
குறைவான மதிப்பெண் எடுப்பதினால் கல்வி உதவி கிடைப்பது கடினமாகின்றது, ஏனெனில் கல்வி உதவி செய்யும் செல்வந்தர்கள் முதலில் பார்ப்பது மதிப்பெண்னைத்தான், பிறகுதான் குடும்ப வறுமையை பார்கின்றார்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால் வறுமையான குடும்பமாக இருந்தாலும் கல்வி உதவி செய்ய தயங்குகின்றனர்.
அதிக மதிப்பெண் எடுப்பதினால் கிடைக்கும் நன்மைகள் :
அதிக மதிப்பெண் எடுப்பதினால் நல்ல கல்லூரியில் இடம் கிடைக்கும். நல்ல கல்லூரிகளில் படிபதன் மூலம் நமக்கு நல்ல கல்வி கிடைக்கின்றது, கல்வி உதவியும் எளிதில் கிடைக்கும் நல்ல தரமான கல்வியினால் நமக்கு எளிதில் வேளையும் கிடைத்துவிடும். நம்முடைய எதிர்கால வாழ்வும் நலமாக இருக்கும். (இன்ஷா அல்லாஹ்). எனவே நாம் அதிக மதிப்பெண் எடுக்க முயற்சி செய்யவேண்டும்.
அதிக மதிப்பெண் எடுக்க என்ன செய்ய வேண்டும்
நம் அனைவருக்கும் எவ்வளவோ கனவுகள், ஆசைகள் இருக்கும், நம்முடிய ஆசைகளும் கனவுகளும் நிறைவேற வேண்டும் என்றால் நமக்கு நம்பிக்கையும், ஆர்வமும், கடின உழைப்பும் இருக்க வேண்டும்.
நம்பிக்கை
முதலில் நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்போம் என்ற நம்பிக்கையை வளர்த்துகொள்ள வேண்டும் (Increase your confident level). இதற்க்கு தடையாக இருப்பது உங்களை பற்றிய உங்களுடைய எண்ணம். இந்த காரியம் நம்மால் இயலாததாக இருக்கலாம் ஆனால் நம்மை படைத்த இறைவனால் இயலாத காரியம் ஏதும் இல்லை.
இலக்கை அடைய அல்லாஹ்வின் மீது அசைக்க முடியாத நம்பிக்கைவைக்க வேண்டும், அல்லாஹ் நமக்கு நிச்சயம் உதவி செய்வான் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
உறுதியான நம்பிக்கை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும். நீங்கள் அதிகமாக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தால் நிச்சயம் அல்லாஹ்வின் உதவியோடு அதை உங்களால் அடைய முடியும், நமக்கு பண வசதி இல்லாமல் இருக்கலாம், நம் பெற்றோர்கள் படிக்காதவர்களாக இருக்கலாம் இப்படி என்ன தடை இருந்தாலும் அதை எல்லாம் தகர்த்தெரிந்து நமக்கு உதவி செய்ய அல்லாஹ் இருகின்றான்,
“(நபியே!) அல்லாஹ்வையே நீர் முற்றிலும் நம்புவீராக அல்லாஹ்வே (உமக்குப்) பாதுகாவலனாக இருக்கப் போதுமானவன்”. (அல் குர் ஆன் : 33:3 ).
நமக்கு உதாவாமல் போவதற்க்கு அல்லாஹ் இயலாதவனோ, இரக்கம் இல்லாதவனோ இல்லை. உங்களுக்கு உதவ அல்லாஹ்விடம் செல்வமும் உண்டு, அறிவும் உண்டு, கொடுக்கக்கூடிய கருனையும் உண்டு. அல்லாஹ்விடம் கேளுங்கள் அல்லாஹ் நிச்சயம் உங்கள் கனவை நினைவக்குவான் .
“…..நம்பிக்கை கொண்டோருக்கு உதவுவது நம் மீது கடமையாக ஆகி விட்டது”. (அல் குர் ஆன் : 30: 47 ).
நாம் அதிகமாக மதிப்பெண் எடுப்பதற்க்கு ஒரு வழியும் இல்லையே என கவலை பட வேண்டம், நமக்கு அல்லாஹ் இருக்கின்றான்.
“அவ்வாறு இல்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழி காட்டுவான் என்று அவர் கூறினார்”. (அல் குர் ஆன் : 26 : 62).
ஆர்வம்
எந்த ஒன்றில் வெற்றி பெருவதாக இருந்தாலும் அதில் அதிக ஆர்வம் இருக்கம் வேண்டும். படிக்கும் போது ஆர்வத்துடன் படிக்க வேண்டும். படிக்கும் போது “கடினமான பாடம்” என நீங்கள் நினைப்பது தான் உங்களுடைய ஆர்வத்தை குறைக்கின்றது,” கடினமான பாடம்” என்று எதுவும் இல்லை, நீங்கள் கடினம் என நினைக்கும் பாடத்தில் ஆயிரக்கணக்கானோர் Centum (100%) எடுக்கின்றனர். விரும்பி படித்தால் எதுவும் கடினமில்லை.
மறதி :
மாணவர்களுக்கு பொதுவாக உள்ள குறை மறதி, நன்றாக படித்தேன் ஆனால் தேர்வறைக்கு சென்றவுடன் எல்லாம் மறந்துவிட்டது, என பல மாணவர்கள் கூறுவார்கள். இது மறதி என்று கூற முடியாது, நம்முடைய ஆர்வமின்மையை இது காட்டுகின்றது. சினிமா படல் மறப்பதில்லை, ஆனால் படிக்கும் பாடம் மறக்கின்றது, சினிமா பாடல் கேட்க்கும் போது கவனத்துடன் கேட்கின்றனர், கவனமாக பாடல் கேட்க்கும் போதே பாடல் வரிகளை மனனம் செய்கின்றனர். ஆனால் பாடம் படிக்கும் போது பல மாணவர்கள் பாட்டு கேட்டுக்கொண்டு படிப்பது, ,டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது,இப்படி கவனமில்லாமல் படிக்கின்றனர். இதானால் நமது கவனம் சிதறடிக்கப்பட்டு நாம் படிப்பது முழுமையா நமது மனதில் பதிவதில்லை, அல்லது தேர்வு வரைக்கும் நினைவில் நிற்ப்பதில்லை.
மறதியை போக்க :
கவனமாக படியுங்கள், படிக்கும் போது யாரிடமும் பேசாதீர்கள், பாட்டு கேட்க்காதீர்கள், டிவி பார்க்காதீர்கள் இரவு படிப்பை (Night study) தவிர்த்துவிடுங்கள், அதிகாலையில் படியுங்கள். படித்தை எழுதி பாருங்கள்.
நாம் நமக்காக படிக்கின்றோம் :
நாம் ஏன் படிக்கின்றோம் என்பதை முதலில் நாம் விளங்கி கொள்ள வேண்டும். ஆசிரியர் சொல்வதற்க்காகவோ அல்லது பெற்றோர்கள் சொல்வதற்க்காகவோ படித்தல் நிச்சயம் மறக்கத்தான் செய்யும், நீங்கள் படிப்பது உங்களுக்காக படிக்கின்றீர்கள், நீங்கள் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் வீணாபோகும், இதில் ஆசிரியருக்கோ, பெற்றோருக்கோ எந்த நஷ்டமும் இல்லை. எனவே நான் படிப்பது என்னுடைய நலனுக்காதான் என்பதை நீங்கள் உணர வேண்டும். நீங்கள் நல்ல மதிப்பெண் எடுத்து நல்ல கல்லூரியில் சேர்ந்து, நல்ல வேலையில் சேர்ந்தால் உங்கள் எதிர்கால வாழ்க்கைதான் சிறப்பாக அமையும். (இன்ஷா அல்லாஹ்)
சினிமா பாட்டு கேட்க்கும் போது உள்ள கவனம் படிப்பதில் குறைவாக உள்ளது, கிரிக்கெட் விளையாட்டில் உள்ள கவனம் படிப்பில் இல்லாமல் போகின்றது, நம்முடைய நேரத்தை நம்மை வளர்த்துகொள்ள பயன் படுத்த வேண்டும். சினிமா பார்ப்பதினாலும், கிரிக்கெட் பார்ப்பதினாலும், நடிகர்களும், கிரிக்கெட் விளையாடுபவர்களும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர், நீங்கள் செலவிடும் உங்கள் பொன்னான நேரத்தின் மூலம் அவர்கள் சம்பாதிக்கின்றனர், மாணவர்கள் படிப்பை கோட்டைவிட்டு வேலை தேடுவதே வேலையாக அலைகின்றனர். இதை மாற்ற உங்கள் நேரத்தை உங்களுக்காக செலவளியுங்கள் (படியுங்கள்)
கடின உழைப்பு
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டோம், இனிமேல் படிக்க வேண்டாம் எல்லம் தானாக நடந்துவிடும் என்று படிக்காமல் இருக்கக் கூடாது. அல்லாஹ்விடம் நாம் பிரார்த்தனை செய்துவிட்டு கவனத்துடனும் படிக்க வேண்டும், கடுமையாக உழைக்க வேண்டும்
“நம் விஷயத்தில் உழைப்போருக்கு நமது வழிகளைக் காட்டுவோம். நன்மை செய்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.” (அல் குர் ஆன் : 29: 69).
அதிக நேரம் : அதிக நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும், படிக்கும் காலத்தில் வீண் விளையாட்டு, நண்பர்களுடன் வீண் பேச்சு என்றும், ஊர் சுற்றுவது என்றும் நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனத்தை செலுத்த வேண்டும், நமது படிப்பில் இலக்கை நிர்னையித்து அதை அடைய தொடர்ந்து முயச்சிக்க வேண்டும், பள்ளி கூடம் சரியில்லை, கல்லூரி சரியில்லை, ஆசிரியர்கள் சரியில்லை எனவே நான் நன்றாக படிக்க முடியவில்லை என்று அடுத்தவர்களை குறை சொல்லி நம் வாழ்க்கையை வீணாக்க கூடாது, நாம் எந்த பள்ளியில் படித்தாலும் கவனமாக உழைத்து படித்தால் நிச்சயம் வெற்றி பெற முடியும். இன்ஷா அல்லாஹ்.
எவ்வளவு நேரம் படிக்கின்றோம் என்பதைவிட எப்படி படிக்கின்றோம் என்பது முக்கியம். ஒரு பாடத்தை படிக்கும் போது அந்த பாடத்தில் என்ன கேள்வி கேட்டாலும் எப்படி கேட்டாலும் பதில் எழுத முடியும் என்ற நம்பிக்கை (Confident) வந்த பிறகே அடுத்த பாடத்திற்க்கு செல்ல வேண்டும்.
குறிபிட்ட பாடத்திற்க்கு அதிக கவனம் செலுத்தி படிப்பது : பொறியியல் சேர்வதாக இருந்தால் கணக்கு, இயற்பியல், வேதியியல் பாடத்தில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே முக்கியமானதாகும், இதே போல் மருத்துவம் படிக்க இயற்பியல், வேதியியல், உயிரியல் (அல்லது தாவரவியல், விலங்கியல்) முக்கியமானதாகும். எனவே குறிபிட்ட பாடத்தில் அதிக கவனம் செலுத்தி படிக்க வேண்டும்.
படிப்பதை தள்ளிபோடாதீர்கள் : படிக்க நினைத்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுங்கள், பிறகு படிப்போம், இரவு படிப்போம், நாளை படிப்போம் என்று படிப்பதை தள்ளி போடாதீர்கள், இப்படி தள்ளி போட்டுக்கொண்டே போனால் தேர்வு நாள் வரை நேரம் வீணாகிவிடும், நம் வாழ்க்கையும் வீணாகிவிடும், எப்போது சுறுசுறுப்பாக (Active -ஆக) இருங்கள்.
தேர்வு எழுதும் முன்
தேர்விற்க்கு முன்னதாக நாம் பாடங்களை படிக்கும் போது மேற்கொள்ள வேண்டிய சில நடைமுறைகளை பார்ப்போம்
படிக்கும் முறை : பொதுவாக நாம் தேர்விற்க்காக படிக்கும் போது வெறுமனே புத்தகத்தை புரட்டி கொண்டிருந்தால் படித்தது நினைவில் நிற்க்காது, படிக்கும் போது வெள்ளை தாள், பேனா அல்லது பென்சில் வைத்து கொண்டு, படிக்கும் ஒவ்வொறு பக்கத்தையும் எழுதி பார்க்க வேண்டும், ஒரு பக்கமோ அல்லது ஒரு பகுதியோ (chapter) படித்து முடித்த பிறகு உடனே அடுத்த பகுதிக்கு போகாமல் இதுவரை படித்ததை கண்டிப்பாக பார்க்காமல் எழுதி பார்க்க வேண்டும், இப்படி செய்தால் படித்தது மறக்காமல் இருக்கும்.
திட்டமிடுதல் : எந்த ஒன்றும் திட்டமிடுதல் இல்லாமல் செய்தால் சரியான பலன் கிடைக்காது. தேர்வுக்கு படிப்பதற்க்கு முன்னால் நாம் எந்த நேரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன் கூட்டியே திட்டமிட வேண்டும் (Time table- போட்டு படிக்க வேண்டும்). ஒரு நாளில் குறைந்தது 12 மணி நேரம் படிப்பிற்க்காக செலவு செய்ய வேண்டும். இதில் நாம் 10 மணி நேரத்திற்க்கு தான் படிபதற்க்காக செலவு செய்ய வேண்டும். மீதமுள்ள இரண்டு மணி நேரத்தில் படித்ததை மீண்டும் நினைவில் நிருத்த செலவலிக்க (Revise பன்ன) வேண்டும். அதே போல் நாம் படிக்கும் ஒவ்வொறு மணி நேரத்திலும் 10 நிமிடங்களை படித்ததை நினைவில் நிருத்த (Revise பன்ன) செலவு செய்ய வேண்டும்.
சுயபரிசோதனை (Check list) : ஒரு நாளில் எந்த எந்த நேரத்தில் என்ன என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்ட மிட்ட பிறகு, தினமும் நாம் தூங்க போகும் முன் இன்று நாம் திட்ட மிட்டதை சரியாக செய்து முடித்துள்ளோமா என சுய பரிசோதனை செய்ய (Check – பன்ன) வேண்டும். இதை தினமும் செய்தால் தான் ஒவ்வொரு நாளும் நாம் எவ்வளவு படித்துள்ளோம் இன்னும் எவ்வளவு படிக்க வேண்டி உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும். திட்டமிடும் போது (Time table- போடும் போது) வாரத்தில் 6 நாள்களுக்குதான் நாம் படிப்பதற்க்கு திட்ட மிட வேண்டும். மீதமுள்ள ஒரு நாளில் அந்த வாரத்தில் நாம் படிக்காமல் விட்ட பாடங்களை படிக்க ஒதுக்க வேண்டும்.
தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரம் இருக்கும் போதே படிப்பதை நிருத்திகொள்ள வேன்டும், புதிதாக எதையும் படிக்காமல் இது வரை படித்ததை நினைவில் நிருத்த (revise பன்ன) வேண்டும். எனவே நாம் திட்ட மிடும் போது (Time table- போடும் போது) தேர்விற்க்கு 2 அல்லது 3 வாரத்திற்க்குள் எல்லா பாடத்தையும் படித்து முடித்து விடும் படியாக திட்ட மிடவேண்டும்.
பிரார்த்தனை : படிக்கும் முன் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து விட்டு படிக்க வேண்டும், நம் பெற்றோர்களையும் நமக்காக பிரார்த்தனை செய்ய சொல்ல வேண்டும், எதாவது பாடம் கடினமாக இருந்தால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
. ……. என் இறைவா! எனக்குக் கல்வியை அதிகப்படுத்து எனக் கூறுவீராக! (அல்-குர் ஆன் 20 : 114)
என் இறைவா! எனது உள்ளத்தை எனக்கு விரிவுபடுத்து! (அல்-குர் ஆன் 20 : 25)
என் இறைவா! எனக்கு நீ வழங்கும் நன்மையில் தேவையுள்ளவனாக இருக்கிறேன்……(அல்-குர் ஆன் 28 : 24.)
…….. எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக …..(அல்-குர் ஆன் 18 : 10.)
நம்பிகையுடன் படிக்க வேண்டும் : படிக்கும் போது இந்த பாடத்தை நம்மால் படித்து தேர்வில் சரியான முறையில் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Confident- இருக்க வேண்டும்). பாடம் கடினமாக உள்ளதே! எவ்வாறு இதை நாம் படிப்பது என்ற கவலையுடனோ அச்சத்துடனோ படிக்க கூடாது. Negative thoughts இருக்க கூடாது. நம்முடன் அல்லாஹ் இருக்கின்றான் நிச்சயம் அல்லாஹ் தேர்வில் நமக்கு உதவுவான் என நம்பிக்கையுடன் படிக்க வேண்டும் (Positive attitude இருக்க வேண்டும்).
படிக்கும் போதே முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதிவைத்துகொள்ள வேண்டும், பின்னர் நாம் பாடத்தை revise -பன்னுவதற்க்கு இது எளிதாக இருக்கும்.
படிக்கும் போது பாட்டு கேட்பது, டிவி பார்த்து கொண்டு படிப்பது, வீட்டில் இருப்பவர்களிடம் பேசிக்கொண்டு படிப்பது போன்றவற்றை கண்டிப்பாக தவிற்க்க வேண்டும். பாடத்தில் கவனத்தை செலுத்தி படிக்க வேண்டும்.
தேர்விற்க்கு முந்தய நாளே பேனா, பென்சில், இரப்பர், இன்னும் தேவையான அனைத்தையும் வாங்கி வைத்து கொள்ள வேண்டும். தேர்வு எழுத செல்லும்முன் எல்லவற்றையும் நாம் எடுத்து வைத்துவிட்டோமா என சோதனை செய்துவிட்டு செல்லவேண்டும்.
தேர்வு எழுதும் போது
தேர்வு எழுத பள்ளிக்கு சென்றவுடன் நேராக தேர்வறைக்கு சென்றுவிடவும், நண்பர்களிடம் கலந்துரையாட வேண்டாம், நாம் படிக்காத கேள்விகளை பற்றி நம்மிடன் அவர்கள் விவாதித்தால் அது நம்மை பலகீன படுத்தகூடும். தேர்வு எழுத முக்கியமான தேவையே நமது நம்பிக்கையாகும் (Confident), நம்பிக்கை இழந்துவிட்டோம் என்றால் தெரிந்த கேள்வியாக இருந்தாலும் கோட்டைவிட்டுவிடுவோம், எனவே நமது நம்பிக்கையை பலகீனபடுத்த கூடிய எந்த விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.
தேர்வறைக்கு நுழைந்த உடன் உங்கள் சட்டை பை, பேண்ட் பாக்கெட், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை முழுவதுமாக பரிசோதித்து கொள்ளுங்கள், தேவையில்லாத பேப்பர்களை தூக்கி எறிந்து விடுங்கள், தேர்வு எழுதும் நார்காலியின் மீது ஏதாவது எழுதிருந்தால் அழித்து விடுங்கள், அழிக்க முடியவில்லை எனில் தேர்வு கண்காணிப்பாளரிடம் சொல்லிவிடுங்கள்.
கேள்விதாள் வந்ததும் கவனமாக படிக்கவும், தெரியாத கேள்விகள் முதலில் வந்தால் மனம் தளர்ந்துவிட வேண்டாம் (Don’t loose your confident). தொடர்ந்து கேள்விதாளை படிக்கவும் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுவோம் என்ற நம்பிக்கையுடன் கேள்விதாளை கவனமாக படிக்கவும்.
தேர்வு எழுதுவதற்க்கு முன் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அவனுடைய அருளை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு எழுத ஆரம்பிக்கவும்.
என் இறைவா! மன்னித்து அருள்புரிவாயாக! நீ அருள்புரிவோரில் சிறந்தவன் என கூறுவீராக! …..(அல்-குர் ஆன் 23 : 118.)
விடை தாளில் 786 என எழுதுவது, நாகூர் ஆண்டவர் துணை என்று எழுதுவது போன்ற காரியங்களை கண்டிப்பாக தவிற்த்துவிடுங்கள், இப்படி எழுதுவது இஸ்லாத்தில் மாற்றமானது.
நன்றாக தெரிந்த கேள்விகளை முதலில் எழுதுங்கள், பிறகு ஓரளவிற்க்கு தெரிந்த கேள்விகளை எழுதுங்கள், இறுதியாக தெரியாத கேள்விகளுக்கு உங்களுக்கு தெரிந்த பதிலை எழுதுங்கள், தவறாக இருக்குமோ என அச்சம் வேண்டாம், எந்த கேள்வியையும் விடாமல் எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள்.
பக்கம் பக்கமாக பதில் எழுதாமல், குறிப்பு குறிப்பாக எழுதுங்கள்(Points points-ஆக எழுதுங்கள்), முக்கியமான வரிகளை அடிகோடிடுங்கள், சமன்பாடுகளையும்.
சூத்திரங்களையும், சமன்பாடுகளையும் (Formulas and equations) கட்டத்திற்க்குள் எழுதுங்கள், வரைபடத்தின் மூலமும், அட்டவணை மூலமும் பதிலை விளக்குங்கள்.
பொதுவாக முதலில் எழுதும் கேள்விகள் அதிக நேரம் பிடிக்கும், எனவே முதல் மூன்று கேள்விகளை நேரத்தை பார்த்து குறுகிய நேரத்தில் எழுத முயற்சி செய்யுங்கள்.
ஒவ்வொறு கேள்விக்கும் நேரம் ஒதுக்கி அதற்க்குள் என்ன எழுத முடியுமோ அதை எழுதுங்கள், ஒரு கேள்விக்கான நேரம் முடிந்ததும் உடனே அடுத்த கேள்விக்கு சென்றுவிடுங்கள், ஒரே கேள்வியை நீண்ட நேரம் எழுதிகொண்டு இருக்க வேண்டாம்.
விடைதாளை அளிக்கும் முன் கேள்வி எண்ணையும் பதில் எண்ணையும் சரிபார்த்துகொள்ளுங்கள்.
புதிய பேனாவை வைத்து எழுத வேண்டாம், வேகம் கிடைக்காது, நீங்கள் எழுதி பழகிய பேனாவின் மூலமே எழுதுங்கள்.
எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிய பிறகு நேரம் இருந்தால் விடைதாளை அலகு படுத்தும் வேலையை செய்யுங்கள்.
தேர்வு எழுதி முடித்தபிறகு :
தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு செல்லவும் நண்பர்களுடன் வினா, விடை பற்றி விவாதிக்க வேண்டாம். நாம் தேர்வுகளில் செய்த சிறிய தவறுகளை சுட்டிகாட்டி நமக்கு மன உலைச்சலை ஏற்படுத்திவிடுவார்கள், இது நம்மை கவலையில் ஆழ்த்திவிடும். இது நாம் அடுத்த தேர்வுக்கு ஆயத்தமாவதை பாதிக்கும், நாம் என்னதான் வருத்தப்பட்டாலும் கவலைபட்டாலும் திரும்பி அந்த தேர்வை எழுதமுடியாது, நமக்கு தெரிந்ததை எழுதிவிட்டோம் மீதத்தை அல்லாஹ் பார்த்துகொள்வான், எனவே தேர்வு எழுதியவுடன் நேராக வீட்டிற்க்கு சென்று தொழுதுவிட்டு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துவிட்டு அடுத்த தேர்விற்க்கு படிக்க ஆரம்பியுங்கள்.
அல்லாஹ்விடம் மட்டுமே கேட்ப்போம் , வெற்றி நிச்சயம் (இன்ஷா அல்லாஹ்)
நம் பிரார்த்தனை அல்லாஹ்விடம் மட்டுமே இருக்க வேண்டும். அல்லாஹ்வை தவிற வேறு யாரிடமும் நாம் உதவி தேடக்கூடாது.
(இறைவா!) உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். எங்களை நேர் வழியில் செலுத்துவாயாக! …..(அல்-குர் ஆன் 1 : 4,5)
அல்லாஹ்வை தவிர வேறு யாரிடமும் பிராத்தனை செய்வது எந்த பலனையும் தராது. எனவே தர்ஹா, தகடு, தாயத்து என எதையும் நம்ப வேண்டாம், அல்லியாக்களிடம் பிரார்த்தனை செய்ய வேண்டாம், அல்லாஹ்விடம் மட்டுமே கேளுங்கள், அல்வ்லியாக்களிடன் கேட்பது, தர்ஹாக்களுக்கு செல்வது நேர்ச்சை செய்வது, தகடு தாயத்து அணிவது அல்லாஹ்விற்க்கு பிடிக்காக காரியம், அல்லாஹ்விற்க்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தக்கூடிய காரியம், அல்லாஹ்வுடைய அன்பையும் கருனையையும் பெறுவதுதான் நமக்கு முக்கியம். எனவே கண்டிப்பாக இது போன்ற (தர்ஹா, தகடு, தாயத்து) காரியத்தில் ஈடுபட வேண்டாம்
பெற்றோர்களே!
மாணவர்களை அதிக மதிப்பெண் எடுக்க வைப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானது. மேலே குறிபிட்ட நடைமுறைகளை தங்களுடைய பிள்ளைகள் நடைமுறைபடுத்துகின்றார்களா என்பதை பெற்றோர்கள்தான் உறுதி செய்ய வேண்டும், ஏனேனில் மாணவர்கள் வயது குறைந்தவர்கள், பெற்றோர்கள்தான் மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். எனவே பெற்றோர்கள் மேற்சொன்ன வழிமுறைகளை படித்து அதை தங்களுடைய பிள்ளைகளுக்கு தினமும் சொல்லி கொடுத்து கொண்டு இருக்க வேண்டும், தங்களுடைய பிள்ளைகள் சரியா படிக்கின்றதா என கண்கானிக்க வேண்டும். படித்ததை உங்களிடம் பார்க்காமல் எழுதி காண்பிக்க சொல்ல வேண்டும், படிப்பை தவிற மற்றதின் பக்கம் திரும்பிவிடாமல் பார்த்துகொள்ள வேண்டும்.
டிவி பார்ப்பதை தவிற்க்கவும், நீங்கள் டிவி பார்க்காமல் இருந்தால்தான் உங்கள் பிள்ளைகளும் டிவி பார்க்காமல் இருப்பார்கள் கேபிள் இனைப்பை கட்டாயம் துண்டித்துவிடவும்.
மாணவ மாணவிகளிடம் இருந்து கட்டாயம் செல்போனை பறித்துவிடவும் , தேர்வு முடியும் வரை செல்போனை தரவேண்டாம்.
வெளியில் விளையாட அனுமதிக்காதீர்கள், கணினியில் (Computer -ல்) படிப்பதற்க்கு தவிற வேரெதற்க்கும் பயன்படுத்த கொடுக்காதீர்கள். கம்ப்யூட்டரில் பாட்டு கேட்பது, சினிமா பார்பது, கேம் விளையாடுவது போன்றவற்றிக்கு முழுமயாக தடை போடுங்கள்.
பிள்ளைகளுக்கு நல்ல சத்துள்ள உணவை கொடுக்கவும், பிள்ளைகளை திட்ட வேண்டாம் சபிக்க வேண்டாம், அன்பாக அவர்களுடைய தவறை சுட்டிகாட்டவும்,
பிள்ளைகளை வெறுமனே படி படி என்பதைவிட படிப்பதற்க்கான சூழ் நிலையை ஏற்படுத்திகொடுங்கள். படிப்பதை கண்கானியுங்கள். அதிகமாக மதிப்பெண் எடுத்தால் பரிசு தருவதாக சொல்லுங்கள்.
மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், நீங்கள்தான் அதிகமாக பணத்தை கொடுத்து கல்லூரியில் சேர்க்க வேண்டும். உங்கள் பிள்ளை நல்ல மதிப்பெண் எடுத்தால் மிக குறைவான பணத்தில் கல்லூரியில் சேர்க்கலாம். எனவே உங்கள் பிள்ளை அதிக மதிப்பெண் எடுப்பது உங்களுக்குத்தான் மிக முக்கியம். ஏனெனில் கல்வி கட்டணம் கட்டுவது நீங்கள்தான். அதை கவனத்தில் கொண்டு விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்.
உங்கள்வீட்டு பொருளாதார சூழ் நிலையையும், கல்வியின் அவசியத்தையும் தொடர்ந்து வழியுறுத்துங்கள். தேர்வுகாலம் முடியும் வரை உங்களுடைய முழுகவனத்தையும் உங்கள் பிள்ளைகளின் மீது வையுங்கள்.உங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடர்ந்து அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து கொண்டு இருங்கள்.
உங்களுக்கு வழிகாட்ட மாணவரணி எப்போதும் தாயார இருக்கின்றது, உங்கள் பிரச்சனைகளை எங்களிடம் சொல்லுங்கள், இன்ஷா அல்லாஹ் இயன்றவரை உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றோம். படிப்பு சம்மந்தமாக உங்களுக்கு உதவி செய்ய TNTJ மாணவரணி தயாராக உள்ளது. உங்களுடைய கல்வி வளர்சிக்கு நமது TNTJ மாணவரணியை பயன்படுத்திகொள்ளுங்கள்
நமது முஸ்லீம் சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க அல்லாஹ்விடம்
ஆக்கம்
S.சித்தீக்.M.Tech
TNTJ மாநில மாணவர் அணி ஆலோசகர்
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT JOBS
The post தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி? appeared first on MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ) பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளதை அறிவீர்கள். இவ்வறிவிப்பின் மூலம் வி.ஏ.ஓ. பதவிக்கு தகுதியுடையவர்கள் தேர்ந்தெடுக்க எழுத்துத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 300 ஆகும். இவற்றை பொது அறிவு பாடத்திலிருந்து 100 கேள்விகளும், பொதுத்தமிழ் பாடத்திலிருந்து 100 கேள்விகளும் கேட்கப்படும். அதன்படி ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும். இவற்றுள் அதிகமான சரியான விடைகளை யார் அளிக் கிறார்களோ அவர்களே வெற்றி பெற முடியும். இதில் ஐ.ஏ.எஸ்., வங்கி, இரயில்வே தேர்வுகள் போன்று நெகடிவ் மதிப்பெண்கள் கிடையாது. இத்தேர்வில் ஒருவர் வெற்றிப் பெற்று வி.ஏ.ஓ. ஆக வேண்டுமெனில் தமிழ் பாடத்தில் 100 வினாக்களுக்கு சரியான விடைகளையும், பொது அறிவு பாடத்தில் 85 வினாக்களுக்கு சரியாகவும், ஆக மொத்தம் 200 வினாக்களில் 185 கேள்விகளுக்கு சரியான பதில் தருபவர்கள் உறுதியாக வெற்ற பெற முடியும்.அது சரி, பயிற்சி மையங்களுக்கு செல்லாமல், தனியாக தயார் செய்பவர்களால் இந்த அளவுக்கு மதிப்பெண்களை பெற முடியுமா? என்றால் முடியும். நிச்சயம் உங்களால் வெற்றி பெற முடியும். எந்த பயிற்சி மையங் களிலும் சென்று படிக்காமல் 190 கேள்விகளுக்கு மேல் சரியாக பதில் தர உங்களால் முடியும். அதற்கு வழிகாட்டவும், உதவி செய்யவும் “பொது அறிவு உலகம்’ தயாராக உள்ளது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, இத்தேர்வின் போக்கினை நன்கு புரிந்துக் கொண்டு அதற்கேற்ற முறையில் படிக்க வேண்டும். பயிற்சி செய்ய வேண்டும். இத்தேர்வில் 200 கேள்விகள் எப்படி கேட்கப் படுகின்றன, அதற்கு எப்படி தயார் செய்வது என்பதை பார்ப்போம். பொது அறிவும்,பொதுத்தமிழும்
பொது அறிவுக்கான 100 வினாக்களும் டி.என்.பி.எஸ்.சி.-யின் சிலபஸின்படி கேட்கப்பட்டாலும், அவை மிக நுட்பமாக ஆராய்ந்தோமெனில் பின்வருமாறுதான் கேட்கப்படுகின்றன. இந்திய வரலாறு மற்றும் இந்திய விடுதலைப் போராட்டம் பாடத்திலிருந்து 6 அல்லது 7 கேள்விகள், புவியியல் பாடத்தில் பொதுப் புவியியல், தமிழக புவியியல், இந்திய புவியியல் உட்பட 7 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்திய அரசிய லமைப்பு-8, இந்திய பொருளாதாரம்-8, இயற்பியல்-4, வேதியியல்-4, உயிரியல்-12, புள்ளியியல்-4 அல்லது 3, அறிவுக்கூர்மை (கணிதம்)-8, இந்தியப் பொது அறிவு-5, நடப்பு நிகழ்வுகள்-8, அறிவியல்-2, கம்ப்யூட்டர்-2, இந்தியப் பண்பாடு-3, தமிழக பொது அறிவு-7, தமிழக வரலாறு-6, தமிழ் இலக்கிய வரலாறு-3 என்றவாறு கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதை பார்த்ததும் ஒவ்வொரு பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் தானா என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் 1 கேள்விக்கூட உங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியுடையது, நீங்கள் இத்தேர்வில் வெற்றிப் பெற வேண்டுமானால் அனைத்து கேள்விக்கும் பதில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் படிக்க வேண்டும்.
அடுத்து பொதுத்தமிழ் பார்ப்போம். டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ள பொதுத்தமிழ் சிலபஸானது, 20 பாடக்குறிப்புகள் உள்ள டக்கியது. அதில் ஒவ்வொன்றுக்கும் 5 கேள்விகள் வீதம் மொத்தம் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. படிக்கும் முறை
வெற்றியாளர்கள் புதிதாக எதையும் செய்வதில்லை. மற்றவர்கள் செய்வதையே புதுமையாக செய்கிறார்கள். அதுபோல நீங்கள் வெற்றிபெற்றே தீர வேண்டுமானால் புதிய முறையில் தேர்வை அணுக வேண்டியது அவசியம். முதலில் இத்தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் 6 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள தமிழ்நாட்டு அரசு பாடநூல் நிறுவனத்தின் பாட நூல்களிலிருந்தே கேட்கப்படுகின்றது என்பது உண்மை. ஆனாலும் கம்ப்யூட்டர், புள்ளியியல், அறவியல், இந்தியப் பண்பாடு, தமிழ் இலக்கிய வரலாறு ஆகியவை 11, 12-ம் வகுப்பு பாடநூல்கள். இந்திய பொது அறிவு, தமிழ்நாடு பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள் போன்றவை வெளியிலிருந்து கேட்கப்படும் வினாக்கள். அதனால் பாடநூல்களை முழுவது மாக படித்து கொள்ளுங்கள். சிலபஸ் உள்ளடக்கிய (பாடநூல்கள் மற்ற முக்கிய நூல்கள்) அனைத்து பாடக்குறிப்புகளையும் “பொது அறிவு உலகம்’ இதழில் விரிவாக தந்து வரு கிறோம். அதனையும் சேர்த்து படித்து கொள்ளுங்கள். அதன் பின்னர், பொது அறிவு உலகம் வெளியிடும் 5 யஆஞ தேர்வு சிறப் பிதழ்களில், தேர்வுக்கு கேட்கப்படவுள்ள மிக மிக முக்கிய வினா-விடைகள், அடிக்கடி கேட்கப்படும் முந்தைய தேர்வு வினா-விடைகள், மிக முக்கியமான டி.என்.பி.எஸ்.சி கேள்விகளை தயாரிக்கும் அதே முறையில் அதே நூல் களிலிருந்து 15,000-த்திற்கும் மேற்பட்ட வினா-விடைகளை 5 சிறப்பிதழ்களாக வெளியிட்டு வருகிறோம். இவற்றை அனைத் தையும் வாங்கி பயிற்சி செய்யுங்கள். மாதிரி தேர்வுகள்
படித்துக்கொண்டே இருந்தால் சோர்வுதான் வரும். ஒவ்வொரு பாடத்தையும் படித்து முடித்தவுடன்யஆஞ சிறப்பிதழை கொண்டு மாதிரி தேர்வு எழுதி பாருங்கள். உங்களை நீங்களே சோதித்துக் கொண்டால், எப்படி படித்துள்ளீர்கள், இன்னும் எப்படி படிக்க வேண்டும் என்பதை சுய மதிப்பிடலாம். இதன் மூலம் தேர்வை வென்று விடுவோம் என்ற தைரியமும் கிடைக்கும். அதேபோல் பொதுத்தமிழில் நூறு வினாக்களுக்கும் சரியான மதிப்பெண்களை பெற்றுத்தரும் நோக்கில் “பொதுத்தமிழுக்கான சிறப்பிதழ்’ கல்லூரி பேராசிரியர்களின் துணையுடன் தயாரித்துள்ளோம். இப்போது அச்சில் உள்ளது. விரைவில் வெளிவரும். எமது அனைத்து வெளியீடுகளும் யஆஞ தேர்வுக்கு 100 சதவீதம் பொருந்தும் முறையில் தயாரிக்கப்படுதால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முந்தைய குரூப்-2, ஊ.ஞ., காவலர், ந.ஒ. தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பாடத்தொகுப்புகள் மற்றும் மாதிரி வினா-விடைகள் தொகுப்புகள் வெளி யிட்டுள்ளோம். அவற்றில் அதிக அளவிலான வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்பட்டு பாராட்டுக்களையும் பெற்றோம். சமீபத்தில் பிரபலமான நாளிதழ் ஒன்று மார்க்கெட் கைடை படிக்க வேண்டாம் என்று செய்தி வெளியிட்டனர். அதன்பின் அந்த நாளிதழ் வெளியிடும் வி.ஏ.ஓ. தேர்வு மாதிரி வினா-விடை (இணைப்பு) குறிப்பிட்ட சில மார்க்கெட் கைடி லிருந்தே எடுக்கப்பட்டு, வெளியிடப்படுகிறது. அதுபோல இல்லாமல் பொது அறிவு உலகம் மாணவர்கள் நலன் சார்ந்தே வெளிவருகிறது என்பதை அறிவீர்கள். வாசகர்களின் சந்தேகங்களும்அதற்கான பதில்களும்
எண்ணற்ற பொது அறிவு உலகம் வாசக கள் பல்வேறு சந்தேகங்களை கேட்டு வரு கின்றனர். அவர்களின் சந்தேகங்களை களைவது “பொது அறிவு உலக’த்தின் கடமை. அந்த அடிப்படையில் சமீபத்தில் கேட்கப்பட்ட சந்தேகங்களை தொகுத்து இங்கு விளக்கம் அளிக்க முற்பட்டுள்ளோம். சரியாக எவ்வளவு பேர் வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர்?
13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன. அதில் 12 லட்சத்துக்கும் மேல் விற்பனையாகின. தொடர்ந்து அனைத்து விண்ணப்பங்களும் பிரிக்கப்பட்டு அடுக்கிவைத்து எண்ணும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த கட்டுரை எழுதும் வரை 9 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கட்டி வைத்துவிட்டனர். மீதியுள்ளவற்றை தொடர்ந்து கட்டுமானப்பணி நடந்துவருகிறது. விற்பனையாகிய அளவிலான விண்ணப்பங்கள் டி.என்.பி.எஸ்.சி அலுவல கத்திற்கு வரவில்லை. ஏனெனில் பல ஆயிரக் கணக்கான பேர் விண்ணப்பத்தை அனுப்பாமல் இருந்துவிட்டனர்.
வி.ஏ.ஓ. தேர்வு எப்போது?
2007-ம் ஆண்டு 2500 காலியிடங்களுக்கான வி.ஏ.ஓ. தேர்வு அறிவிக்கப்பட்டது. அப்போது 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப் பித்தனர். பின்னர் எழுத்துத் தேர்வு அறிவிக்கப்பட்டு, 2007 ஜூன் 10-ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது. அதுபோல வி.ஏ.ஓ. போன்ற பெரிய தேர்வுகளை நடத்தும்போது எவ்வளவு பேர் விண்ணப்பிக்கிறார்களோ அதற்கு தக்கவாறு வினாத்தாள்கள், தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும்.
அதற்கு திட்டமிடவும் செயல்படுத்தவும் சிறிது காலம் தேவைப்படுவதால் தேதி பின்னர் அறிவிப்பது இயல்பான ஒன்றாகும். எமக்கு கிடைத்த தகவல்படி ஜனவரி இரண்டாம் வாரத்தில் வி.ஏ.ஓ. தேர்வு நடத்தப்பட உள்ளது.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் மருத்துவ பணிகளுக்கான நேர்காணல். செப்டம்பர் மாதம் முழுவதும் வி.ஏ.ஓ. தேர்வு விண் ணப்பங்கள் பரிசீலனை மற்றும் சென்ற வருடம் நடைப்பெற்ற குரூப்- 2 தேர்வு முடிவுகள் தயாரித்தல். அக்டோபர் இரண்டாம் வாரத்தில் குரூப்-2 தேர்வுகளுக்கான அறிவிப்பு மற்றும் குரூப்-1 தேர்வு முடிவுகளை தயாரித்தல். டிசம்பர் மாதம் மூன்றாம் வாரத்தில் குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடுதல். இதன் பொருட்டு, டி.என்.பி.எஸ்.சி தலைவர் அரங்க. செல்லதுரை ஐ.ஏ.எ.ஸ் அவர்கள் ஓய்வின்றி உழைக்கின்றார். வயதாகிவிட்டாலும் அவரின் வேகமும், திட்டமிடலும் மிகவும் சிறப்பான முறையில் உள்ளது. தமிழக இளைஞர்கள் மேல் மிகுந்த நேசம் கொண்டதால், தனது காலத்திலேயே அதிக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுதர வேண்டுமென நினைக்கிறார். அதையே கூறிவருகிறார்.
Source: storiesintamil.in
இந்த வார ராசிபலன் 18-08-2016 முதல் 24-08-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். சூரியன் 5-ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். எடுத்த காரியத்தில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உண்டாகும். அதனால் மனத்தில் தெளிவு பிறக்கும். கலைஞர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். அதிர்ஷ்டத்தால் ஆதாயம் கிடைக்கும். அரசியல்வாதிகளும் அரசுப் பணியாளர்களும் தங்கள் திறமைக்குரிய வளர்ச்சியைக் காண்பார்கள். ராசிநாதன் செவ்வாயும் சனியும் 8-ல் இருப்பதாலும், குரு பலம் குறைந்திருப்பதாலும் பெரிதாக வளர்ச்சிக்கு இடமிருக்காது. கெட்ட தொடர்பை விட்டு விலகுவது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்யலாகாது. தொழிலாளர்கள், விவசாயிகள், உத்தியோகஸ்தர்கள், தொழிலதிபர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தெய்வ தரிசனம் கிடைக்கும். தான, தர்மப்பணிகளிலும், பொதுப்பணிகளிலும் ஆர்வம் கூடும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். செய்தொழில் விருத்தி அடையும். பண நடமாட்டம் அதிகமாகும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் வரும். சொத்துக்கள் சேரும். தகவல்தொடர்பு பயன்படும். சுபகாரியங்கள் நிகழும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். அலைச்சல் வீண் போகாது. மாணவர்களது நிலை உயரும். மாதர்கள் தங்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். கேளிக்கைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது நல்லது. வார முன்பகுதியில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் ஏற்படும். எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். நண்பர்கள் உதவி புரிவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டு. சிறு பயணத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். மன உறுதி கூடும். எதிர்ப்புகள் வலுக் குறையும். வழக்கில் அனுகூலமான போக்கு தென்படும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்கள் உதவுவார்கள். இயந்திரப் பணியாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் செழிப்புக் கூடும். வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். தொலைதூரப் பயணங்களால் லாபம் உண்டு. பொருளாதாரம் சார்ந்த துறையிலிருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், கருஞ்சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 8, 9.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. சூரியனும் செவ்வாயும் நலம் புரிவார்கள். பொருளாதார நிலை உயரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வியாபாரிகள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் அனுகூலம் உண்டாகும். குரு 3-ல் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் விழிப்புத் தேவை. பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். அந்நியர்களின் தலையீட்டைத் தவிர்க்கவும். விஷ பயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. வாரப் பின்பகுதியில் நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். முக்கியமானதொரு காரியம் நிறைவேறும். பொழுதுபோக்குகள் மற்றும் விளையாட்டுகளில் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18 (முற்பகல்), 21, 22.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். சூரியனும் செவ்வாயும் தன் சொந்த வீடுகளில் இருப்பதால் நலம் உண்டாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். தோற்றப் பொலிவு கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பணவரவு கூடும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். நிலபுலங்களால் ஓரளவு ஆதாயம் கிடைத்துவரும். என்றாலும் 4-ல் சனி இருப்பதால் சில இடர்ப்பாடுகளும் ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. ஜன்ம ராசியில் ராகுவும், 7-ல் கேதுவும் உலவுவதால் தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். நிதானமாகப் பேசிப் பழகுவது நல்லது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். வாரக் கடைசியில் தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தர்ம குணம் வெளிப்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 24.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு. நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். ஆன்மிகப் பணிகளிலும், பொதுநலப் பணிகளிலும் ஈடுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வதற்கு சந்தர்ப்பம் உருவாகும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், வியாபாரிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பயணத்தின்போது விழிப்புடன் இருப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள் நலம் புரிவார்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் லாபம் கிடைக்கும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறை சார்ந்தவர்களுக்கு வருவாய் கூடும். ஆராய்ச்சியாளர்கள் புகழ் பெறுவார்கள். 5-ல் கேதுவும் 12-ல் குருவும் உலவுவதால் மக்களால் மன வருத்தம் ஏற்படும். மறதியால் அவதிக்கு ஆளாக வேண்டிவரும். வயிறு, கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 2-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. பிறர் மனம் புண்படும்படி பேச வேண்டாம். குடும்ப நலனில் அக்கறை தேவை. மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். தனவந்தர்கள் சகாயம் கிடைக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற வாய்ப்பு உண்டாகும். எலக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு லாபம் வரும். குடும்ப நலம் திருப்தி தரும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டாகும். பரம்பரையாகச் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். பொன்னும் பொருளும் சேரும். ஊதிய உயர்வு பெற வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நெருக்கடி விலகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் நிச்சயம் கிடைக்கும். அலைச்சல் வீண்போகாது. வேலையில்லாதவர்கள் தகுந்ததொரு வாய்ப்பைப் பெறுவார்கள். குருவருளும் திருவருளும் கிட்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, ஆரஞ்சு, வெண்சாம்பல் நிறம், பொன் நிறம்.
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். விருந்துபசாரங்களில் ஈடுபாடு உண்டாகும். பேச்சில் திறமை வெளிப்படும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். சிக்கன நடவடிக்கை தேவை. கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளவும். தந்தை நலனில் கவனம் தேவை. இயந்திரப் பணியாளர்களும் பொறியாளர்களும் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். கண், கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். பண நடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் வளர்ச்சி காணலாம். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நல்ல தகவல் வந்து சேரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். நல்லவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் நலம் உண்டாகும். நிலம், மனை, வீடு வாங்கலாம். சமுதாய நலப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான பாதை தெரியவரும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். விவசாயிகளுக்கு வருவாய் அதிகரிக்கும். சுரங்கப் பணியாளர்கள், ஆலைப் பணியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18, 21, 22.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: ராகு, கேது, சூரியன் ஆகியோருக்கு அர்ச்சனை செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். இயந்திரங்கள், எரிபொருட்கள், கட்டிடப் பொருட்கள், தாதுப் பொருட்கள் லாபம் தரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் வருவாயும் கிடைத்துவரும். உடன்பிறந்தவர்களாலும், பணியாளர்களாலும் நன்மை உண்டாகும். ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகுவும் உலவுவதால் உடல் நலனில் கவனம் தேவைப்படும். தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் பழகி வருவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. குரு 8-ல் உலவுவதால் பொருளாதாரப் பிரச்சினை ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 18 (பிற்பகல்), 21, 22.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். மக்களால் அனுகூலம் உண்டாகும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புள்ள தொழில் அபிவிருத்தி அடையும். புதியவர்களின் தொடர்பும் அதனால் நன்மையும் ஏற்படும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள். எலக்ட் ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். புதிய கூட்டாளிகள் வந்து சேருவார்கள். பகுதி நேர உத்தியோகம் அமையும். சுக்கிரன், 6-ல் இருப்பதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
ராசிநாதன் செவ்வாயின் 8ம் இடத்துச் சஞ்சாரம் தொடரும் நிலையில் இந்த மாதத்தினைத் துவக்கவுள்ள நீங்கள் எடுத்த காரியத்தை செய்து முடிக்க கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றுள்ள சனி பகவான் மேலும் ஒரு சில இடைஞ்சல்களைத் தோற்றுவிப்பார். ஆயினும் வரவு நிலையில் குறை இல்லாததால் கவலை கொள்ளத் தேவையில்லை. ஐந்தாம் பாவத்தில் வலிமையுடன் அமர்ந்திருக்கும் கிரஹங்களினால் எந்தச் சூழலிலும் மனம் தளராது செயல்படும் உத்வேகத்தினைப் பெற்றிருப்பீர்கள். தோல்வியையும் வெற்றியாக மாற்றிக் கொள்ளும் கலையை அறிந்திருக்கும் நீங்கள் எளிதில் துவண்டுவிடாமல் விடாமுயற்சியுடன் செயல்பட்டு எவ்வகையிலேனும் நினைத்த காரியத்தை செய்து முடித்து நற்பெயர் காண்பீர்கள்.
உடன்பிறந்தோரால் ஒரு சில சங்கடங்களை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்களால் செலவுகள் அதிகரிக்கும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சியில் ஈடுபடுதல் கூடாது. வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கலாம். இந்த மாதத்தில் அநாவசியமான பயணங்களை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் மனவருத்தத்தினைத் தரக்கூடும். கலைத்துறையினருக்கு ஆவணி மாதத்தின் முதல் மூன்று வாரங்கள் சாதகமான பலனைத் தரும். விடாமுயற்சியால் வெற்றி காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 8, 9.
பரிகாரம்: சங்கடஹரசதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்கி வாருங்கள்.
இந்த மாதத்திய கிரக நிலையை ஆராயும்போது உங்கள் பணிகளை செய்து முடிக்க சுயமுயற்சி என்பது அவசியமாகிறது. அதிர்ஷ்டத்தினை நம்பியிராது தன்முயற்சியினால் மட்டுமே காரியத்தினை சாதிக்க வேண்டியிருக்கும். மனதில் புத்துணர்ச்சியான எண்ணங்கள் ஊற்றெடுக்கும். இதனால் முழுமுயற்சியை வெளிப்படுத்துவதுடன் முகமலர்ச்சியோடு செயல்பட்டு வருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். தனாதிபதியின் சாதகமான அமர்வு நிலை பொருளாதார நிலையை கணிசமாக உயர்த்தும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வரும் பாக்கித்தொகை ஒன்று இந்த மாதத்தில் வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான மரத்தாலான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. உடன்பிறந்த சகோதரிக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். மாணவர்களின் கல்வி நிலை உயர்வடைவதோடு விளையாட்டுக்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும்.
தகப்பனார் வழி உறவினர்களோடு இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலைவாய்ப்பு தேடி வரும் இளைஞர்கள் சாதகமான நேரத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்பாடுகளில் இருந்து வந்த மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்போடு செயல்படுவதைக் கண்டு ஆனந்தம் கொள்வீர்கள். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. மருத்துவச் செலவுகள் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நண்பர்களோடு அற்ப விஷயங்களுக்காக கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பூர்வீகச் சொத்துகளில் பாகப் பிரிவினை சார்ந்த பேச்சுக்கள் எழலாம். தொழில் முறையில் போட்டியான சூழல் உருவாகக் காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கக் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 10, 11.
பரிகாரம்: இரண்டு பௌர்ணமியிலும் சத்யநாராயண விரதம் மேற்கொள்வது நல்லது.
தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராசிநாதன் புத பகவானின் துணையுடன் இந்த மாதத்தில் செயற்கரிய செயல்களைச் செய்து சுற்றியுள்ளவர்களை பிரமிப்பிற்குள்ளாக்குவீர்கள். மற்றவர்கள் அசரும்படியான காரியங்களை திறம்படச் செய்து முடிப்பதன் மூலம் தனிப்பட்ட முறையில் உங்களது கௌரவம் உயர்வடையும். சுற்றி நடக்கும் பிரச்னைகளில் தலையிட்டு சுமுக தீர்வு காண முற்படுவீர்கள். தன காரகன் சுக்கிரனால் இந்த மாதத்தில் வரவு நிலை கூடினாலும், ஆடம்பர செலவுகள் அதிகரிக்கலாம். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கேளிக்கை, கொண்டாட்டங்கள், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக அதிகம் செலவழிக்க நேரிடும். ஆயினும் எதைப்பற்றியும் கவலைப்படாது சதா முகமலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும்.
பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை நிறைந்த கருத்துகள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். மாணவர்கள் கல்விநிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றும் முயற்சிகள் மாதத்தின் பிற்பாதியில் வெற்றி பெறும். ஆகஸ்ட் 26ம் தேதிக்குப் பிறகு அனுகூலம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். சதா ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டு இருப்பதால் உடல்நிலையில் களைப்பான சூழலை உணர நேரிடலாம். தொழில் முறையில் அலைச்சல் அதிகரிக்கக் கூடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடலாம். கலைத்துறையினர் பாராட்டு பெறுவர். மனதில் மகிழ்ச்சி நிலவி வரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 17, செப்டம்பர் 12, 13, 14.
பரிகாரம்: திருவோண நட்சத்திர நாள் அன்று விரதம் இருந்து பெருமாளை சேவிக்கவும்.
இந்த மாதத்தில் தனஸ்தானத்தில் இடம்பெற்றுள்ள வலிமையான கிரஹங்களின் இணைவு நிலை உங்கள் ராசிக்கு நற்பலன்களைத் தரத் துவங்கும். ஆவணி மாதத்தின் துவக்கம் வாழ்வியல் தரத்தினை உயர்த்தும். குரு பகவானின் பெயர்ச்சி சாதகமாக இல்லையென்றாலும் சுக்கிரனின் அருளால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். உண்மையாக உழைத்து வந்ததற்கான பலனை அனுபவிக்கத் துவங்குவீர்கள். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். அடுத்தவர்களின் பணிகளையும் பொறுப்பேற்றுக் கொண்டு செய்து முடிப்பீர்கள். முக்கியமான பிரச்னைகளில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலம் சிறப்பான நற்பெயரை அடைவீர்கள். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும்.
உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிகளுக்கு பெரிதும் துணையாய் அமையும். மாணவர்களின் கல்வி நிலை குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காணும். பொறியியல் துறை மாணவர்கள் கேம்பஸ் இன்டர்வியூ போன்றவற்றில் தேர்ச்சி காண்பார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் எண்ணத்தினை பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வருவார். நண்பர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். தொழில் முறையில் உண்மையான உழைப்பின் மூலம் உயர்வடைவீர்கள். சுயதொழில் செய்வோர் லாபத்தில் சற்று விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் ஈடுபட கால நேரம் துணை நிற்கும். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கத் துவங்கும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 18, 19, செப்டம்பர் 15, 16.
பரிகாரம்: வெள்ளியன்று கோபூஜை செய்து வழிபடவும்.
சாதகமான கிரக நிலையோடு இந்த மாதத்தினைத் துவக்க உள்ளீர்கள். ராசிநாதனின் ஆட்சி பெற்ற நிலை இந்த மாதத்தில் உங்கள் செயல்திறனைக் கூட்டும். எந்த ஒரு விஷயத்தையும் செய்து முடிக்கும் வரை ஓய்வில்லாமல் செயல்பட்டு வருவீர்கள். வேகத்தோடு விவேகமும் இணைந்திருப்பதால் காரிய வெற்றி என்பது கட்டாயம் சாத்தியமாகி வரும். முற்பகலில் செய்யும் காரியங்களுக்கு பிற்பகலில் பலன்களை அனுபவிக்க உள்ளீர்கள். ஆகஸ்ட் 26ம் தேதி முதல் பொருள் வரவு கூடும். குரு சுக்கிரனின் தனஸ்தான சஞ்சாரம் பொருள் சேமிப்பிற்குத் துணை நிற்கும். ஏதோ ஒரு காரணத்தால் தடைபட்டிருந்த பாக்கி தொகைகள் விரைவில் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். லாவகமான பேச்சுகளில் கண்டிப்பும் வெளிப்படுவதால் உங்களின் வார்த்தைகளை அடுத்தவர்கள் கேட்டு நடக்க வேண்டிய சூழலுக்கு ஆளாவார்கள். உடன் பிறந்தோருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியிருக்கும்.
தகவல் தொடர்பில் ஒரு சில இடையூறுகளை சந்திக்க நேரலாம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு கூடும். பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாகும் என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்கள் தங்கள் எழுத்துத்திறமையின் மூலம் வகுப்பினில் தனித்துவம் கண்டு வருவார்கள். உறவினர்களின் வாயிலாக ஒரு சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் சிந்தனைகளும், கருத்துகளும் சில நேரத்தில் விமர்சனத்திற்கு உள்ளானாலும் நல்லோர்தம் சபைதனில் சிறப்பான வரவேற்பினைப் பெறும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உதவி செய்ய வேண்டியிருக்கும். ஆன்மிகப் பெரியவர்களுடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைப் பெற்றுத் தரும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழ்நிலை உருவாகும். கலைத்துறையினர் நல்ல தனலாபம் கண்டுவருவர். தொழில் முறையில் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருந்தாலும் முழு மனதுடன் பணியில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 20, 21, 22.
பரிகாரம்: தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து வழிபடுங்கள்.
ராசிநாதன் புதன் பகவான் 12ம் இடத்தில் அமர்வினைப் பெற்றுள்ளதால் அநாவசியமான அலைச்சலை சந்திக்க நேரிடலாம். எந்த ஒரு காரியத்தினையும் செய்து முடிக்க சராசரிக்கும் சற்று கூடுதலாக சிரமப்பட வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 26ம் தேதி முதல் ஜென்ம ராசியில் குருவோடு சுக்கிரன் இணைவது உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் முயற்சிகளில் இருந்து வந்த இடைஞ்சல்கள் முற்றிலுமாக அகலும். பொருள் வரவு நிலை அதிகரித்தாலும் அதற்கேற்ற வகையில் செலவுகளும் வரிசையில் காத்து நிற்கும். குடும்பத்தில் கலகலப்பும் சலசலப்பும் கலந்திருக்கும். முக்கியமான பிரச்னைகளில் விவாதம் செய்வதால் தீர்வு கிடைக்காது என்பதை உணர்ந்துகொண்டு அதிகம் பேசாது அமைதி காத்து வருவீர்கள். உடன்பிறந்தோர் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவார்கள்.
தகவல் தொடர்பு சாதனங்கள் நன்மையைத் தரும் வகையில் அமையும். மாணவர்கள் தங்கள் நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் ஆதாயம் தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த சொத்துகள் சார்ந்த வழக்கு விவகாரம் முடிவிற்கு வரும். கடன் பிரச்னைகள் முற்றிலுமாகக் குறைந்திருக்கும். கடுமையான அலைச்சல் உடல்நிலையில் அசதியைத் தோற்றுவிக்கக் கூடும். வாழ்க்கைத்துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். அதிகரித்து வரும் கௌரவச் செலவுகள் மனதில் வருத்தத்தினை உண்டாக்கும். ஆன்மிக ரீதியான ஈடுபாடுகள் அதிகரிக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் வாய்ப்பு வந்து சேரும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். கனவுத் தொல்லைகளால் நிம்மதியான உறக்கம் கெடலாம். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 23, 24.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபட்டு வர மனவலிமை கூடும்.
ஜெய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் சுக்கிரனின் அனுக்ரஹத்தால், மனதில் இருக்கும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இந்த மாதத்தில் கால நேரம் உங்களுக்கு துணைபுரியும். ஜெய ஸ்தான சுக்கிரன் மன மகிழ்ச்சியைத் தருவதோடு, காரிய வெற்றியையும் பெற்றுத் தருவார். ஆடம்பரப் பொருட்களின் மேல் நாட்டம் செல்வதைத் தவிர்க்க இயலாது. தனாதிபதியின் ஆட்சி நிலை சிறப்பான பொருள் வரவினைப் பெற்றுத் தந்தாலும், செலவுகளும் அதற்கேற்ற வகையில் வரிசையாக காத்து நிற்கும். செப்டம்பர் 9ம் தேதிக்குப் பிறகு செலவுகள் குறைந்து சேமிப்பு கூடும். குடும்பத்தில் சலசலப்பும், கலகலப்பும் கலந்திருக்கும். விவேகமான பேச்சுகளினால் கௌரவம் அடைவீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் செயலிழந்து இடைஞ்சலைத் தந்தாலும், மாலை நேரத்தில் சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமையும். உங்களின் எந்த ஒரு பணிக்கும் இடைத்தரகர்களை நம்பாது தனக்குத்தானே செயல்பட்டு வருவது நன்மையைத் தரும்.
மாதத்தின் பிற்பாதியில் தைரியமும், விவேகமும் நிறைந்த செயல்களால் மற்றவர்களை ஆச்சரியத்தில் திகைக்கச் செய்வீர்கள். ஆகஸ்ட் 26ம் தேதிக்குப் பிறகு செயல்களில் எச்சரிக்கை தேவை. எல்லாம் சரியாக இருந்தும் ஏதோ ஒரு காரணத்தினால் காரியம் தடைபடும் வாய்ப்பு உண்டு. மந்த கதியில் இருந்த காரியங்கள் செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில் இருந்து விரைவாக நடைபெறத் துவங்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறிது சுணக்கத்தினைக் காண நேரிடலாம். உறவினர்களால் ஒரு சில கலகங்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் பிடிவாதமான செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்தாலும், சாதகமான பலன்களைத் தரும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்குத் துணை நின்று வருவீர்கள். கலைத்துறையினர் அதிக அலைச்சலுக்கு ஆளாவர். தொழில்முறையில் அடிக்கடி பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் லாபம் காண்பார்கள். மொத்தத்தில் நன்மை தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்ட் 25, 26.
பரிகாரம்: கிருத்திகை விரதமும் கந்தனின் வழிபாடும் கவலை தீர்க்கும்.
ராசிநாதன் செவ்வாயின் சஞ்சார நிலை இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் உங்கள் பணிகளை செய்து முடிக்க மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகலாம். தனது திறமையைக் கொண்டு அடுத்தவர்களை வேலை வாங்கி காரியத்தினை சாதித்துக் கொள்ள வேண்டியிருக்கும். ராசிநாதன் செவ்வாய் தொடர்ந்து சனியின் இணைவினைப் பெறுவதால் வேகமாக நடைபெற்று வந்த காரியங்களில் சிறிது தாமதத்தினை சந்திக்க நேரிடும். ஆயினும் அவ்வகையில் உண்டாகும் தாமதமும் உங்களுக்கு சாதகமான பலனைத் தரும் வகையிலேயே அமையும் என்பதால் கவலை கொள்ளத் தேவையில்லை. தனாதிபதியின் துணையினால் புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும்.
உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. ஆகஸ்ட் 26ம் தேதியில் இருந்து கடன் பிரச்னைகள் தலையெடுக்கக் கூடும். முன்பின் தெரியாத மனிதர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்குவதைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கும், வேலைவாய்ப்பு தேடி அலைவோருக்கும் கால நேரம் சாதகமாக இருந்து வரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்திற்குத் தேவையான புதிய ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதில் அதிக நாட்டம் செல்லும். பிள்ளைகளின் செயல்கள் பெருமை தரும் வகையில் அமையும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் பிள்ளைகளின் உடல்நிலையில் தனி கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கூட்டுத்தொழிலில் லாபம் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் ஒருவித மந்தத்தன்மையை உணர்ந்து வருவார்கள். கலைத்துறையினர் செப்டம்பரில் திருப்புமுனை காண்பர். சாதகமான பலன்களைத் தரும் மாதமாக அமையும். சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்ட் 27, 28.
பரிகாரம்: கோகுலாஷ்டமி நாளில் கற்கண்டு பால்சாதம் தானம் செய்யுங்கள்.
உண்மையாக உழைத்து வருவதன் மூலம் இந்த மாதத்தில் உங்களை மற்றவர்களுக்கு அடையாளம் காட்ட முற்படுவீர்கள். ராசிநாதன் குரு பகவானின் 10ம் இடத்து அமர்வு நிலை வாழ்வியல் தரத்தினில் முன்னேற்றத்தினைத் தரும். குரு பகவானின் பார்வை பலம் இல்லாத நிலையில் ஏழரைச் சனி தனது தாக்கத்தினை உங்கள் மீது செலுத்துவார். சனி, செவ்வாய் ஆகியோரின் இணைவு மனதினில் பலவிதமான எண்ணங்களைத் தோற்றுவித்தாலும், அவசரப்படாமல் நிதானித்து செயல்படுவதன் மூலம் மட்டுமே வெற்றியை சாத்தியமாக்கிக் கொள்ள இயலும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆவணி மாதத்தின் துவக்கத்தில் எண்ணிய காரியங்கள் எளிதில் நடந்தேறக் காணும் அதே நேரத்தில் பிற்பாதியில் காரியத்தடையினை சந்திக்க நேரிடலாம். மனதில் இருந்து வரும் கோபதாபங்கள் பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டு உங்களுக்கு அவப்பெயரைத் தோற்றுவிக்கக் கூடும். குடும்பத்தில் சிறு சலசலப்புகள் தொடர்ந்து இருந்து வரும். பொருளாதார நிலை நல்ல முன்னேற்றத்தினைக் கண்டு வரும்.
பொருள்வரவினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு சேமிப்பில் ஈடுபடுவது எதிர்காலத்திற்கு நன்மை தரும். உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு உண்டாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்களால் இழப்பினை சந்திக்க நேரலாம். பிள்ளைகளோடு கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பு உண்டு. சிந்தனையில் சிறிது குழப்பம் இருந்து வருவதால் ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு குணத்தினை வெளிப்படுத்தி அடுத்தவர்களால் உங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாத நிலையைத் தோற்றுவிப்பீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். பூர்வீக சொத்துகளில் பாகப்பிரிவினை பற்றிய பேச்சுகள் எழலாம். தொழில் முறையில் உங்கள் உழைப்பின் அருமையை மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள். கலைத்துறையினர் தொழில் முறையில் புதிய வாய்ப்பினைப் பெறுவர். உழைப்பால் உயர்வடையும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 29, 30.
பரிகாரம்: வியாழன்தோறும் ஸ்கந்தகுரு கவசம் படித்து வாருங்கள்.
ராசிநாதன் சனி பகவானின் பார்வை பலம் தொடர்வதால் இந்த மாதத்தில் அனுகூலமான பலன்களை எதிர்கொள்ள உள்ளீர்கள். ராசிநாதனின் சஞ்சாரமும், ஒன்பதாம் இடத்தில் குருபகவானின் அமர்வும் தர்ம சிந்தனைகளை மனதில் அதிகரிக்கச் செய்யும். பொதுக்காரியங்களில் முன் நின்று செயல்பட வேண்டிய சூழலை உருவாக்கும். பிடிவாதக்காரர்களாகிய நீங்கள் இந்த மாதத்தில் சற்று விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உருவெடுக்கும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். பொருள் வரவு சீராக இருந்துவரும். பேசும் வார்த்தைகளில் அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்லும்படியான கருத்துகள் அதிகமாக இடம்பிடிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் சற்று சிரமத்தினைத் தரும் வகையில் அவ்வப்போது பழுதாகி நிற்கும்.
வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிட்டும் நேரத்தில் அவற்றின் பராமரிப்பு செலவு அதிகரிக்கக் கூடும். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் இருந்து வரும். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் உறவினர்களோடு மனஸ்தாபம் தோன்றுவதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சற்று சிரமத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளால் ஒரு சில விவகாரங்களில் கூடுதல் செலவினை சந்திக்க நேரலாம். சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் சம்பந்தப்பட்டபிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் உயரும். தொழில் முறையில் சிறப்பான செயல்பாடுகள் உங்களை தனித்துக் காட்டும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் கொள்ள நேரிடும். கலைத்துறையினர் தங்கள் முயற்சியில் வெற்றி காண அதிக அலைச்சலைக் காண்பர். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1, 2.
ஜென்ம ராசியில் கேதுவின் இணைவினைப் பெற்றுள்ளது ஒருபுறம், அஷ்டம ஸ்தானத்தில் குருவின் அமர்வு ஒருபுறம் என சிரமமான சூழல் உண்டானாலும், பொறுமையாக செயல்பட்டு வந்தீர்களேயானால் பிரச்னை ஏதுமின்றி நிம்மதி காண இயலும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏழாம் பாவத்தில் வலிமையான கிரஹங்களின் சஞ்சாரம் ஓரளவிற்கு முன்னேற்றத்தினைத் தரும். இக்கட்டான சூழலில் எவர் மூலமேனும் உதவி கிடைக்கக் காண்பீர்கள். உடல்நிலை மற்றும் மன நிலை இரண்டையும் ஒரே சீராக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஒரு சில விவகாரங்களில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். பொருளாதார நிலையில் சிறிது சுணக்கம் காண நேரிடும். அநாவசிய செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு கரையக்கூடும். உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவியாகத் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு சாதனங்களாக பயன்படும்.
உறவினர்கள் வழியில் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேரிடலாம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. மாணவர்கள் தேர்வு நேரத்தில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடுவது நன்மை தரும். பிள்ளைகளின் செயல்கள் மனமகிழ்ச்சி தரும் வகையில் அமையும். உடல்நிலையில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் கொடுக்கல், வாங்கலை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். பயனற்ற செலவுகளால் சற்று திக்குமுக்காடிப் போவீர்கள். பூர்வீகச் சொத்துகளில் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். தொழில் முறையில் மந்தமான சூழல் அகன்று பரபரப்பாக செயல்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கூடுதல் சுமையினை காண நேரிடும். கலைத்துறையினர் நண்பர்களின் துணையுடன் முன்னேற்றம் காண்பர். மன உறுதியுடன் செயல்பட்டு சமாளிக்க வேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 3, 4.
பரிகாரம்: சனி தோறும் நரசிம்மரை வணங்கி வாருங்கள்.
குரு பகவானை ராசிநாதனாகக் கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் சற்று சாதகமான கிரக சூழல் நிலவுகிறது. பிரச்சினையைத் தரும் ஆறாம் பாவத்தில் வலிமையான கோள்கள் அமர்ந்திருந்தாலும் கூட குரு பகவானின் பார்வை பலத்தினால் நன்மை கண்டு வருவீர்கள். ஏதோ ஒரு காரணத்தினால் தடைபட்டிருந்த பொருள் வரவு தடை நீங்கி மீண்டும் வரத்துவங்கும். பொருளாதார நிலை உயர்வடைவதோடு சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பும் உருவாகும். புதிய சொத்து வாங்குவதற்கான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். அதிகம் பேசுவதை விட அர்த்தத்தோடு பேசுவதன் அவசியத்தை உணர்வது நல்லது. முன்பின் தெரியாத நபர்களிடம் அதிகம் பேசாது அமைதி காக்க வேண்டியது அவசியம். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில் முறையில் மிகுந்த பயனைத் தரும். புதிய நண்பர்களின் சேர்க்கை மனதிற்கு நிம்மதியைத் தரும்.
மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பான வெற்றியினைக் கண்டு வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் வெளியூர் பயணத்திற்கான வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குவதில் செலவுகள் அதிகரிக்கும். சிறிது நாட்களாக மனதில் இருந்து வந்த குழப்பமான நிலை மாறி தெளிவான சிந்தனையோடு செயல்பட்டு வருவீர்கள். வாழ்க்கைத்துணையின் நெடுநாளைய விருப்பத்தினை நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் துணை தக்க சமயத்தில் கைகொடுக்கும். பூர்வீகச் சொத்துகள் ஆதாயம் தரும் வகையில் அமையும். பொதுக்காரியங்களில் முன்நின்று செயல்பட வேண்டிய சூழல் உருவாகும். தொழில் முறையில் வளைந்து கொடுக்க வேண்டிய நேரத்தில் வளைந்தும், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரத்தில் நிமிர்ந்தும் செயல்பட்டு வெற்றி கண்டு வருவீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மை உங்கள் கௌரவத்தினை உயர்த்தும். நற்பலன்களைக் காணும் நேரம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: செப்டம்பர் 5, 6, 7.
இப்பாடத்தில், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியல் சட்ட திருத்தங்கள், ஐந்தாண்டுத் திட்டங்கள், மக்களாட்சி, இந்தியப் பாதுகாப்பு முறைகள், இந்திய அடிப்படை உரிமைகள் போன்றவை அடங்கும். மத்திய, மாநில அரசுகளின் உறவுகள், அரசியல் பொருளாதார நிர்வாக உறவுகள், இந்திய தேர்தல் கமிஷன், தேர்தல் சீர்திருத்தங்கள், நேர்முக, மறைமுகத் தேர்தல்கள், நீதித்துறை, நீதிமன்றப் பணிகள், உயர்நீதி மன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் உள்ள வேறுபாடுகள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 32 மற்றும் 226 பிரிவு விதிகள், பொதுநல வழக்கு போன்ற தகவல்களையும் சேகரித்துப் படிக்க வேண்டும்.
தற்காலத் தேசிய நிகழ்வுகள் மற்றும் சமூக நலம் பயக்கும் தலைப்புகளிலும் செய்திகளைச் சேகரித்து படித்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, மனித உரிமைகள், பெண்கள் முன்னேற்றம், தொழிலாளர் நலம், ஏழ்மை, பொதுவாழ்வில் ஊழல், உடல் நலம் போன்ற தலைப்புகளில் செய்திகளைச் சேகரித்துத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தீவிரவாதிகள் பிரச்சினை, மனித உரிமை மீறல், குழந்தைத் தொழிலாளர்களால் ஏற்படும் சமூகப் பொருளாதார மாற்றங்கள், வறுமை ஒழிப்பு, கிராமப்புற முன்னேற்றம், தேசிய மக்கள்தொகைக் கொள்கை, தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், சுற்றுப்புறச் சூழல் பிரச்சினைகள், மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், தீவிரவாதத் தாக்குதல் இந்தியாவில் ஏற்படுத்திய விளைவுகள், தேசிய அமைப்புகள், தேசியக் குழுக்கள், மீனவர் பிரச்சினைகள், கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம், முல்லைப் பெரியாறு பிரச்சினை பற்றியும் பொது அறிவுப் பாடத்தில் அதிக கேள்விகள் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இவைதவிர, கடந்த 2015ல் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டம், நிதி ஆயோக் என்னும் அமைப்பு, மங்கள்யான் குழுவுக்கு விருது, கிரிக்கெட் சூதாட்டம், அக்னி-5 ஏவுகணை, லோக் அதாலத், பாரத பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள், காவிரியின் மேகதாது, சென்னை, கடலூர் வெள்ளப் பாதிப்புகள், அப்துல்கலாம் மறைவு போன்ற பல முக்கிய நிகழ்வுகளையும் தெளிவாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்திய மற்றும் உலகப் புவியியல் (India and World Geography)
பொது அறிவுப் பாடத்தில் இந்திய மற்றும் உலக புவியியல் பாடம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஏற்படும் பருவ மாற்றங்களால் இந்திய வேளாண்மையில் ஏற்படும் விளைவுகள், இந்திய தட்பவெப்ப நிலை ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் இடம்பெறும். மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் சில கேள்விகள் அமையலாம். பெண்கள் – ஆண்கள் விகிதம், பிறப்பு-இறப்பு விகிதம், மக்கள் தொகைப் பெருக்கம், தேசிய மக்கள் தொகைக் கொள்கை, இந்திய வேளாண்மை, பருவ கால மண்டலங்கள், பசுமைப் புரட்சி, மஞ்சள் புரட்சி, நீலப் புரட்சி, வெள்ளைப் புரட்சி, சமூக – வேளாண்மைக் காடுகள், நகரமயமாக்குதல், சுற்றுலா, நிலநடுக்கம், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்றவற்றையும் முழுமையாகத் தெரிந்து வைத்திருப்பது புவியியல் பாடத்தில் அதிக மதிப்பெண்கள் பெற உதவும்.
இந்தியா மற்றும் உலக உறவுகள் (India and World Geography)
இந்தப் பகுதியில், இந்தியாவுக்கும் மற்ற நாடுகளுக்குமான உறவுகள், தொடர்புகள், உலக அளவிலான சட்டங்கள் பற்றி கேள்விகள் இடம்பெறும். யு.எஸ்.- ஆப்கான் போர், இந்திய – அமெரிக்க உறவுகள், தெற்கு ஆசிய நாடுகளின் உறவுகள், உலக நாடுகளின் உறவுகள் ஆகியவற்றைப் பற்றியும் தகவல்கள் சேகரித்துப் படிக்க வேண்டும்.
உலகளாவிய தீவிரவாதம், சுற்றுலாத் துறையின் மூலம் கிடைக்கும் வருமானம், உலகளாவிய வர்த்தகத்தின் மூலம் பன்னாட்டு உறவுகளின் தன்மைகள் ஆகியவற்றைப் பற்றியும் கேள்விகள் வரலாம். இவை தவிர, ஈரான், ரஷ்யா, பாகிஸ்தான், பங்களாதேசம், நேபாளம், மத்திய ஆசியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அணுக் கொள்கைகள், கடல் வணிகம், ஏற்றுமதியின் நிலை, இந்தியக் கடலில் இந்தியாவின் நிலை போன்றவற்றோடு WTP, ASEAN, SAARC, G-8, G-20, G-15
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post இந்திய அரசியல் (Indian History) appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
Source: storiesintamil.in
ஆசிரியர் தகுதித் ( T.E.T) தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்
ஆசிரியர் தகுதித்( T.E.T)தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்:
இந்தியாவில் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த, நாடு முழுவதும் மிக அதிக அளவிலான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது. 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களின் தரத்தை உறுதிப்படுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுத் தேர்வு
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின் படி, தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது.இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.
தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள்
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் வெளியிட்டுள்ள விதிமுறைகளின் படி ஆசிரியர் பட்டயம், பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிப்பவர்கள்.
தேர்வுத் தாள்கள்
இத்தேர்வுகள் இரண்டு தாள்களைக் கொண்டது. தேர்வு வினாக்கள் அனைத்தும் ஒரு மதிப்பெண் வினாக்களாக இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் மொத்த மதிப்பெண்கள் 150. ஒவ்வொரு தேர்வுக்குமான காலம் 90 நிமிடங்கள்.
முதல் தாள்
முதல் தாளுக்கான கேள்வி அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்
1.குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை – 30 மதிப்பெண்
2.மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி)- 30 மதிப்பெண்
3.மொழித்தாள் -2 (விருப்ப மொழி)- 30 மதிப்பெண்
4.கணிதம் – 30 மதிப்பெண்
5.சுற்றுச்சூழலியல் – 30 மதிப்பெண்
(ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும்)
இரண்டாம் தாள்
இரண்டாம் தாளுக்கான கேள்வி அமைப்பு கீழ்காணும் தலைப்பில் குறிப்பிட்ட மதிப்பெண்களுக்குரியதாக இருக்கும்
1.குழந்தைகள் மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறை – 30 மதிப்பெண்
2.மொழித்தாள் -1 (கற்பிக்கும் மொழி)- 30 மதிப்பெண்
3.மொழித்தாள் -2 (விருப்ப மொழி)- 30 மதிப்பெண்
4.கணிதம் – 30 மதிப்பெண்
5.சுற்றுச்சூழலியல் – 30 மதிப்பெண்
(கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் மட்டும்)
பிற தகவல்கள்
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) முடித்தவர்கள் மட்டும்) முதல் தாளையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (கல்வியியல் பட்டம் பெற்றவர்கள்) இரண்டாம் தாளையும் எழுத வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த விரும்புவோர் (ஆசிரியர் பயிற்சி (பட்டயப் படிப்பு) மற்றும் கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் என இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்கள்) இரண்டு தாள்களையும் எழுத வேண்டும்.
இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால், அது 7 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் இந்தத் தேர்வில் தனது மதிப்பெண்ணை அதிகரித்துக்கொள்ள மீண்டும் தேர்வு எழுதலாம்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்தச் சான்றிதழில் பதிவு எண், தேர்வெழுதிய ஆண்டு, மாதம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post ஆசிரியர் தகுதித் ( T.E.T) தேர்வில் பங்கேற்பதற்கான தகுதிகள் appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
பல பெற்றோர்கள் தன் பிள்ளைகள் என்ஜினியர் ஆக வேண்டும் என்று கனவு காண்பவர்கள், மதிப்பெண் குறைந்ததும் தகுதியின் அடிப்படையில் போகமுடியாத சூழலிலும், நிர்வாக ஒதுக்கீட்டில் போவதற்கு பொருளாதாரம் இடம் கொடுக்காத சூழ்நிலையில் கவலை கொள்கிறார்கள். மேலும் இன்று கலைக் கல்லூரியில் படிப்பது எதோ சும்மா இருப்பதற்கு பதில் படிப்பது என்ற தவறான கருத்தும் சில பெற்றோர்களிடம் காணப்படுகிறது.
ஆர்வத்திற்கு ஏற்ற சரியான இளநிலை படிப்பை தேர்ந்தெடுத்து மூன்று ஆண்டுகள் படித்து அதன்பின் முதுநிலைப் படிப்பை முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ, தொலைதூரக்கல்வி வழியிலோ படித்திக்கொண்டே இளநிலை படிப்பைக்கொண்டு உங்கள் துறை சார்ந்த வேலைக்கு போகமுடியும். இரண்டு ஆண்டுகள் படித்து முடித்ததும், முதுநிலை கல்வியுடன் வெளியில் வரும்போது இரண்டு ஆண்டுகள் வேலைப்பார்த்த அனுபவமும் இருக்கும். இளநிலை படிக்கும்போதே உங்கள் துறை சார்ந்த பல்வேறு பணிகளில் ஈடுபட்டு உங்கள் துறை சார்ந்த அறிவை விசாலமாக்கிக் கொள்ளவேண்டும். உங்கள் படிப்பு என்பது வேலைக்கு செல்லும்பொழுது ஓரு 20 சதவீதம் மதிப்பு கொண்ட ஒரு தகுதிதானே தவிர, வேலை கிடக்க மீதி 80 சதவீதம் உங்கள் தனிப்பட்ட திறமையும், அறிவும் மட்டுமே உங்களுக்கு கைகொடுக்கும். எனவே, பொறியியல் படிப்பிற்கு இணையான மதிப்பு கலை அறிவியல் கல்லூரிகளில் படிக்கும் படிப்புகளுக்கும் உள்ளது என்பதை இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.
எப்போதுமே அனைவரும் தேர்ந்தெடுக்கும் படிப்பைவிட வேலைவாய்ப்பு வழங்கும் குறைவானவர்கள் தேர்ந்தெடுக்கும் படிப்புகளை தேர்ந்தெடுப்பது வேலைவாய்ப்பிற்கு மிகவும் பயன்படும்.
கலை அறிவியல் படிப்புகளில் இன்றைய அளவில் வேலைவாய்பு அதிகம் உள்ள சில படிப்புகளை இங்கே பார்ப்போம்:
மொழியியல் துறை :
உலகளாவிய பொருளாதாரம் கொண்ட இன்றைய காலக்கட்டத்தில் மொழியியல் துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதில் மத்திய – மாநில அரசுத் துறைகளில் பன்மொழி அறிவு உடைய தகுதியுடையவர்களுக்கு எப்போதும் தேவை இருக்கிறது. உதாரணமாக, மொழிபெயர்ப்பாளர், ஆசிரியர், விமானத்துறை, கப்பல் துறை, மென்பொருள் நிறுவனங்கள், கலை மற்றும் கலாச்சாரத்துறை, ஹோட்டல் மேலாண்மை, செயலாளர்-உதவியாளர் பணிகள், வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கான மொழிபெயர்ப்பாளர், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பல துறைகளில் அறிவிப்பாளர் பணிகள் மற்றும் பத்திரிகை என்று மொழியியல் படித்தவர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது.
இதற்கு ஆங்கிலம், தமிழ் மொழிப்புலமையுடன் வேறு ஒரு மொழிமையை கற்றுக்கொள்வது நல்லது. உதாரணமாக, B.A (Bulgarian), B.A.(Chinese), B.A.(Urdu), B.A. (Arabic) போன்று ஏதாவது ஒரு இளநிலைப் படிப்பை முதுநிலைப் படிப்பை தொடந்து முடித்துவிடுவது நல்லது.
இது படிப்பதற்கு செலவும் குறைவு, அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளும் எளிதாகக் கிடைக்கும்.
பேச்சு மற்றும் மொழி நோய் ஆராய்ச்சி (Speech and Language Pathology)
இந்தியாவில் இன்று 5 முதல் 8 விழுக்காடு வரை மக்களுக்கு பேச்சு , மொழி சம்பத்தமான குறைபாடு இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்தப் படிப்பை படித்து பயிற்சி பெற்றவர்களை Speech-Language Pathologists (SLPs) அல்லது Speech Language Therapists (SLTs) என்று அழைப்பார்கள். இவர்கள் பேச்சு உருவாகும் விதம், குரல், உச்சரிப்புப் பிரச்சினைகள், திக்குவாய் போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை வழங்குவார்கள். இது மிகவும் அதிகம் தேவையான அதே சமயத்தில் போட்டிகள் அதிகம் இல்லாதத் துறையாகும்.
இந்தத் துறையில் நிபுணத்துவம் பெற்று வாய்ப்புகளைப் பெற கீழ்கண்ட படிப்புகளை படிக்கவேண்டும்:
BASLP (Bachelors in Speech Language Pathology and Audiology) என்பது நான்கு வருடப் படிப்பாகும். இதற்கு கல்வித்தகுதி +2 அல்லது அதற்குச் சமமான ஒரு தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது கணினி அறிவியல் பாடங்களை ஏற்று தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
Sc. (Hons) Speech Hearing. இது மூன்று வருடப் படிப்பாகும்.
இளநிலைப் படிப்பை முடித்தவர்கள் SC, M.Ed. மற்றும் முனைவர் பட்டம் வரை படித்து பல்வறு வளர்ச்சிகளை அடையலாம்.
விருந்தோம்பல் மற்றும் இல்லப் பராமரிப்பு (Hospitality & Housekeeping)
இந்தியாவில் இன்று மெடிக்கல் டுரிசம் வளர்ச்சியால் இந்தியாவிற்கு சிகிச்சை பெறுவதற்கு வரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் மென்பொருள் துறை, தொழில் துறை போன்றவற்றால் தாங்கும் விடுதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இதில் வரும் விருந்தினைரை உபசரித்து அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்ய அதிகம் பேர் தேவைப்படுகிறார்கள். மேலும் உணவகங்கள், தங்குமிடம், சூதாட்ட விடுதிகள், உணவு பரிமாறும் அமைப்புகள், விடுமுறை காலத் தங்குமிடங்கள், சுற்றுலாப் பயணிகளோடு தொடர்புடைய பல இடங்களில் விருந்தோம்பல் சார்ந்த வேலைகள் அதிகமாக உள்ளன.
இதில் ஆர்வமுள்ளவர்கள் Sc. (Hospitality & Hotel Administration) என்ற மூன்று வருடப் படிப்பை படிக்கலாம். அல்லது Advance Diploma in Hospitality, certificate Course in Institutional Hospitality Management போன்ற உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒன்றை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
உளவியல் (Psychology):
மனிதனின் மனம் எப்படி இயங்குறது என்பதைப் பற்றி ஆராய்வதே இந்த படிப்பின் நோக்கமாகும். இது மனிதனின் மனம் வேலை செய்யும் விதம மற்றும் நடத்தை போன்றவற்றை அறிந்து அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அதை நிவர்த்தி செய்யும் முறையை சொல்லிக்கொடுக்கிறது. இது சமூகம், குழந்தை, தொழில், சிகிச்சை, பரிசோதனை, கல்வி பல்வேறு சிறப்பு உளவியல் துறைகள் உள்ளன.
இதற்கு உங்களுக்கு அருகில் உள்ள கல்லூரியில் A (Psychology) மூன்று ஆண்டு படிப்போ அல்லது வேறு பதட்டம், பட்டைய படிபுகலோ படிக்கலாம்.
இந்தப் படிப்பை படித்து முடித்ததும் சுகாதாரத்துறை, மனநல மருத்துவ மையங்கள், மருத்துவமனைகள், மருத்துவர்களின் அலுவல்கள், போதை-குடி ஆகியவற்றிக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் என்று பல்வேறு வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
சமையல் கலை (Catering)
இன்று இந்தியாவில் பல்வேறு நாட்டு உணவு வகைகளை ருசிக்கும் மக்கள் அதிகமாகிவிட்டார்கள். கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும் நிலையில் இன்று பெரும்பாலும் உணவகங்களில் உண்ணும் பழக்கமும், பண்டிகை மற்றும் விழாக்களை கொண்டாட ஹோட்டல்களுக்கு செல்லும் வழக்கமும் அதிகமாகியுள்ளது. இன்று தொழில் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு வரும் நிலையில் பன்னாட்டு உணவுடன் விடுதிகள் வர ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் இதில் பணி புரியவும், வெளிநாடுகளில் சென்று ருசியான உணவுகளை செய்து வாடிக்கையாளர்களின் தேவைகளை அளிக்கும் கேட்டரிங் இன்று மிகவும் அதிக வேலைவாய்ப்புகளைக் கொண்ட துறையாகும். இத்துடன், ஆங்கில அறிவும் இருந்தால் உலகம் முழுதும் சுற்றும் வாய்ப்பு இருக்கிறது.
இதனால் இந்தப் படிப்பு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.
இதில் கீழ்காணும் படிப்புகள் வழங்கப்படுகின்றன:
B.Sc. (Catering & Hotel Management ) – மூன்று ஆண்டுகள்
B.Sc. (Catering)
Certificate Course In Catering and Hotel Management
Diploma (Catering & Hotel Administration) -2 ஆண்டுகள்
Diploma (Catering Technology) – 2 ஆண்டுகள்
Certification Course in Bakery & Confectionery)
இதில் படித்தவர்கள் பெரும்பாலும் கீழ்கண்ட துறைகளில் வேலைவாய்ப்பை பெறலாம்:
பயணக் கப்பல்கள்
உணவகங்கள், தங்குமிடங்கள்
விமான கேட்டரிங் நிறுவனங்கள்
ரயில் கேடரிங் நிறுவனங்கள்
வங்கி கேட்டரிங் நிறுவனங்கள்
ராணுவ கேட்டரிங் நிறுவனங்கள்
மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள் சார்ந்த கேட்டரிங் அலுவலக வாய்ப்புகள்
எனவே, அனைவரும் பொதுவாக படிக்கும் படிப்பைவிட போட்டிகள் குறைவாக உள்ள, அதே நேரத்தில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள அநேகத் துறைகளை தேர்ந்தெடுத்து வெற்றிபெற வாழ்த்துக்கள்!
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post மார்க் குறைந்தாலும் மார்க்கமுண்டு விரிந்திருக்கும் கல்வி வாய்ப்புகள் appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்கள்: –
அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்களில் அறிவுக்கூர்மை தொடர்பான சூத்திரங்கள் (Formulaes) மற்றும் முறைகளை (Methods) நன்கு நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும், ஏனனெனில் இத்தேர்வில் அறிவுக்கூர்மை மற்றும் திறனறிதல் தொடர்பாக 25 கேள்விகள் கேட்கப்பட உள்ளன
அறிவுக் கூர்மைப் பகுதி
கொடுக்கப்பட்டுள்ள தரவுகளை தகவலாக மாற்றுதல்-புள்ளிவிவரம் சேகரித்தல்- வகைப்படுத்துதல் மற்றும் அட்டவனைப் படுத்துதல்-குழு-வரைபடம் மற்றும் விளக்கபடம்-முழுமைத் தொகுதியாக தகவல்களை தெரிவித்தல்-கொடுக்கப் பட்ட தகவல்களை பகுப்பாராய்வு செய்தல்- சதவீதம்-மீ.பெ.வ. மற்றும் மீ.சி.ம, விகிதம் மற்றும் விகிதாச்சாரம்- தனிவட்டி-கூட்டு வட்டி- பரப்பளவு-கன அளவு- நேரம் மற்றும் வேலை-தர்க்க அறிவு-புதிர்கள்- பகடை தொடர்பானவை- படம் தொடர்பான தர்க்க அறிவு – எண் முறை தொடர்பானவை- முடிவெடுத்தல் மற்றும் பிரச்சனைகளை தீர்த்தல்.
குறிப்பு : 6 லிருந்து 10 வரை உள்ள பாடப்புத்தகங்களை முழுவதுமாக படியுங்கள் ஏனென்றால் சில வினாக்களுக்கு உங்களுக்கு விடை தெரியாமல் இருக்கலாம். அப்போது அவ்வகையான வினாக்களுக்கு தவறான விடையை உங்களால் கண்டுபிடிக்க முடியும் எனவே அனைத்து தவறான பதில்களைத் தவிர்த்து அக்கேள்விக்கான விடையை கண்டு பிடிக்க முடியும்.
படிக்கவேண்டிய புத்தகங்கள்
பாடப்புத்தகத்தில் உள்ள கணக்குகள்
திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை
டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வில், 100 பொது அறிவு கேள்விகளில் 25 கேள்விகள் திறனறிதல் மற்றும் புத்திக்கூர்மை பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. இதில் குறைந்த பட்சம் 20 கேள்விகளுக்காவது சரியாக விடையளிப்பது அவசியமாகும்.
எண்கள், சுருக்குதல், சதவீதம், மீ.சி.ம, மீ.பெ.வ விகிதம் மற்றும் விகிதாச்சாரம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பு, கன அளவு, தர்க்கவியல், புதிர், பகடை, எண் மற்றும் எழுத்துக்களின் தொடர் வரிசையிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன.
கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட பாடம் என்பதாலும், நேரத்தை விழுங்கும் கேள்விகள் என்பதாலும் மாணவர்கள் மத்தியில் இப்பகுதி குறித்து அச்சம் நிலவுகிறது. உண்மையில் மற்ற பாடங்களை விட இந்த பகுதி எளிமையானதாகும். முறையாக கற்பதோடு, தொடர் பயிற்சி எடுத்தால் இப்பகுதியில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். ஒரு கேள்விக்கு குறைந்தபட்சம் 30 வினாடிகள் முதல் அதிக பட்சம் 1 நிமிடத்துக்குள் விடைகாண முயற்சிக்க வேண்டும்.
மற்ற பாடங்கள் போல் அல்லாமல், இப்பகுதிக்கு தொடர் பயிற்சி மிகவும் அவசியமாகிறது. 2012 முதல் TNPSC தேர்வு களில் கேட்கப்பட்ட திறனறிதல் பகுதி கேள்விகளை போட்டுப் பழக வேண்டும். பயிற்சியின்போது தவறான விடை கிடைத்தாலும் கூட அது ஒருவகையில் நல்லதேயாகும். அந்த தவறு தேர்வின்போது வராமல் பார்த்துக் கொள்ள பயிற்சி உதவும்.
இலக்கியம், கலை என எந்த புலத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் 10-ம் வகுப்பு வரை படித்த கணிதமே இந்த பகுதிக்கு போதுமானது ஆகும்.
இங்கு வினா-விடைகளோடு விளக்கமும் தரப்பட்டுள்ளது. இந்த விளக்கங்களை முன்மாதிரியாகக் கொண்டு கடந்த ஆண்டு விடைத்தாள்கள் மற்றும் மாதிரி விடைத்தாள்களில் பயிற்சி பெறலாம்.
கணிதம் கற்பித்தல், இந்திய கணிதவியலார் மற்றும் அவர்களது புத்தகங்கள், வெளிநாட்டு கணிதவியலாரின் பங்குகள் மற்றும் அவர்களது புத்தகங்கள், பாடக்குறிப்பு, கற்பித்தல் துணைக்கருவிகள், நவீன உளவியல் அறிஞர்களின் கூற்றுகள் மற்றும் தேற்றங்கள்-
எடுத்துக்காட்டாக பியாஜே, மாஸ்லோ, கேக்னி ஆகியோரது கூற்றுகள், தொடக்கநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் கணிதம் கற்பித்தலின் குறிக்கோள்கள், கற்பிக்கும் முறைகள் அவற்றின் நன்மைகள் மற்றும் தீமைகள் ஆகியவற்றைப் பற்றிய குறிப்புகள், புதுவிதச்சோதனை முறைகள் ஆகியவற்றைப் படித்துக்கொள்ள வேண்டும்.
எண்ணியல்
அடுக்குக்குறி விதிகள்,
BODMAS விதிகள்,
மீ.பொ.வ. மற்றும் மீ.சி.ம.,
பின்னங்கள்,
வர்க்க மூலம் மற்றும் கணமூலம்
, இயற்கணிதம்
, விகிதம்,
விகித சமம்,
நேர்விகிதம்,
எதிர்விகிதம்,
மெட்ரிக் அளவைகள்,
வாழ்வியல் கணிதம்,
தனிவட்டி,
கூட்டுவட்டி,
அளவைகள்,
நாட்காட்டி,
கடிகாரம்,
வடிவியல்,
மையப்போக்கு அளவைகள் -சராசரி, இடைநிலை, அளவு, முகடு மற்றும் வீச்சு,
பரப்பளவு மற்றும் சுற்றளவில் ஏற்படும் மாற்ற சதவீதங்கள்,
ஆயத்தொலை வடிவியல்- இரண்டு புள்ளிகளுக்கு இடைப்பட்ட தொலைவு
வரைபடங்கள், நிகழ்தகவு ஆகிய பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
போட்டித்தேர்வு வினாக்கள் தொகுப்பு உள்ள QUANTITATIVE APTITUDE புத்தகங்கள் மூலமாக மேற்கண்ட பாடப்பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்களை தயார்செய்து கொண்டால் கணிதப் பாடப் பகுதியில் மதிப்பெண்களையும் கண்டிப்பாக பெறமுடியும்,
மேலும்QUANTITATIVE APTITUDE பகுதிக்கு தயாரிக்கப்பட்ட வினா வங்கிகளையும் பயன்படுத்தலாம். வினாத்தாள் வடிவமைப்பு வினா வகைகள் ஆகியவற்றைப் பற்றிய தெளிவான அறிவு, நாம் முழுமதிப்பெண்கள் பெறுவதற்கு உறுதுணையாக அமையும்.”
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post அறிவுக்கூர்மை மற்றும் திறனறிவுத் தொடர்பான பாடங்கள் appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
Source: storiesintamil.in
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை எப்படி படிக்க வேண்டும்?
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். எதிர்ப்புக்கள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். பயணத்தால் அளவோடு நன்மை ஏற்படும். ஆன்மிகவாதிகளுக்கு வரவேற்பு கூடும். ஞான மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு ஏற்படும். 6-ல் குருவும், 8-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. யாருக்கும் ஜாமீன் கொடுக்க வேண்டாம். பொருளாதார விஷயங்களில் எச்சரிக்கை தேவை. எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. சகோதர நலனில் கவனம் தேவைப்படும். உடன்பிறந்தவர்களுக்கும் உங்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். 17-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடத்திற்கு மாறினாலும் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 16.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: அஷ்டமச் சனிக்கு அர்ச்சனை செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத திடீர்ப் பொருள்வரவுக்கும் இடமுண்டு. தெய்வப்பணிகளில் ஈடுபாடு கூடும். மக்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. பிறருடன் சுமுகமாகப் பேசிப் பழகுவது நன்மையளிக்கும். முக்கியஸ்தர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் சிலருக்கு இந்த நேரத்தில் கிடைக்கும்.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1 3, 5, 6, 7
பரிகாரம்: முருகனை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிர்ப்புகள் விலகும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் வருவாயோ கிடைக்கும். 17-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். பந்தயங்களிலும், வழக்கிலும் அனுகூலமான போக்கு தென்படும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் தங்கள் நிலைமையில் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 14.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இளநீலம், கருஞ்சிவப்பு.
எண்கள்: 4, 6, 8, 9.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும். பெற்றோர் மற்றும் பெரியவர்களிடம் பணிவு தேவை.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லை. நண்பர்கள், உறவினர்கள் ஆகியோரால் முக்கியமான ஓரிரு காரியங்கள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். 3-ல் குருவும் 5-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவதால் மக்கள் நலனில் கவனம் தேவை. அதிர்ஷ்ட வாய்ப்புக்களை எண்ணி ஏமாற வேண்டாம். செய்தொழில் எதுவானாலும் அதில் முழுகவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 16.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 5, 6, 9.
பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்ல தகவல் வந்து சேரும். தோற்றப்பொலிவு கூடும். செய்தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்பு உருவாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்து வரும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பணவரவு கூடும். புதிய சொத்துக்கள் சேரும். மக்களால் மனமகிழ்ச்சி பெருகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சலால் உடல் அசதி அதிகமாகும். சோர்வும் சோம்பலும் ஏற்படும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் 17-ம் தேதி முதல் மந்தநிலை விலகி, முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 16.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: நாக தேவதைகளை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சிறக்கும். முயற்சி வீண்போகாது. உழைப்புக்குரிய பயன் கிடைத்துவரும். சமுதாய நல முன்னேற்றப்பணிகளில் ஈடுபாடு கூடும். தகவல் தொடர்பு ஆக்கம் தரும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயமும் கிடைத்துவரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிப் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப்பணியாளர்களது எண்ணம் ஈடேறும். வியாபாரம், கணிதம், எழுத்து மற்றும் பயணங்களில் ஈடுபாடு உள்ளவர்கள் விழிப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் 11-ல் புதனும் சுக்கிரனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். பண வரவு கூடும். புதிய பதவிகளும் பட்டங்களும் உங்களைத் தேடிவரும். நிர்வாகத்திறமையால் சாதனைகளை ஆற்றுவீர்கள். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும். தகவல் தொடர்புத்துறைகளைச் சேர்ந்தவர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். நிலபுலங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். 5-ல் கேதுவும், 12-ல் குருவும் உலவுவதால் மக்களால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பொருள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது.
உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் ராகுவும் 11-ல் குருவும் உலவுவதால் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழ அடிகோலப்படும். பொருளாதார நிலை உயரும். செயலில் வேகம் கூடும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். விஞ்ஞானிகள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், தரகர்கள், கணிதத்துறையினர், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். பயணம், லாபம் தரும். மக்கள் நலம் சீராகும். மக்களால் அனுகூலமும் உண்டாகும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். 17-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடத்திற்கு மாறுவதால் செய்து வரும் தொழில் விருத்தி அடையும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 12, 16, 17.
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெண்சாம்பல்நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 5.
பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். ஆன்மிகவாதிகள், அறப்பணியாளர்கள், ஜோதிடர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். எதிர்ப்புக்கள் இருந்தாலும் அவற்றைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். இதர கிரகங்களின் நிலை சிறப்பாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். அரசுப்பணிகளில் எச்சரிக்கை தேவை. தொழிலாளர்கள், விவசாயிகள், சுரங்கப்பணியாளர்கள், இஞ்சினீயர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 14, 16, 17.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: விரயச் சனிக்கும் செவ்வாய்க்கும் ஆராதனைகளைச் செய்வது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் அகலும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். சுபகாரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட வகையில் ஆதாயம் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வியாபாரம் சூடுபிடிக்கும். புதிய முயற்சிகள் கைகூடும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகமாகும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். வாழ்க்கைத்துணைவரால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு ஏற்படும். மக்கள் நலம் சீராகும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டு விலகும். அந்நியர் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தில் விழிப்பு தேவை.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் 10-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். செய்தொழில் விருத்தி அடையும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பொறியியல், சட்டம், காவல், ராணுவத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்புத் தருவார்கள். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், வியாபாரிகள் ஆகியோர் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 11, 12, 14.
திசைகள்: தெற்கு, மேற்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு, கருநீலம்.
எண்கள்: 1, 8, 9.
பரிகாரம்: குருவுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடவும். வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழில் வளர்ச்சி பெறும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தக, வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். பண நடமாட்டம் அதிகமாகும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். சுக்கிரன் 6-ல் இருப்பதால் கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் பிரச்னைகள் அதிகரிக்கும். ஆடவர்களுக்குப் பெண்களால் தொல்லைகள் ஏற்படும். வீண் ஆடம்பரம் கூடாது. கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. 17-ம் தேதி முதல் அரசுப்பணிகளில் நல்ல திருப்பம் உண்டாகும்.
# இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
– NH 7.
# சேர மன்னர்கள் மட்டுமே பாடிய எட்டுத்தொகை நூல் எது?
பதிற்றுப்பத்து.
# தமிழகத்தின் தேசிய பறவை எது?
புறா.
# தமிழ் தாய் வாழ்த்து எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?
மனோன்மணியம்.
# நெல் விளைச்சல் தரும் நிலத்தில் இருந்து அதிகப்படியாக வெளிவரும்
வாயு?
– ஈத்தேன்.
# இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் யார்?
– அம்பேத்கர்.
# 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து
சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்?
– பால்.
# இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை?
– NH 7.
# ஆஸ்திரேலியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
ஜூலியா கில்போர்ட்.
# கோவா வின் பிராந்திய மொழி எது?
– கொன்கனி.
# தேசிய மனித உரிமை ஆணையம் இந்தியாவில் அமைக்கப்பட்ட ஆண்டு?
– 1993.
# இன்போசிஸ் நிறுவனத்தின் பன்னாட்டு கல்வியகம் எங்கு
அமைந்துள்ளது?
– மைசூர்.
# ஈராக் போர் தொடர்பான அமெரிக்க ராணுவத்தின் ரகசிய விவரங்களை
வெளியிட்ட இணையத்தளம்?- விகிலீக்ஸ்.
# 2009 ஆண்டிற்கென இந்திரா காந்தி தேசிய மேம்பாடு விருது யாருக்கு வழங்கப்பட்டது?
– எ ஆர் ரஹ்மான் மற்றும் சென்னையில் அமைதுள்ள ராமகிருஷ்ணா மடம்.
# இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்ற ஆண்டு?
1950.
# தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகத்தை தலைமை ஈற்று நடத்தியவர் யார்?
– ராஜகோபலாச்சாரி
# வறுமை ஒழிப்பிற்கான ஐ.நா விருது பெற்ற இந்தியர் யார்?
பாத்திமா பீவி.
# ஜீரோ வாட் பல்பு என்பது உண்மையில் எதனை வாட்கள் கொண்டது?
15 வாட்.
# உலக அமைதிக்கான நோப்லே பரிசை சிபாரிசு செய்வது எந்தநாடு?
நார்வே.
# உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஒய்வு வயது?
62 .
# காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
பென்சிலின்.
# ஆலிவ் மரங்கள் அதிகம் காணப்படும் கண்டம் எது?
ஐரோப்பா.
# லட்சத்தீவில் அதிகம் பேசப்பட்டு மொழி எது ?
மலையாளம்.
நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் – “The Real State Rank Holder”
“5 வயசுக்குள்ள பல நோய்களால் உடம்பு நோய்க் கூடாரமா ஆயிடுச்சு. அதனால எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சு; எப்பவும் சோர்வாகவே இருக்கும்; படிச்சா மனசுல தங்காது; டீச்சர் சொல்றதை புரிஞ்சுக்க முடியாது; புரிஞ்சுக்கிட்ட விஷயத்தை சரியா வெளிப்படுத்தவும் முடியாது; போர்டுல எழுதிப் போடுறதை எழுத முடியாது; அப்படியே எழுதினாலும் தப்புத் தப்பா எழுதுவேன். இதுக்கெல்லாம் காரணம் ‘டிஸ்லெக்ஸியா’ என்று சொல்லப்படுற ‘கற்றல் குறைபாடு’ தான்ன்னு சிவில் சர்வீஸ் பிரிப்பேர் பண்ணும் போது தான் தெரிய வந்துச்சு.
ஒரு வழியா 8-ம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். அதுக்கு மேல என்னைச் சிரமப்படுத்த அப்பா விரும்பல. படிப்பு தான் வரல.. லாட்டரிச்சீட்டு வியாபாரம் பண்ணியாவது பொழச்சுக்கோன்னு ஆவடியில இருந்த கடையில உட்கார வச்சுட்டார். தெருக்கள்ல போய் விப்பேன். கடையையும் பாத்துக்குவேன். தீடீர்னு லாட்டரிச் சீட்டை தடை பண்ணிட்டாங்க. கடையை மூடிட்டு சித்தாள் வேலைக்கு போனேன். என் உடல்வாகுக்கு செங்கல்லும், மண்ணும் சுமக்க முடியலே. ஜெராக்ஸ் கடைக்குப் போனேன். அதுவும் சரியா வரல. அப்புறம் சவுண்ட் சர்வீஸ், டி.வி. மெக்கானிக் சென்டர் என வாழ்க்கையில ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க அலையா அலைஞ்சேன்.
கடைசியா மெக்கானிக் ஷாப். அங்கே வேலை செஞ்சிக்கிட்டே +2க்குப் அப்ளை பண்ணினேன். அந்த வருஷம் எக்கானமிக்ஸ் சிலபஸ் மாறிடுச்சு. அது தெரியாம பழைய புக்கையே படிச்சதால அந்தப் பாடத்தில் பெயிலாகி, அட்டெம்ட்ல பாஸ் பண்ணினேன். ஆனா தனித்தேர்வரா எழுதினதால எந்தக் கல்லூரியிலும் இடம் கிடைக்கல. கடைசியில வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் B.A English சேர்ந்தேன்.
கல்லூரியில் சேர்ந்த ஒரே வாரத்தில் என்னுடைய ஆங்கில அறிவைப் பார்த்து மிரண்டு போன பேராசிரியர்கள் நீயெல்லாம் படிச்சு பாஸ் பண்ண முடியாது…ஒர்க்ஷாப்புக்கு போய் ஒழுங்கா தொழிலைக் கத்துக்கோ என்று அறிவுரை சொன்னார்கள். போகப் போக சரி பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டு, தீவிரமா படிக்க ஆரம்பிச்சேன். முதல் செம்-ல அம்மை நோய் அடுத்த செம்-ல ஒரு பெரிய விபத்து இப்படி பல தடைகளை தாண்டி இறுதியா என் பேட்சுல அரியர் இல்லாம டிகிரி வாங்கின ஒரே ஆள் நான் மட்டும் தான். பி.ஏ-வுக்கு முடிச்சதும் எம்.ஏ-வுக்கு நிறைய கல்லுரியில் அப்ளை பண்ணினேன். மாநிலக் கல்லூரியில் ‘வராண்டா அட்மிஷன்’ கிடைச்சது. வராண்டா அட்மிஷன்னா போனாப் போகுதுன்னு கொடுக்கிறது. அங்கு தான் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.
TNPSC, UPSC தேர்வுகளை எல்லாம் அறிமுகம் செய்தார்கள். எல்லாரும் தீவிரமா பிரிப்பேர் பண்ணினோம். ஆனா அவங்க வேகத்துக்கு படிக்க முடியலே. ஆனாலும் ஆர்மில செகண்ட் லெப்டினென்ட் வேலைக்கு தேர்வானேன். ஆனா பயிற்சிக்குப் போறதுக்கு முன்னாடி திரும்பவும் பெரிய விபத்து. 54 கிலோவாக இருந்த எடை 38 கிலோவாயிடுச்சு. டாக்டர்கள் கை விட்டுட்டாங்க. ஆனா நான் மனம் தளரலே. அதிலிருந்து மீண்டு வந்தேன். ஆனா, வேலை கைவிட்டுப் போயிடுச்சு.
பின்பு TNPSC குரூப் 2 எழுதி பாஸ் பண்ணினேன். A.S.O-வாக வேலை கிடைச்சுச்சு. அடுத்து குரூப் 1 தேர்வு எழுதினேன்…வெற்றி! கூட்டுறவு துறையில் துணைப் பதிவாளராக 3 வருஷம் வேலை செஞ்சேன். D.C ரேங்க் வர்ற நேரம், UPSC பாஸ் பண்ணிட்டேன். I.P.S கிடைச்சுச்சு. ஆனா எனக்கு தமிழ்நாடு கேடர் கிடைக்கல. அதனால I.R.S-ல சேர்ந்துட்டேன்…” என சிலிர்க்க வைக்கிறார் இந்திய வருமான வரித்துறையின் இணை ஆணையர் நந்தகுமார்.
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் – “The Real State Rank Holder” appeared first on MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2016 | Group 2A | VAO | TET.
Source: storiesintamil.in
வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் நினைவு சக்தி மனிதர்களுக்கு அதிக அளவில் பயன்படுகிறது. கடந்த காலத்தை திரும்பிப் பார்த்து நிகழ்காலத்தை ரசித்து, எதிர்காலத்தைபற்றி சிந்தித்து செயலாற்றும் போதுதான் வாழ்க்கையில் வெற்றி எளிதாக கிடைக்கிறது.
“கார் ஓட்டும்போது முன்பக்கம் மட்டும் பார்த்து காரை ஓட்டினால் விபத்துக்களை தவிர்த்துவிடலாம். விரைவாகச் சென்றுவிடலாம்” என்று ஆலோசனை சொல்பவர்களும் உண்டு. ஆனால் – முறையாக கார் ஓட்டும் பயிற்சியைப் பெற்றவர்கள் சொல்லும் ஆலோசனை சற்று வித்தியாசமானது.
“முன்பக்கம் பார்த்து கார் ஓட்டும்போதே பின்பக்கத்தைக் காட்டும் கண்ணாடிகள் மூலம் வலது மற்றும் இடதுபுறங்களில் வருகின்ற வாகனங்களையும், பின்பக்கமாக வரும் வாகனங்களையும் கவனித்து கார் ஓட்டினால்தான் விபத்து இல்லாமல் முறையாக கார் ஓட்ட முடியும்” – என அறிவுரை வழங்குவார்கள்.
இதேபோலத்தான், பாடங்களை படிக்கும்போது அந்தந்த வகுப்பில் நடத்தப்படும் பாடங்களை மட்டும் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. கடந்த காலங்களில் கற்ற பாடங்களையும் நினைவில் வைத்துக்கொண்டு, அதன் அடிப்படையில் பல்வேறு சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு செயல்படுவதும் அவசியமாகும்.
“கடந்தகால தகவல்களை நினைவில் நிறுத்தி செயல்பட்டால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்” என்பதால் பள்ளி பருவத்திலேயே முறைப்படி பாடங்களை படித்து நினைவாற்றல் கலையை வளர்த்துக் கொள்வது மாணவ – மாணவிகளின் அடிப்படை கடமையாகும்.
பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போது பல்வேறு திறமைகளை மாணவ – மாணவிகள் வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இருந்தபோதும் அவர்களின் நினைவுக்கலையை வளர்ப்பதற்கான பயிற்சிகள்தான் இந்தக் கல்வி நிலையங்களில் மிக அதிகமாக வழங்கப்படுகிறது.
“நினைவுக்கலை” என்பது ஒரேநாளில் கற்றுக்கொள்ளக்கூடிய வித்தை அல்ல. இந்தக்கலையை நாள்தோறும் முறையான பயிற்சி மூலமே வளர்த்துக் கொள்ள இயலும்.
“உலகம் நம் உள்ளங்கையில்” என்று சொல்வார்கள். உலகத்திலுள்ள அனைத்துத் தகவல்களையும், செய்திகளையும் மிக அதிகமாக தெரிந்துகொண்டு அதனை சரியான நேரத்தில் நினைவுக்குக்கொண்டுவந்து வாழ்க்கைக்கு ஏற்றவாறு பயன்படுத்திக் கொண்டவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். சிறந்த புகழும் பெறுகிறார்கள்.
இளம் வயதில் பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது வாழ்க்கைக்கு வேண்டிய கருத்துக்களையும், தகவல்களையும் எவ்வாறு சேகரிக்க வேண்டும்? என்னும் கலையை கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை மனமகிழ்ச்சியும், மனநிறைவும் கொண்டதாக அமையும்.
படிக்கின்ற காலத்தில் படிப்பதன் நோக்கத்தை தவறாகப் புரிந்து கொண்டவர்களால் சரியான முறையில் தங்கள் படிக்கும் பழக்கத்தை அமைத்துக் கொள்ள முடிவதில்லை. இதனால் பாடத்தில் கவனம் இல்லாமலும், படிப்பில் ஆர்வம் குறைந்தும், மனவேதனையோடு பள்ளி – கல்லூரிகளில் காலத்தை கடத்தும் மாணவ – மாணவிகளும் உண்டு.
படிப்பதன் நோக்கம் என்ன? என்பதை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டும். “பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கும், அறிவை பெருக்கிக் கொள்வதற்கும், தேவையில்லாத பழக்கங்ளை நீக்கிக் கொள்வதற்கும், ஆளுமையை மேம்படுத்துவதற்கும் முழுமையாகப் பயன்படுவதுதான் படிப்பதன் முக்கிய நோக்கம்” – என்பதை பள்ளிப் பருவத்தில் அறிந்து கொண்டவர்கள் தங்கள் படிக்கும் பழக்கத்தை நெறிப்படுத்திக் கொள்கிறார்கள்.
எவ்வாறு படிக்க வேண்டும்? என்பதை அறிந்துகொள்வது தான் படிக்கும் பழக்கத்தின் முதல்படி ஆகும். ஒவ்வொரு மாணவரும் ஒவ்வொரு விதமாக தங்களின் கற்றுக்கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். வெவ்வேறு விதமான படிக்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்தி “கற்றல்” (Learning) கலையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். தான் கற்கும் முறை சரியானதுதானா? என்பதுகூட தெரியாமல் சில மாணவ – மாணவிகள் பள்ளிகளில் பாடங்களை படிப்பதும் உண்டு. எனவே முறைப்படி கற்கும் கலையைப்பற்றித் தெரிந்துகொள்வது அவசியமாகும்.
ஒரு நிகழ்வில் இருந்துகூட பாடத்தை கற்றுக்கொள்ள முடியும். அதேபோல் விளையாட்டாக விளையாடும்போதும் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். குறிப்பாக – நாம் பார்க்கும் பார்வைகள் (Sight), கேட்பவைகள் (Hearing), செய்யும் செயல்கள் (Doing) ஆகியவற்றின்மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
“மெய்”, “வாய்”, “கண்”, “மூக்கு”, “செவி” – என்னும் இந்த ஐம்புலன்களும் (Five Senses) நம்மைச் சுற்றி நடக்கின்ற பல்வேறு தகவல்களை நம் மனதினுள் கொண்டுவருகிறது. இந்தத் தகவல்களை முறைப்படுத்தி தேவையானவற்றை மட்டும் உள்வாங்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால் படிக்கும் காலத்திலேயே “நெறிவாழ்க்கை” வாழ்வதற்கான பயிற்சியை எளிதாகப் பெற்றுவிடலாம்.
“பார்த்தல்”, “கேட்டல்”, “செய்தல்” – ஆகிய 3 முறைகளையும் பயன்படுத்தி முறையாக கல்வி கற்க வேண்டும்.
“பார்த்தல்” எனப்படும் “பார்வை” என்பதுதான் கற்பவருக்கு அவர் படித்தத் தகவல்களை எளிதான முறையில் நினைவில் கொண்டுவருவதற்கு உதவுகிறது. எனவே பாடத்தை கவனமுடன் படிக்கும்போது எவற்றையெல்லாம் படிக்க வேண்டும்? என்பதை மனதிற்குள் முதலில் காட்சிப்படுத்திக் (Visualisation) கொள்ள வேண்டும்.
“காட்சிப்படுத்துதல்” என்பது செய்யவேண்டிய செயல்களை மனக்கண்ணில் கொண்டுவந்து ஒவ்வொன்றாக சிந்தித்து பார்ப்பது ஆகும். உதாரணமாக – “இன்று மாலை படிக்க வேண்டும்? என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் காட்சிப்படுத்துதல் முறையில் இதனைப்பற்றி இப்படி கீழ்க்கண்டவாறு சிந்திக்கலாம்.
நான் பள்ளியைவிட்டு 4 மணிக்கு வீட்டுக்கு புறப்பட வேண்டும். சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும்போது மணி 4.30 ஆகிவிடும். முகம் கழுவ வேண்டும். அம்மா டீ தருவார்கள். அதனை சாப்பிட்டு முடிக்கும்போது மணி 5 ஆகிவிடும். அதன்பின்னர் முதலில் ஆங்கிலம் பாடத்தை படிக்கவேண்டும். ஆங்கிலப் பாடத்தை படித்தபின்பு அறிவியல் பாடத்தை முடிக்க வேண்டும். பின்பு “ஹோம் வொர்க்”கை செய்துமுடிக்க வேண்டும். இரவு 7 மணி வரை படித்தபின்பு கொஞ்சநேரம் டி.வி. பார்க்க வேண்டும் 7.30 மணிக்கு சாப்பிட்டுவிட்டு செய்தித்தாள்கள் படிக்கவேண்டும். சாப்பிடும்போது அம்மாவிடமும், தங்கையிடமும் இன்று நடந்த செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். 8.30 மணியிலிருந்து 10.30 மணிவரை மீண்டும் பாடங்களைப் படிக்க வேண்டும்” – என்று காட்சிப்படுத்துதல் முறையில் முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
ஒரு திரைப்படத்தில் அடுத்தடுத்து வரும் நிகழ்வுகள்போல செய்யவேண்டிய பணிகளை முறைப்படுத்தி மனதிற்குள் முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்வதைத்தான் “காட்சிப்படுத்துதல்” என அழைப்பார்கள்.
படிப்பது மட்டுமல்ல, எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும் “காட்சிப்படுத்துதல்” அந்த செயல் வெற்றிக்கு அடித்தளமாக அமையும். செய்ய வேண்டிய செயல்களை காட்சிப்படுத்துதல் மூலம் முன்கூட்டியே திட்டமிட்ட பின்பு அதனை நடைமுறைப்படுத்துவது எளிதாகும்.
காட்சிப்படுத்துதலை அடுத்து எப்படி படிக்க வேண்டும்? என்பவற்றையும் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். படிப்பதற்காக நேரம் ஒதுக்கி வீட்டில் படிக்கும் நேரத்தில் தேவையான நோட்டுப் புத்தகங்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் தேவையான புத்தகங்களும், நோட்டுகளும் எங்கே இருக்கிறது? என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் “தேடுதல் வேட்டை”யில் ஈடுபட வேண்டிய சூழல் உருவாகிவிடும்.
வகுப்பில் பாடவேளையில் எடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்ட நோட்டுகளையும் அருகில் வைத்துக் கொள்ள வேண்டும். அந்த குறிப்பு நோட்டுகளில் குறிக்கப்பட்ட மிகவும் முக்கியமான குறிப்புகளை மட்டும் கலர் பென்சில் கொண்டு அடிக்கோடு இட்டுக்கொள்ள வேண்டும். இதன்மூலம் முக்கியக் குறிப்புகளை மனதில் எளிய முறையில் பதியச் செய்யலாம்.
வகுப்பில் ஆசிரியர்கள் நடத்திய பாடங்களையும் காட்சிப்படுத்துதல் முறையில் அடிக்கடி நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். தேவையான இடங்களில் படங்கள் வரையவும், வரைபடங்களை பயன்படுத்தவும் பயிற்சிகள் மேற்கொள்ளலாம். சிலவேளைகளில் பாடங்கள் பற்றிய தெளிவான குறிப்புகள் கிடைக்கவில்லையென்றால் இண்டர்நெட்டை பயன்படுத்தி இணையதளங்கள் மூலம் படிக்கும் பாடத்திற்கு உதவும் வகையில் அதிக தகவல்களை அதிகமாக சேகரித்துக் கொள்வதன் மூலமும் பாடங்களை எளிதில் கற்க இயலும்.
சிறந்த முறையில் படிப்பதற்கு உதவும் வகையில் பல்வேறு ஆடியோ சி.டிக்கள் (CD) வெளிவந்துள்ளன. அதைப்போலவே வீடியோ சி.டி.க்களும் வெளியிடப்பட்டுள்ளன. பாடத்தை எளிதாக கற்கும் வகையில் அந்தவகை சி.டி.க்கள் உதவுவதால் அவைகளையும் பயன்படுத்தி கற்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
தனியாக இருந்து அறையில் படிக்கும்போது படித்தவற்றை திரும்ப ஒருமுறை புத்தங்களைப் பார்க்காமல் சொல்லிப்பார்த்து நினைவாற்றலை வளர்க்கலாம். மேலும் நெருங்கிய வகுப்பு நண்பர்களை சந்தித்தும் தான் படித்த பாடங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டு பாடம் சம்பந்தப்பட்ட மேலும் பல தகவல்களை பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.
வகுப்பில் ஆசிரியர்கள் சிலவேளைகளில் குழு விவாதம் (Group Discussion) மூலம் பாடங்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்குவார்கள். அந்தவேளைகளில் ஆர்வத்தோடு மற்ற குழு உறுப்பினர்களோடு சேர்ந்து கருத்துக்களை பரிமாறுவதற்கும், முரண்பாடுகள் இல்லாமல் மற்ற குழு உறுப்பினர்களோடு பழகுவதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். குழு விவாதத்தின்போது ஒருவர் தனது பகுப்பாய்வு திறனையும் (Analytical Skill), முடிவெடுக்கும் திறனையும் (Decision Making Skill), பிறறோடு இணைந்து பழகும் திறனையும் (Interpersonal Skill) வளர்த்துக் கொள்வதற்கு அருமையான வாய்ப்புகள் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு குழு விவாதத்தில் பங்குகொள்ள வேண்டும். அப்போதுதான் அறிவாற்றலையும், மற்றவர்களோடு பிரச்சினை இல்லாமல் இணைந்து பழகும் திறனையும் வளர்க்க இயலும்.
அறையில் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து பல மணிநேரங்கள் படிக்கும்போது களைப்பு ஏற்படலாம். இந்தக் களைப்பைப் போக்குவதற்கு இடையிடையே எழுந்துநின்று கொள்ளலாம். சிலவேளைகளில் புத்தகத்தை மூடிவைத்துக் கொண்டு அங்கும் இங்குமாக கொஞ்சநேரம் நடந்தும் வரலாம். தொடர்ந்து படிக்கும்போது ஏற்படும் களைப்பை நீக்குவதற்கு இடையிடையே இடைவெளிவிட்டு (Breaks) படிப்பது நல்லது.
படித்த பாடங்கள் எளிதில் நினைவில் நிற்கும் வகையில் படித்தவற்றை தனியாக ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதிப்பார்ப்பது நல்லது. இதேபோல் அறிவியல் பாடங்களில் உள்ள சோதனைகளை (Experiments) வீட்டில் தனியாக செய்து பார்த்து அந்தப் பாடம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள முயற்சிசெய்ய வேண்டும்.
படிப்பது என்பது நினைவுக்கலையை வளர்ப்பதற்கான ஒரு பயிற்சி என்பதை புரிந்துகொண்டவர்கள் சிறுவயது முதலே பாடங்களை ஒழுங்காகப் படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்பதுதான் கல்வியாளர்களின் கருத்தாகும்.
மனதை ஒருமுகப்படுத்தவும், திறமைகளை வளர்க்கவும், வாழ்க்கையை வளப்படுத்தவும் கல்விதான் மிகப்பெரிய துணை என்பதை அனைவரும் புரிந்துகொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிகள் குவியும்.
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post பாடங்களை படிப்பது எப்படி? appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
தமிழக அரசில் 5451 பணியிடங்களுக்கான குரூப் – 4 தேர்வு அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மற்றும் தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைக்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3), வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் உள்ள 5,451 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நவம்பர் 6-ஆம் தேதி நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
அறிவிக்கை எண்: 15/2016
விளம்பர எண்: 445/2016
தேதி: 09.08.2016
பணி: Junior Assistant (Non – Security) – 2345
பணி: Junior Assistant (Security) – 121
பணி: Bill Collector, Grade-I – 08
பணி: Field Surveyor – 532
பணி: Draftsman – 327
பணி: Typist – 1714
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400
பணி: Steno-Typist, Grade-III – 404
சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,800
விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் (பதிவு செய்தல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது)
தேர்வுக் கட்டணம்: ரூ.75. நிரந்தரப் பதிவு முறையில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள். தேர்வுக்கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பிசி, எம்பிசி வகுப்பி னருக்கு வயது வரம்பு 32 ஆகவும், எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கும் அனைத்து வகுப்பைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் 35 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், குறைந்தபட்ச கல்வித் தகுதியான எஸ்எஸ்எல்சி படிப்புக்கு மேல் அதாவது பிளஸ் 2, பட்டப் படிப்பு, முதுநிலை படித்திருந்தால் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் அனைத்து வகுப்புகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு எதுவும் கிடையாது.
தகுதி: குறைந்தபட்ச பொதுக்கல்வித் தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பு (10-ம் வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்று மேல்நிலைப்பள்ளிக் கல்வி அல்லது கல்லூரிக் கல்வி படிப்பில் தேர்வதற்கான தகுதி, பட்டம் பெற்றிருத்தல், அரசு தொழில்நுட்பத் தட்டச்சுத் தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை, இளநிலை தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.09.2016
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 11.09.2016
தேர்வு நடைபெறும் தேதி: 06.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய
CLICK HERE TO DOWNLOAD TAMIL VERSION
CLICK HERE TO DOWNLOAD ENGLISH VERSION
விண்ணப்பிக்கும் முறை:
Apply Now
வயது வரம்பு
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை.
பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35.
கல்வித்தகுதி
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத்தேர்வு
எழுத்துத்தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது.
அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும்
பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.
ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.
பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது.
அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.
டிப்ஸ்.. டிப்ஸ்..
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது.
இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது.
யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.
கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை..
மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும்.
ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!
TNPSC GROUP 4 MATERIALS
Exam Tips
The post TNPSC குருப் 4 தேர்வுக்கு முக்கிய தகுதிகள் என்ன ? appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
Source: storiesintamil.in
டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கான முக்கிய ஆலோசனைகள்
தேர்வு நெருங்கும் நேரத்தில் புதிய பாடங்களை படிக்காமல், படித்த பாடங்களை திரும்பவும் படியுங்கள்.
புதிய தேர்வு முறையில், ஆப்டிடியூட் பகுதியில் 25 வினாக்கள் கேட்கப்படுகிறது. எண்களின் வகைகள் தொடர்புடைய வினாக்கள், கனஅளவு பகுதி சூத்திரங்களை நினைவுப்படுத்தவும்.
வரலாறு பாடத்தில் உள்ள காலவரிசை, முக்கிய ஆண்டுகள், சங்க காலம் முதல் சுதந்திரம் பெற்ற காலம் வரையான போர்களின் ஆண்டுகள், இடம், போரிட்ட நபர்களை தெரிந்திருக்க வேண்டும்.
உலகை வலம் வந்த பயணிகள், அவர்களின் இந்திய வருகையின் போது இருந்த மன்னர்கள், வரலாற்று நூல்கள், நூலாசிரியர், பத்திரிகைகள், சமய சீர்திருத்த இயக்கம் இவற்றை படிக்கவும்.
இயற்பியல் பகுதியில் அலகு, விதிகள், அறிஞர்களின் கண்டுபிடிப்புகள், அளவிடும் கருவிகள், பயன்கள், மதிப்புகளை பார்க்கவும்.
வேதியியல் பகுதியில் வேதிப்பெயர், சமன்பாடு, முக்கிய அமிலங்கள், தனிம வரிசை அட்டவணை சிறப்பம்சம், அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் வேதிச் சேர்மங்களை படிக்க வேண்டும்.
தாவரவியல் பகுதியில் செல்லின் அமைப்பு, தாவர, விலங்கு செல்களில் உள்ள நுண்ணுறுப்பின் பணி, தாவர பாகம், வளர்ச்சி தொடர்புடைய காரணிகள், வைரஸ், பாக்டீரியாவில் ஏற்படும் தாவர நோய்களை பட்டியலிடவும்.
வகைபாட்டின் வளர்ச்சி, முதுகு நாணற்றவை தொகுதி, உதாரணங்கள் அறிவியல் பெயர், குரோமோசோம் நிலையை படிக்கவும்.
மனித உடலியல் பகுதியில் ரத்தவகை, ரத்த செல்களின் சிறப்பம்சம், இருதய அமைப்பு, செயல்படும் விதம், நாளமில்லா சுரப்பி பண்பு, பயன், விட்டமின் பற்றிய தகவல்கள், எலும்புகளின் எண்ணிக்கை, மூளையின் அமைப்பு, பணி, வைரஸ், பாக்டீரியா, புரோட்டோசோவா, பூஞ்சையால் ஏற்படும் நோய்களை தெரிந்து கொள்ளவும்.
புவியியல் பகுதியில் மாநில தலைநகரம், மலை, காடு, சரணாலயம் படிக்கவும்.
சூரியன், அக்குடும்ப கோள்கள், அட்சரேகை, தீர்த்தரேகை சிறப்பம்சங்கள், வானிலை, காலநிலை, கடல் நீரோட்டங்கள்.
நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, கடற்கோள், நிலச்சரிவு, பனிப்பாறை வீழ்ச்சி.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வளர்ச்சி, அட்டவணை, முக்கிய ஷரத்து, சட்ட திருத்தம், ஜனாதிபதி, பிரதமர், தேர்தல் ஆணையம் குறித்த தகவல்களை படிக்கவும்.
பொருளாதார கோட்பாடுகளை கூறியவர்களின் பெயர்கள்.
பொதுத் தமிழ் பாடப்பகுதிக்கு சமச்சீர் பாடப்புத்தகத்தில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரையான புத்தகங்களை படிக்க வேண்டும். ஹால் டிக்கெட், நீலம் அல்லது கருப்பு நிற “பால் பாயின்ட்” பேனா கொண்டு செல்ல வேண்டும்.
தேர்வுக்கு முதல்நாள் இரவு நன்கு தூங்கவும். மையத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்லவும். மூன்று மணி நேரம் தேர்வு நடக்கும். பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம் 100 வினாக்கள், ஆப்டிடியூட் உட்பட பொதுஅறிவு பகுதியில் 100 என, மொத்தம் 200 வினாக்கள்.
அனைத்து கேள்விகளுக்கும் நான்கு வினாக்கள் தரப்பட்டிருக்கும். தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை. எனவே, அனைத்து வினாக்களுக்கும் கவனமாக படித்து, விடை அளிக்கவும்
தன்னம்பிக்கையுடன் கூடிய பயிற்சியும், முயற்சியுமே வெற்றியைத் தரும். வெற்றி பெற்று அரசு ஊழியராக வாழ்த்துக்கள்!
TNPSC GROUP 4 STUDY MATERIALS
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கான முக்கிய ஆலோசனைகள் appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
தமிழக அரசுப் பணியில் பல்வேறு துறைகளில் அதிகாரி அந்தஸ்திலான பணிகளில் சேர தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு (நேர்காணல் பதவிகள்) அரியதொரு வாய்ப்பை வழங்குகிறது (உதவியாளர் உள்ளிட்ட நேர்காணல் இல்லாத பதவிகளுக்குத் தனியாக வேறொரு குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது).
யார் எழுதலாம்?
ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டப் படிப்பு முடித்தவர்கள் குரூப்-2 தேர்வை எழுதலாம்.
வயது வரம்பு
பொதுப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பொதுப் பிரிவு உள்பட அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு ஏதும் கிடையாது.
ஆனால், துணை வணிகவரி அதிகாரி பணிக்கு மட்டும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கல்வித் தகுதியாக பி.எல். முடித்திருந்தால் 2 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
இதே வயது வரம்புத் தளர்வு, பொதுப் பிரிவினருக்கும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு வயது வரம்பை 32 ஆக நிர்ணயித்துள்ளனர்.
மேலும், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத் திறனாளிகள்) பணிக்குப் பொதுப் பிரிவினர் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்
துணை வணிகவரி அதிகாரி,
சார்-பதிவாளர்,
சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி,
உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (பொது),
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்
லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர்,
டிஎன்பிஎஸ்சி உதவி பிரிவு அதிகாரி,
உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர்,
இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை தணிக்கை ஆய்வாளர்,
தொழில் கூட்டுறவு சங்க மேற்பார்வையாளர்,
கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், வேளாண்மை விற்பனைத் துறை மேற்பார்வையாளர்,
கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர்,
பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) என 18 விதமான பதவிகளில் காலியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட உள்ளன.
குரூப்-2தேர்வானது,
முதல்நிலைத் தேர்வு,
முதன்மைத் தேர்வு,
நேர்காணல் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வை வடிகட்டும் தேர்வு என்று சொல்லலாம்.
“ஒரு காலியிடத்துக்கு 10 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் முதல்நிலைத் தேர்விலிருந்து முதன்மைத்தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதல்நிலைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு (75 கேள்விகள்), பகுத்தாராயும் திறன் (25 கேள்விகள்) பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும்.
அத்துடன் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்கள் கேட்பார்கள். மொத்தம் 300 மதிப்பெண்கள்.
முதன்மைத் தேர்வு
இரண்டாம் கட்ட தேர்வான, முதன்மைத்தேர்வு விரிவாக விடை அளிக்கும் வகையில் அமைந்திருக்கும். இதற்கு 300 மதிப்பெண்கள்.
நேர்காணல்
நேர்முகத் தேர்வுக்கு 40 மதிப்பெண்கள்.
முதன்மைத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் பணிக்கு ஆட்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
முதல்நிலைத் தேர்வு தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட உள்ளது. இதற்கு tnpscexams.net என்ற முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. தேர்வுக் கட்டணம் ரூ.75. இதை நெட் பேங்கிங் மற்றும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மூலமாக ஆன்லைனிலேயே செலுத்திவிடலாம்.
மேலும், இந்தியன் வங்கி கிளைகள் மற்றும் தபால் அலுவலகங்களில் கட்டணத்தைச் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்வுமுறை, பொது அறிவு, பொதுத் தமிழ், பொது ஆங்கிலப் பாடங்களுக்கான பாடத்திட்டம் தொடர்பான விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (tnpsc.gov.in) விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
இட ஒதுக்கீடு
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், குரூப்-2 தேர்வுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்சக் கல்வித் தகுதியான பட்டப் படிப்பைத் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மொத்தமுள்ள காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும்.
முதலில் தெரிவி!
அதேபோல், வருவாய் உதவியாளர் பணியில் பெண்களுக்கான 30 சதவீத ஒதுக்கீட்டில், 10 சதவீதம் ஆதரவற்ற விதவைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்டப் படிப்பைத் தமிழ்வழியில் படித்தவர்களும், ஆதரவற்ற விதவைகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இந்த விவரத்தைப் பதிவுசெய்துவிட வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் முதன்மைத் தேர்வு நேரத்திலோ நேர்முகத் தேர்வு சமயத்திலோ சொன்னால் தங்களுக்கான உரிமைகளைப் பெற முடியாது.
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post நீங்களும் குரூப்-2 அதிகாரி ஆகலாம் appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரித்தண்டலர், நிலஅளவர், வரைவாளர் ஆகிய பதவிகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குரூப்-4 தேர்வு எழுதுவதற்கான அடிப்படை கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி ஆகும். தட்டச்சர், சுருக்கெழுத்து பணிகளுக்கு மட்டும் கூடுதலாக தொழில் நுட்பத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 18 முதல் 30 வரை.
பிசி, எம்பிசி வகுப்பினருக்கு 32.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 35.
கல்வித்தகுதி
தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை (எஸ்எஸ்எல்சி) விட உயர் கல்வித்தகுதி (பிளஸ்2, பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு) பெற்றிருந்தால் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் மற்றும் பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு இல்லை.
குரூப்-4 தேர்வுக்கான கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி என்ற போதிலும் பெரும்பாலும் பிளஸ்2 முடித்தவர்கள், பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், எம்பில் முடித்தவர்கள், பொறியியல் பட்டதாரிகள் என அனைத்து கல்வித்தகுதி உடையவர்களும் விண்ணப்பிக்கிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள குரூப்-4 தேர்வுக்கு 12 லட்சம் பேர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பு அம்சம் என்ன வெனில் இதற்கு நேர்முகத் தேர்வு கிடையாது. எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலே அரசுப் பணி உறுதி. எனவே, போட்டி கடுமையாக இருக்கும்.
எழுத்துத் தேர்வு டிசம்பர் தேதி நடைபெற உள்ளது.
எழுத்துத்தேர்வு
எழுத்துத்தேர்வு 300 மதிப்பெண்களை கொண்டது.
அப்ஜெக்டிவ் (கொள்குறிவகை) முறையில் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும்.
பொது அறிவு மற்றும் திறனறிவு (ரீசனிங்) பகுதியில் 100 வினாக்களும்
பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில் 100 வினாக்களும் இடம்பெறும்.
ஒரு கேள்விக்கு 1.5 மதிப்பெண் வீதம் 200 கேள்விகளுக்கு மொத்தம் 300 மதிப்பெண்.
பொது அறிவு பகுதி அனைவருக்கும் பொதுவானது.
அடுத்ததாக, பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம்-இரண்டில் ஏதாவது ஒன்றை தேர்வுசெய்துகொள்ளலாம்.
பெரும்பாலான வி்ண்ணப்ப தாரர்கள் குறிப்பாக கிராமப் புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பொது தமிழ் பாடத்தைத்தான் விருப்பமாக தேர்வு செய்கிறார்கள்.`
டிப்ஸ்.. டிப்ஸ்..
அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளை பல்கலைக்கழக தேர்வுகள் போல் எண்ணி படிக்கக் கூடாது.
இங்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் என்று எதுவும் கிடையாது.
யார் அதிக மதிப்பெண் எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் வேலை. எனவே, அதிக மதிப்பெண் பெற விரிவாக படிக்க வேண்டியது அவசியம்.கடந்த 5 ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்வித்தாள்களைப் படித்து எவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன என்பதை கண்டறிந்து தற்போது நாம் எந்த பாடத்தின் பாகங்களை விரிவாகப் படிக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.
முன்பு தேர்வெழுதி வெற்றிபெற்றவர்களை அணுகி, எந்தெந்த புத்தகங்கள், பொது அறிவு, மாத, வார இதழ்கள், பத்திரிகைகள் உபயோகமாக இருந்தன என்பதை கேட்டு அவற்றை வாங்கிப் படிக்க வேண்டும்.
என்னதான் முயற்சி இருந்தாலும் முயற்சியுடன் கலந்த பயிற்சி இருந்தால் வெற்றி வெகு தூரமில்லை.
.
மாதிரித் தேர்வுகளும், முனைப்போடு தன்னுடன் படிக்கும் பிற பயிற்சியாளர்களின் உத்வேகமும் உங்களை வந்தடைய வாய்ப்புகள் அதிகம்.
தற்போதைய கேள்விகள், கடுமையாகவும், யோசித்து விடையளிக்கக்கூடிய வகையிலும் அமைகிறது. எனவே, இத்தகைய சூழலில், தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் பாடத்திட்டத்தைப் புரிந்து படித்து பல மாதிரித் தேர்வுகளை எழுத வேண்டும்.
ஒரு நாளுக்கு 5 மணி நேரம் படிக்க ஆரம்பித்து 8 மணி நேரம் வரை படிக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
உங்களின் மனோபாவம் (Attitude), தன்னம்பிக்கை (Self-confidence) ஆகியவற்றை வளர்த்துக்கொண்டு, அரசு பணியில் சேருவேன் என்ற உறுதியை எடுத்தால் வெற்றி உறுதி. நிமிர்ந்து பாருங்கள்.. உங்கள் எதிரிலேயே மகத்தான வெற்றி தெரிகிறது!
TAMIL VIDEOS
MATHS VIDEOS
Online Test
DAILY CURRENT AFFAIRS
MONTHLY CURRENT AFFAIRS
EXAM STUDY MATERIALS
GOVERNMENT EXAM
The post TNPSC Group 4 Exam Tips appeared first on MaanavaN | TNPSC Study Materials 2015 | 2016 | Group 2A | VAO.
Source: storiesintamil.in
இந்த வார ராசிபலன் 04-08-2016 முதல் 10-08-2016 வரை | Weekly astrology forecast 04-08-2016 to 10-08-2016
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். பண வரவு சீராக இருந்து வரும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். ஆன்மிகவாதிகள், அறநிலையப் பணியாளர்கள், ஜோதிடர்கள் வளர்ச்சி காண்பார்கள். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு பிறக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பிள்ளைகளாலும், உடன்பிறந்தவர்களாலும், வேலையாட்களாலும் சங்கடம் உண்டாகும். பெரியவர்கள், மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது அவசியம். வயிறு, மறைமுக உறுப்புகள் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் புதனும்; சுக்கிரனும், 5-ல் குருவும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. புதிய பொருட்களும் சொத்துகளும் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பணப்புழக்கம் திருப்தி தரும். பிள்ளைகளாம், பெற்றோராலும் நலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். அரசு விவகாரங்களில் நல்ல திருப்பம் உண்டாகும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். மாணவர்களது நிலை உயரும். மாதர்களது எண்ணம் ஈடேறும். நிர்வாகத் திறமை வெளிப்படும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். 4-ல் ராகு, 7-ல் செவ்வாய், சனி ஆகியோர் உலவுவதால் கெட்டவர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).
திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இள நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கையம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி, குங்குமார்ச்சனை செய்வது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும்; ராகுவும், 6-ல் செவ்வாயும்; சனியும் உலவுவது சிறப்பு. முயற்சி வீண்போகாது. உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பயணம் சம்பந்தமான காரியங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள் நிலை உயரப் பெறுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததும் கலந்த பலன்கள் ஏற்படும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் காணலாம். சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவரால் ஓரளவு நலம் ஏற்படும். தந்தை நலனில் அக்கறை தேவை. வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், வெண்மை, இள நீலம்.
எண்கள்: 4, 6, 9.
பரிகாரம்: ஏழை மாணவர்களுக்கு உதவவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும் உலவுவது நல்லது. பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். விருந்து, விழாக்கள்; கேளிக்கை; உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். சொத்துகளால் வருவாய் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் புகழ் பெறுவார்கள். கலைஞர்களது எண்ணம் ஈடேறும். மாதர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். முக்கியமான ஆசைகள் ஒன்றிரண்டு இப்போது நிறைவேறும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். காது, வயிறு சம்பந்தமான உபாதைகளும் ஏற்படும். கவனம் தேவை. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பெரியவர்கள், மேலதிகாரிகளிடம் பணிவோடு நடந்து கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இள நீலம்.
எண்கள்: 5, 6, 9.
பரிகாரம்: துர்க்கை, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். செல்வாக்கு உயரும். தோற்றப்பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கை நிகழும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பேச்சாற்றலால் மற்றவர்களைக் கவருவீர்கள். பண வரவு அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். அதிர்ஷ்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மதபோதகர்கள், மேடைப் பேச்சாளர்கள், சட்ட வல்லுனர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் விலகி, முன்னேற்றமான சூழ்நிலை உதயமாகும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் ஏற்படும். அலைச்சல் வீண் போகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: பராசக்தியை வழிபடுவது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும்; சனியும், 6-ல் கேதுவும், 11-ல் சூரியனும், 12-ல் சுக்கிரனும் உலவுகிறார்கள். பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. பயணத்தின்போது விழிப்புடன் இருக்கவும். வீண்வம்பு கூடாது. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் திருப்தி தரும். அரசியல், நிர்வாகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். அலைச்சல் சற்று அதிகரிக்கும். மக்களாலும், மனைவியாலும், தந்தையாலும் நலம் உண்டாகும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். இயந்திரப்பணியாளர்களுக்கு சுபிட்சம் கூடும். நிலபுலங்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 8, 10 (காலை).
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 1, 6, 7, 9.
பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும், 11-ல் புதனும்; சுக்கிரனும்; ராகுவும் உலவுவது சிறப்பு. பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும் நேரமிது. செல்வ நிலை உயரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கூடும். சுப காரியங்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவுகளை மேற்கொள்வீர்கள். குடும்ப நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 10 (காலை).
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு.
உங்கள் ராசிக்கு 10-ல் புதனும்; ராகுவும், 11-ல் குருவும் உலவுவதால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், தரகர்கள், கமிஷன் ஏஜண்டுகள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். பொருளாதார நிலை உயரும். அதிர்ஷ்ட இனங்கள் லாபம் தரும். மக்களால் மன மகிழ்ச்சி பெருகும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் உதவிக்கரம் நீட்டுவார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். தனவந்தர்களது சகாயம் கிடைக்கும். பயணத்தின் மூலம் ஒரு காரியம் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தாய் நலனில் கவனம், அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8 (பகல்).
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெண்சாம்பல் நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 5.
பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 9-ல் சுக்கிரன் உலவுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். பெண்களுக்கு மன உற்சாகம் பெருகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். செவ்வாய், குரு, சனி ஆகிய முக்கியக் கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உத்தியோகஸ்தர்கள், அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் விழிப்புடன் காரியமாற்றினால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8, 10 (காலை).
திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: சிவ வழிபாடு நலம் தரும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும்; சுக்கிரனும், 9-ல் குருவும், 11-ல் செவ்வாயும்; சனியும் உலவுவது சிறப்பு. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வாய்ப்புக் கூடிவரும். எதிர்பாராத பொருட் சேர்க்கை நிகழும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். நல்லவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் விலகி, நல்ல திருப்பம் உண்டாகும். புதிய முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு ஆகிய தொழிலைச் சேர்ந்தவர்கள் செழிப்பான பாதையைக் காண்பார்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலபுலங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். சிறுசிறு இடர்ப்பாடுகள் ஏற்படும் என்றாலும் குருபலத்தால் சமாளிப்பீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 7, 8, 10 (காலை).
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகர் வழிபாடு செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 10-ல் செவ்வாய்; சனி ஆகியோர் உலவுவது சிறப்பு. நிர்வாகத் திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். மேலதிகாரிகளால் நலம் உண்டாகும். பிதுரார்ஜிதச் சொத்துகள் சேரும். எலெக்ட்ரானிக், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் இனங்களால் லாபம் கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்களின் நிலை உயரும். நிலபுலங்கள் சேரும். பொதுப்பணியாளர்கள் புகழ் பெறுவார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. எனவே பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கலைஞர்கள், மாதர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், உத்தியோகஸ்தர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 10 (காலை).
திசைகள்: தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 8, 9.
பரிகாரம்: குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும்; ராகுவும், 7-ல் குருவும் உலவுவது சிறப்பு. உடல் நலம் சீராகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். வியாபார நுணுக்கம் தெரிய வரும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். வழக்கு, வியாஜ்ஜியங்களில் நல்ல திருப்பம் ஏற்படும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். சூரியன், சுக்கிரன் ஆகியோர் அனுகூலமாக இல்லாததால் அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. தந்தையாலும், வாழ்க்கைத்துணைவியாலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். பெண்களால் சங்கடங்கள் ஏற்படும். கலைஞர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 4, 7, 8 (பகல்).
திசைகள்: வடக்கு, தென் மேற்கு, வட கிழக்கு.
நிறங்கள்: பச்சை, புகை நிறம், பொன் நிறம்.
எண்கள்: 3, 4, 5.
பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
2016 ஆகஸ்ட் மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2016 August Madha Rasipalan
2016 ஆகஸ்ட் மாத பலன்கள் | 2016 August Madha Rasipalan
மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)
எந்த ஒரு காரியத்தையும் திறமையாக திட்டமிட்டு சரியான நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உடைய மேஷ ராசியினரே நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும். ராசிக்கு 11ல் பாதகஸ்தானத்தில் இருக்கும் கேது தேவையற்ற மன சஞ்சலத்தை உண்டாக்குவார். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது.
பெண்களுக்கு எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
மாணவர்களுக்கு ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.
அசுபதி:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை தரும்.
பரணி:
இந்த மாதம் குடும்பத்தில் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டு பின்னர் சரியாகும். கோபத்தை குறைத்து தன்மையாக பேசுவதால் காரிய வெற்றி உண்டாகும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவு இருக்கும்.
கார்த்திகை – 1:
இந்த மாதம் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய தூண்டும். பிரிந்து சென்றவர்களை மீண்டும் சந்திக்க நேரலாம்.
சந்திராஷ்டம தினங்கள்: 11 – 12
அதிர்ஷ்ட தினங்கள்: 26 – 27
பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று வீரபத்திர ஸ்வாமியை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.
நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷபராசியினரே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காதவராக இருப்பீர்கள். நேரத்தின் அருமையை உணர்ந்தவர். இந்த மாதம் எதிர்பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும். ராசிக்கு 4ல் ராசிநாதன் சஞ்சாரம் இருப்பதால் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். திறமையாக எதையும் சமாளிப்பீர்கள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். சூரியன் சஞ்சாரம் பொருள் வரவை தரும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும்.
தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ஆனால் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.
கணவன், மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர் கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
பெண்களுக்கு திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும்.
மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
கார்த்திகை – 2, 3, 4:
இந்த மாதம் பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை வெளிபடும்.
ரோகினி:
இந்த மாதம் புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு அதிகரிக்கும்.
மிருகசீரிடம் – 1, 2:
இந்த மாதம் அடுத்தவர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கி நன்மதிப்பை பெறுவீர்கள். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: 13 – 14
அதிர்ஷ்ட தினங்கள்: 28 – 19
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.
பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே நீங்கள் எடுக்கும் முடிக்கும் நீண்ட ஆலோசனைக்குப் பிறகே இருக்கும். இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு தனஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் சூரியனுடன் சேர்க்கை பெறுவதும் பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும். நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம்.
செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும்.
குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மன மகிழ்ச்சி கொள்வீர்கள்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.
கலைக்காரகன் சுக்கிரனின் தனஸ்தான இருப்பால் கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும்.
அரசியலில் இருப்பவர்களுக்கு இந்த காலகட்டம் மந்தமாக காணப்படும். மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.
மிருகசீரிடம் – 3, 4:
இந்த மாதம் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.
திருவாதிரை:
இந்த மாதம் புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும்.
புனர்பூசம் – 1, 2, 3:
இந்த மாதம் மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
சந்திராஷ்டம தினங்கள்: 15 – 16 – 17
அதிர்ஷ்ட தினங்கள்: 1 – 30 – 31
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும்நீங்கும். எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)
தயாளகுணம் படைத்த கடக ராசியினரே நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தின் மீது அதிக பாசம் இருப்பவர்கள். இந்த மாதம் ராசியில் தைர்ய விரையாதிபதி புதன் சூரியன் இணைந்து சஞ்சாரம் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து செய்வது நல்லது. மன அமைதி பாதிக்கும்படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத் தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர் களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் டென்ஷன் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.
பெண்களுக்கு நண்பர்களிடம் உறவினர் களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். கூடுதலாக உழைக்க வேண்டியதிருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.
மாணவர்களுக்கு பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண் பெற உதவும்.
புனர்பூசம் – 4:
இந்த மாதம் எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை.
பூசம்:
இந்த மாதம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.
ஆயில்யம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.
சந்திராஷ்டம தினங்கள்: 18 – 19
அதிர்ஷ்ட தினங்கள்: 3 – 4
பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கருமமே கண்ணாக இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எல்லோராலேயும் நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். கொஞ்சம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. இந்த மாதம் முன்பு தடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும். ராசியிலிருக்கும் குரு தனஸ்தானத்திற்கு மாறவிருப்பதால் வெளியூர் பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள் பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனை கள் தோன்றும்.
தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்கு வரத்து மூலம் அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார் கள். பணவரத்தும் இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.
கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனதெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும்.
கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர்களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.
மாணவர்களுக்கு திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகம்:
இந்த மாதம் அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும். ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்.
பூரம்:
இந்த மாதம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
உத்திரம் – 1:
இந்த மாதம் ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 20 – 21
அதிர்ஷ்ட தினங்கள்: 5 – 6
பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும். கோதுமையில் விளக்கு ஏற்றுவது சிறந்தது.
நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம் உடையவராக இருப்பீர்கள். இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 11ல் சஞ்சாரம் செய்வதும் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும். எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும்.
கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன் பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது.
கலைஞர்களுக்கு தங்குதடையின்றி புதிய வாய்ப்புகளைப் பெறலாம். புகழ் பாராட்டு வந்து சேரும். நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நலல பலன்கள் கிடைத்தாலும் அதே நேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மைதரும். இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும்.
மாணவர்களுக்கு கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.
உத்திரம் – 2, 3, 4:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது.
ஹஸ்தம்:
இந்த மாதம் எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். வீண் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
சித்திரை – 1, 2:
இந்த மாதம் வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.
சந்திராஷ்டம தினங்கள்: 22 – 23
அதிர்ஷ்ட தினங்கள்: 7 – 8
பரிகாரம்: விநாயக பெருமானை அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.
குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்
அஸ்தம்:
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சித்திரை 1, 2, பாதம்:
எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை ஊண், உறக்கம் இன்றி கடுமையாக உழைக்கும் துலா ராசியினரே நீங்கள் அனைவரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர். இந்த மாதம் ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சுக்கிரனுடன் புதன், சூரியன் சேர்ந்து இருப்பது எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். விரையஸ்தானத்திற்கு வரும் குரு பகவானால் வெளியூர் பயணம் ஏற்படும்.
வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும்.
பெண்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
கலைத்துறையினர் சீரான நிலையில் இருக்கும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
அரசியல்வாதிகளுக்கு பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற் றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.
சித்திரை – 3, 4:
இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூல் ஆனாலும் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது.
ஸ்வாதி:
இந்த மாதம் பதவி உயர்வு, நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.
விசாகம் – 1, 2, 3:
இந்த மாதம் வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டம தினங்கள்: 24 – 25
அதிர்ஷ்ட தினங்கள்: 9 – 10
பரிகாரம்: மாரியம்மனை திங்கட்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அனைவருடன் நல்லமுறையில் பழகக்கூடிய விருச்சிக ராசியினரே உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.
தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும்.
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
அரசியல் துறையினருக்கு இந்த காலகட்டம் சில நற்பலன்களை தந்தாலும் மனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது.
கலைத்துறையினருக்கு கவனம் தேவை. எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.
மாணவர்களுக்கு சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது. கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.
விசாகம் – 4:
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.
அனுஷம்:
இந்த மாதம் எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது.
கேட்டை:
இந்த மாதம் எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும்.
சந்திராஷ்டம தினங்கள்: 26 – 27
அதிர்ஷ்ட தினங்கள்: 11 – 12
பரிகாரம்: அருகிலிருக்கும் முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றி பெறும் தனுசு ராசியினரே உங்களை எல்லோரும் நேசிப்பார்கள். இந்த மாதம் ராசிக்கு அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்யும் புதன் பணவரத்தை அதிகப்படுத்துவார். எதிர்ப்புகள் நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும்.
தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும்.
குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ் பாராட்டு கிடைக்காமல் போகலாம்.
மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.
மூலம்:
இந்த மாதம் அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும்.
பூராடம்:
இந்த மாதம் தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
உத்திராடம் – 1:
இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரவு அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 1 – 2 – 28 – 29 -30
அதிர்ஷ்ட தினங்கள்: 13 – 14 – 15 – 16 – 17
பரிகாரம்: தேவாரம், திருவாசகம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.
எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் மகர ராசியினரே இந்த மாதம் ராசிக்கு சப்தம ஸ்தானத்தில் புதன் சஞ்சாரம் தொடங்குவதாலும், சூரியன், சுக்கிரன் சேர்க்கை பெற்று இருப்பதும் வரவை போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக் கும் போது கவனம் தேவை.
தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள்.
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக் கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக் கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள்.
பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள் தாமதப்படும்.
கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.
அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.
மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.
உத்திராடம் – 2, 3, 4:
இந்த மாதம் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும்.
திருவோணம்:
இந்த மாதம் புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
அவிட்டம் – 1, 2:
இந்த மாதம் குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
சந்திராஷ்டம தினங்கள்: 3 – 4 – 5 – 31
அதிர்ஷ்ட தினங்கள்: 18 – 19 – 20
பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.
மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்ப ராசியினரே நீங்கள் அதிகமாக உழைப்பவர்கள். இந்த மாதம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும்.
பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம்.
கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஆனால் பொருளாதார ரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அவிட்டம் – 3, 4:
இந்த மாதம் எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
சதயம்:
இந்த மாதம் எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாகும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
பூரட்டாதி -1, 2, 3:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.
சந்திராஷ்டம தினங்கள்: 6 – 7
அதிர்ஷ்ட தினங்கள்: 21 – 22
பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
தூய உள்ளம் படைத்த மீன ராசியினரே நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது.
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது.
பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.
அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.
பூரட்டாதி – 4:
இந்த மாதம் பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
உத்திரட்டாதி:
இந்த மாதம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது அவசியம்:
ரேவதி:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது.
சந்திராஷ்டம தினங்கள்: 8 – 9 – 10
அதிர்ஷ்ட தினங்கள்: 23 – 24 – 25
பரிகாரம்: விநாயகரை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.
குருப்பெயர்ச்சி பலன்கள் 2.8.16 முதல் 1.9.17 வரை | Guru Peyarchi Palangal 2.8.16 To 1.9.17
பிரகஸ்பதி என்று பிரபஞ்சமே போற்றித் துதிக்கும் குருபகவான்தான் ஞானத்தின் பிதாமகனாய்த் திகழ்கிறார்.கல்வி அறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு என்று அனைத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் குருபகவான். காலசர்ப்ப தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற சகல தோஷங்களையும் நீக்கும் ஆற்றல் கொண்டவர். களங்கம் இல்லாத மனம், நீங்காத செல்வம், மாசற்ற வாழ்க்கை போன்ற அனைத்துக்கும் சொந்தக்காரர் குருபகவான். பொறுமை, நன்றி மறவாமை, பிறர் சொத்துக்கு ஆசைப்படாமல் இருப்பது போன்ற நல்ல பண்புகளை நமக்கு அருள்பவர். குருவின் பார்வை பட்டால்தான் திருமணம் நடைபெறும். ஒருவரின் ஜாதகத்தில் மற்ற கிரகங்கள் எப்படி இருந்தாலும், குரு மட்டும் நல்ல நிலையில் இருந்தால் எதையும் சாதிக்கும் சக்தி கிடைக்கும்.
இந்த துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ம் தேதி 2.8.16 செவ்வாய்க்கிழமை கிருஷ்ண பட்சத்து அமாவாசை திதி மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம், ஸித்தி நாமயோகம், சதுஷ்பாத நாமகரணம், நேத்திரம், ஜீவனம் மறைந்த சித்தயோகத்தில், புதன் ஹோரையில், இரண்டாம் ஜாமத்தில், பஞ்ச பட்சியில் ஆந்தை துயில் கொள்ளும் நேரத்தில், தட்சிணாயன புண்ணிய கால கிரீஷ்ம ருதுவில் காலை மணி 9.24-க்கு கன்யா லக்னத்தில் பிரகஸ்பதி எனும் தேவ குருவாகிய வியாழபகவான் சிம்ம ராசியிலிருந்து உபய வீடான கன்னி ராசிக்குள் சென்று அமர்கிறார். 1.9.17 வரை கன்னி ராசியில் அமர்ந்து தன் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்.
கடந்த ஓராண்டு காலமாக சிம்ம ராசியில் அமர்ந்து அரசியலில் பல விளையாட்டுகளை விளையாடினார். தங்கத்தின் விலையிலும் ஏற்ற இறக்கங்களை அடிக்கடி ஏற்படுத்தினார்.
2.8.16 முதல் 1.9.17 வரை உள்ள கால கட்டத்தில் வித்யாகாரகன் புதன் வீடான கன்னியில் அமர்வதால், இப்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டங்கள் இனி மாறும். மாணவர்கள் மனப்பாடம் செய்து வினாக்களுக்கு விடையளிக்கும் போக்கு மாறும். சொந்தமாக யோசித்து விடை எழுதும் முறை நடைமுறைக்கு வரும். இன்ஜினீயரிங், மருத்துவப் படிப்புக்கான பாடங்கள் நவீனமாகும். புகழ் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்கள் பாதிப்புக்குள்ளாகும். மறந்து போன நம்நாட்டு அறிஞர்களின் படைப்புகள், கண்டுபிடிப்புகளுடன் அயல்நாட்டு அறிஞர்களின் கருத்துக்களும் பாடத்தில் இனி இடம் பெறும். மாணவர்களின் புத்தகச் சுமை குறையும். வேலையில்லாமல் இருக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்நாட்டிலேயே வேலை கிடைப்பதற்கு புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கப்படும்.
மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலியல் சார்ந்த விழிப்பு உணர்வுகள் அதிகமாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் நம் நாட்டவரால் உலகுக்கு அறிமுகமாகும். அதிநவீன தொழில்நுட்பம் கொண்டதும் அளவில் சிறியதுமான கைப்பேசி, மடிக்கணினி மற்றும் கணினி வகைகள் சந்தையில் வெளியாகும். தகவல் தொழில்நுட்பத்துறை அசுரவளர்ச்சி அடையும். புதிதாக வானொலி, தொலைக்காட்சி மற்றும் நாள், வார, மாதப் பத்திரிகைகள் வெளியாகும். வைணவ ஸ்தலங்கள் வளர்ச்சியடையும்.
குருபகவான் ஐந்தாம் பார்வையால் சனிவீடான மகர ராசியைப் பார்ப்பதால், வாகன உற்பத்தி அதிகரிக்கும். சுயதொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை உயரும் ஆனால், புகழ் பெற்ற பாரம்பரியமான குடும்பத்தின் வழிவந்த தொழிலதிபர்கள் பாதிப்படைவார்கள். அன்னிய முதலீடுகள் அதிகமாகும். வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெரிய பதவியில் அமர்வார்கள். எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகமாகும். புதிய கனிம, கரிம வளங்கள் கண்டறியப்படும். வாஷிங் மிஷின், ஏ.சி. மிஷின் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் விலை குறையும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மழை மற்றும் இயற்கை வளங்களை கண்டறியக்கூடிய செயற்கைக் கோள்களை நம் நாட்டு அறிவியல் அறிஞர்கள் விண்ணில் செலுத்துவர். மலை, காடு செழிக்கும். வன விலங்குகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
குருபகவான் ஏழாம் பார்வையால் தன் வீடான மீன ராசியைப் பார்ப்பதால், கப்பல் போக்குவரத்துத் துறை வளர்ச்சியடையும். பழைய துறைமுகங்கள் புதுப்பிக்கப்படும். புதிய துறைமுகங்கள் உருவாக்கப்படும். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் உயரும். ஆனால், அவர்களைக் கட்டுப்படுத்தும் சட்டங்களும் நடைமுறைக்கு வரும். மத்திய அரசு ஊழியர்கள் புதிய சலுகைகளைப் பெறுவர். பவழப் பாறை மற்றும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க உலகளாவிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். தரமான குடிநீர், தடையில்லா மின்சாரம் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும். கிராமங்கள் வளர்ச்சியடையும். விவசாயிகளைப் பாதுகாக்கவும், மகசூலை அதிகப்படுத்தவும் மத்திய அரசு புதிய சலுகைகளை அறிவிக்கும். பருவ மழை தவறாது பொழியும்.
குருபகவான் ஒன்பதாம் பார்வையால் ரிஷப ராசியைப் பார்ப்பதால், சொந்த வீடு வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும். முகம், கண் சார்ந்த நோய்களுக்கு நவீன மருந்துகள் கண்டறியப்படும். கட்டுமானத்துறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வரும். ரியல் எஸ்டேட் 19.9.16-க்குப் பின் ஓரளவு சூடு பிடிக்கும். அதிநவீன குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் அதிகம் உருவாகும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும் நீதிபதிகளுக்கும் இடையில் கருத்து மோதல்களும், பனிப்போரும் அதிகரிக்கும். இளைஞர்கள் மத்தியில் அயல்நாட்டு மோகம் குறையும். அரசியலில் இளைஞர்களின் ஆதிக்கம் கூடும்.
குருபகவானின் நட்சத்திர பயணம்
2.8.16 முதல் 18.8.16 வரை உத்திரம் 2-ல் 19.8.16 முதல் 4.9.16 வரை உத்திரம் 3-ல் 5.9.16 முதல் 19.9.16 வரை உத்திரம் 4-ல் 20.9.16 முதல் 5.10.16 வரை அஸ்தம் 1-ல் 6.10.16 முதல் 21.10.16 வரை அஸ்தம் 2-ல் 22.10.16 முதல் 7.11.16 வரை அஸ்தம் 3-ல் 8.11.16 முதல் 24.11.16 வரை அஸ்தம் 4-ல் 25.11.16 முதல் 16.12.16 வரை சித்திரை 1-ல் 17.12.16 முதல் 16.1.17 வரை சித்திரை 2-ல் 17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை 3-ல் துலாம் 22.2.17 முதல் 7.4.17 வரை சித்திரை 2-ல் (வக்ரம்) 8.4.17 முதல் 2.5.17 வரை சித்திரை 1-ல் (வக்ரம்) 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் 4-ல் (வக்ரம்) 28.6.17 முதல் 14.7.17 வரை அஸ்தம் 4-ல் 15.7.17 முதல் 10.8.17 வரை சித்திரை 1-ல் 11.8.17 முதல் 1.9.17 வரை சித்திரை 2-ல் (வக்ர காலம் 22.2.17 முதல் 27.6.17 வரை)
இந்த குருமாற்றம் மக்களிடையே பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வத்தையும், சுயதொழில் தொடங்கும் முனைப்பையும் தரும். முன்னெச்சரிக்கை உணர்வையும், தெய்வபக்தியையும் அதிகப் படுத்துவதாக அமையும்.
பரிகாரம்:
கல்வி, கேள்விகளுக்கும், வர்த்தகத்துக் கும் உரிய கிரகமான புதனின் வீட்டில் குரு அமர்வதால், பழைய கல்வி நிறுவனங்களை புதுப்பிக்க உதவுங்கள். பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். திருக்குறள் உள்ளிட்ட நீதிநெறி நூல்களைப் படிப்பதுடன் அவற்றை பரிசுப் பொருளாகவும் மற்றவர்களுக்கு வழங்குங்கள். கன்னியில் அமர்ந்திருக்கும் குருவின் கருணை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
எதையும் உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங் களும் இருக்கும் என்றாலும் அதற்காக அஞ்ச வேண்டாம்.
எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம். கணவன் – மனைவிக்குள் சிலர் வீண் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்குகள் விஷயத்தில் எச்சரிக்கை தேவை. அவ்வப் போது கடன்சுமை கலக்கம் தரலாம்.
குரு தனது 9-ம் பார்வையால் உங்க ளின் குடும்ப ஸ்தானமான 2-ம் வீட்டைப் பார்ப்பதால், குடும்பத்தில் அமைதி உண்டாகும். தேங்கிக் கிடந்த வழக்கில் வெற்றியுண்டு. ஆரோக்கியம் சீராகும். குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால், பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர் கள். வி.ஐ.பி.களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். வேற்று மாநிலத் தவர்களால் அனுகூலம் உண்டாகும்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபச் செலவுகள் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
2.8.16 முதல் 19.9.16 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால், குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு சேர வேண்டிய பங்கு வந்து சேரும்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சுகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், வசதியுள்ள வீட்டுக்கு குடி புகுவீர்கள். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும்.
25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிநாதனும், அஷ்டமாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்க ளைப் புரிந்துகொள்வர். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், அலைச்சலும் செலவினங்களும் தொடரும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் சென்று உங்கள் ராசியைப் பார்ப்பதால், திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கள் வரும். திருமணம் கூடி வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், சகோதர வகையில் மனவருத்தம், சொத்து வாங்குவது, விற்பதில் சிக்கல்கள் வந்து செல்லும். தன்னம் பிக்கை குறையும். எனினும், முன்னேற்றம் தடைப்படாது.
வியாபாரத்தில், ஏற்ற-இறக்கங்கள் இருக்கவே செய்யும். ஆகவே, சந்தை நிலவரத்தை அறிந்து அதற்கேற்ப முதலீடு செய்யுங்கள். பழைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளுங்கள். கமிஷன், உணவு, மருந்து, கன்சல்டன்சி ஆகிய வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் நிலையை தக்கவைத்துக் கொள்ள போராட வேண்டியது இருக்கும். உங்கள் உழைப்பைப் பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு, சம்பள உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.
மாணவ-மாணவிகளே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். கட்டுரை, பேச்சு, இலக்கியப் போட்டிகளில் பரிசு பெற வாய்ப்பு உண்டு. நீங்கள் விரும்பிய கல்வி நிறுவனத்தில் போராடி இடம்பிடிப்பீர்கள்.
கலைத் துறையினருக்கு, மூத்த கலைஞர் களின் ஆதரவு கிடைக்கும். விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். உங்கள் உழைப்புக்கு சிலர் உரிமை கொண்டாட வாய்ப்பு உண்டு. எனவே கவனம் தேவை.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களது எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி, அவ்வப்போது உங்களை ஏமாற்றும். எனினும், உங்களின் சகிப்புத் தன்மையாலும் விட்டுக் கொடுத்துப் போகும் குணத்தாலும் ஓரளவு மகிழ்ச்சியை தருவதாக அமையும்.
பரிகாரம்: வேலூர் மாவட்டம் சோளிங்கர் எனும் ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீயோக நரசிம்மரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் நெய் தீபமேற்றி வணங்கி வாருங்கள். நல்லது நடக்கும்.
எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப் படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர் கிறார். உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறை யும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்னியம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். சிலருக்குக் குழந்தை பாக்கி யம் உண்டாகும். மகனின் கல்வி, வேலை தொடர்பான முயற்சிகள் சாதகமாகும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வேலைக்குக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வரும்.
குரு தனது 5-ம் பார்வையால் உங்க ளின் 9-ம் வீட்டை பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு.
உங்களின் லாப வீடான 11-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், தொட்டது துலங்கும். மூத்த சகோதர வகை யில் உதவிகள் உண்டு. சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். புதுப் பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் சுகாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில், 2.8.16 முதல் 19.9.16 வரை குரு பயணிப்பதால், தள்ளிப்போன வேலைகள் முடியும். பெற்றோரின் ஆரோக்கியம் சீராகும். அரசால் அனுகூலம் உண்டு.
20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சேவகாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத் திரத்தில் குரு செல்வதால், சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். நவீனரக வாகனம் மற்றும் கைப்பேசி வாங்குவீர்கள்.
உங்கள் சப்தம – விரயாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம்- கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகமாகும். திடீர் பயணங்களால் செலவுகள் இருக்கும். கடந்த கால கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது டென்ஷனாவீர்கள்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 6-ம் வீட்டில் குரு மறைவதால், குடும்பத்தில் சிறு குழப்பங்கள் வரக்கூடும். சிறு சிறு விபத்து களும் ஏறப்டலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். முன்கோபத்தைத் தவிர்க்கவும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், சுபச் செலவுகள் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். மாற்று மொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். பற்று வரவு உயரும். புதிய சரக்குகள் கொள்முதல் செய்வதற்கு பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களின் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். கடையை பிரதானமான இடத் துக்கு மாற்றுவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகமாவர். ரியல் எஸ்டேட், மூலிகை, ஏற்று மதி – இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபம் வரும்.
உத்தியோகத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். உயரதிகாரிகள் உங்களுக்கு முக்கியத் துவம் தருவார்கள்; உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். வேலைச்சுமை குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வு தேடி வரும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவீர்கள்.
மாணவ – மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். சக மாணவர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் விரும்பிய பாடப்பிரிவில் சேருவீர்கள்.
கலைத் துறையினரின் படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய கலைத் திறன் வளரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களுக்கு மன ஆறுதல் தருவதுடன், புகழ், கௌரவத்தைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: திருவிடைமருதூரில் அருள் பாலிக்கும் ஸ்ரீபெருமுலையாள் உடனுறை ஸ்ரீமகாலிங்க சுவாமியை பிரதோஷ நாளில் இளநீர் கொடுத்து வணங்குங்கள். வெற்றி கிட்டும்.
யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படும் அன்பர்களே!
இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்னை களை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள்.
சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும்.
உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம். சோர்வு, கை- கால் வலி வந்து விலகும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால், அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.
உங்களின் உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டை குரு தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால், புது வேலைக்கு முயற்சித்தவர் களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். புது பதவி, பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக் கப்படுவீர்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்ப தால் சுபச் செலவுகள் அதிகமாகும். வெளித் தொடர்புகள் விரிவடையும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் தைரிய ஸ்தானாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் – கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால் தைரியம் பிறக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும்.
20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் தனாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், சாமர்த்திய பேச்சால் சாதிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் கூடி வரும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிட்டும்.
உங்கள் சஷ்டம – லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், உடன்பிறந்தவர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள். தோல்வி மனப்பான்மையால் மனஇறுக்கம் உண்டாகும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 5-ம் வீட்டில் குரு அமர்வதால், புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். உறவினர்கள் மதிப்பார்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிவடையும். நெருக்கடிகளைச் சமாளிக்கும் ஆற்றலும் உங்களுக்குக் கிடைக்கும். இருமல், முதுகுத் தண்டில் வலி வந்து போகும். நல்ல வர்களுடன் நட்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
வியாபாரத்தில் சிறு சிறு நஷ்டங்கள் உண்டு. தொழில் ரகசியங்கள் கசியாமல் பார்த்துக்கொள்ளுங்கள். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். கூட்டுத் தொழிலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த ஆர்டர் தாமதமாக வரும். கட்டட உதிரி பாகங்கள், கமிஷன், காய்கறி வகை களால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் மேலதிகாரியைக் கணிக்க முடியாது. எனினும், கவலைகளை மறைத்துக்கொண்டு கடினமான உழைப்பைத் தொடர்வீர்கள். உங்களுக்கு நேர் மூத்த அதிகாரியை விடவும், மேல்மட்ட அதிகாரி ஆதரவாக இருப்பார். விரும்பத்தகாத இடமாற்றங்களும் வரும். அடிக்கடி விடுப்பில் செல்ல வேண்டாம்.
மாணவ-மாணவிகளே! தேர்வுகளில் போராடி வெற்றி பெறவேண்டிய நிலை என்பதால், பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிக்கவும். சிலருக்கு பள்ளி அல்லது கல்லூரி மாறவேண்டி இருக்கும்.
கலைத்துறையினருக்கு, வீண் வதந்தி களால் புகழ் குறையும். கிடைக்கும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, சிறு சிறு தடங்கல்களையும் இடமாற்றத்தையும் அவ்வப்போது தந்து உங்களை அலைக்கழித் தாலும், தொடர் முயற்சியால் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: நாச்சியார்கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீவஞ்சுளவல்லி உடனுறை ஸ்ரீதிருநறையூர் நம்பி மற்றும் கருடாழ்வாரை ஏதேனும் ஒரு வியாழக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்கி வாருங்கள். மனஅமைதி கிட்டும்.
உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகு முறையை மாற்றிக்கொள்வது நல்லது.
வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும்.கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது. இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்ப தால், உங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். புது வேலை அமையும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.
குருபகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால், பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால், உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறை வேறும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் தனாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில், 2.8.16 முதல் 19.9.16 வரை குரு பயணிப்பதால், உங்களின் மதிப்பு கூடும். திடீர் பணவரவு உண்டு. அரசு காரியங்கள் உடனே முடியும். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.
20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரையிலும், உங்கள் ராசிநாதனான சந்திரனின் அஸ்த நட்சத் திரத்தில் குருபகவான் செல்வதால், வருமானம் உயரும்.
ஆரோக்கியம் கூடும். உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
உங்களின் பிரபல யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.09.17 வரை குருபகவான் செல்வதால், நினைத்த காரியங்களை முடிப்பீர்கள். உங்களின் புகழ் உயரும். மகளுக்கு நல்ல வரன் அமையும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 4-ம் வீட்டில் குரு நுழைவதால், சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். பணப் பற்றாக் குறையை சமாளிப்பீர்கள்.
வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டு.சிலர், கடன் வாங்கி கடையை விரிவுபடுத்து வீர்கள். சிலர், கூட்டுத் தொழிலில் நம்பிக்கை யான பங்குதாரரை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். ஸ்டேஷனரி, போர்டிங் லாட்ஜிங், பெட்ரோ கெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் பணிகளைக் கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். கடினமாக உழைத்தும் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அதிகாரிகளின் ஆதரவு கூடும். சில நேரங்களில் அதிகாரிகள் கூடுதலாகத் தரும் வேலைகளை சலித்துக்கொள்ளாமல் செய்வது நல்லது. அடிக்கடி இடமாற்றம் வரும்.
மாணவ-மாணவிகளே! சின்னச் சின்ன தவறுகளையும் திருத்திக் கொள்ளுங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களைக் கேளுங்கள். கணக்கு, வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.
கலைத் துறையினருக்கு மறைமுகப் போட்டிகள் அதிகரிக்கும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். யதார்த்தமான படைப்பு களைத் தருவதற்கு முயற்சியுங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அவ்வப்போது உங்களை பலவீனமாக உணர வைக்கும். எனினும், முன்னெச்சரிக்கை உணர்வாலும், யதார்த்தமான பேச்சாலும் ஒரளவு முன்னேற்றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.
பரிகாரம்: கோயம்புத்தூர் மாவட்டம் ஆவாரம்பாளையம் எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீபண்ணாரி அம்மனை ஏதேனும் ஒரு திங்கள் கிழமையில் எலுமிச்சம் பழம் மாலை அணிவித்து வணங்குங்கள். முயற்சி திருவினையாக்கும்.
காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்களே!
இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடி நிறைவேறும்.
பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் வலிய வந்து மன்னிப்பு கேட்பார்கள். ஷேர் மூலமாக பணம் வரும். புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். வழக்கு சாதகமாகும்.
குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். அதிக சம்பளத்துடன் அயல்நாடு தொடர்பு டைய நிறுவனத்தில் வேலை அமையும்.
குரு பகவான் தனது 7-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால், பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மாற்று மொழியினரால் நன்மை உண்டு.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 10-ம் வீட்டைப் பார்ப்பதால், வேலைச்சுமை குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். சொந்தமாக சிலர் தொழில் தொடங்குவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
2.8.16 முதல் 19.9.16 வரை உங்கள் ராசியாதிபதியான சூரியனின் உத்திர நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் குரு பயணிப்பதால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். அரசாங்க கெடுபிடிகள் விலகும். வீடு- மனை வாங்குவீர்கள். நோய் விலகும்.
20.9.16 முதல் 24.11.16 வரை மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் விரய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்த நட்சத்திரத்தில் குரு செல்வதால், தூக்கம் கெடும். வீண் சந்தேகம் வேண்டாம். செலவுகளும், தர்ம சங்கடமான சூழ்நிலையும் அதிகரிக்கும்.
25.11.16 முதல் 16.1.17 வரை மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை உங்களின் யோகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் குரு செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 3-ம் இடத்தில் குரு மறைவதால், புதிய முயற்சிகள் தாமதமாகி முடியும். இளைய சகோதர வகையில் மனவருத்தம் வரும். வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்த நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், அநாவசியமாக எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். விமர்சனங் களைக் கண்டு அஞ்ச வேண்டாம். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் அடைவீர்கள்.
வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். பாக்கிகள் வசூலாகும். சந்தை நிலவரத்தை துல்லியமாக அறிந்து செயல் படுவீர்கள். மக்களின் ரசனைக்கேற்ப புதிய சரக்குகளைக் கொள்முதல் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். துரித உணவகம், ஆட்டோமொபைல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில், உங்கள் கடின உழைப் புக்கு அங்கீகாரம் கிடைக்கும். மூத்த அதிகாரி கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். சவாலான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சில சிறப்புப் பொறுப்பு களை உங்களிடம் ஒப்படைப்பார்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். சம்பளம் உயரும்.
மாணவ-மாணவிகளே! சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கடினமான பாடங்களில் கூட அதிக மதிப்பெண் பெறுவீர்கள்.
கலைத் துறையினருக்கு பெரிய வாய்ப்பு கள் வரும். பிரபல கலைஞர்களால் பாராட் டப்படுவீர்கள். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, ஒடுங்கியிருந்த உங்களை ஓங்கி வளர வைப்பதுடன், ஒரு சாதனையாளராக மாற்றிக் காட்டுவதாகவும் அமையும்.
பரிகாரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருளும் ஸ்ரீசினேகவல்லி உடனுறை ஸ்ரீஆதிரத்தினேஸ்வரரை உத்திராடம் நட்சத்திரம் அல்லது ஏதேனும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் வில்வ தளத்தால் அர்ச்சித்து வணங்கி வாருங்கள். கனவு நனவாகும்.
கலாரசனை உள்ளவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புக்கள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்யவேண்டி இருக்கும். கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்கமுடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால். தெளிவாக முடிவு எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடைபெறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.
குரு பகவான் 7-ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால், நீண்ட நாள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் மனக் கசப்புகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. வழக்குகளில் இருந்த நெருக்கடி நீங்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் பாக்ய வீடான 9-ம் வீட்டைப் பார்ப்பதால், அரைகுறையாக நின்ற வேலைகள் நல்லபடி முடியும். பணப் புழக்கம் அதிகரிக்கும். தந்தையின் உடல்நலம் சீராகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்களின் விரயாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். உத்திர நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு உடல் உஷ்ணம், தோலில் நமைச்சல், முன்கோபம் வந்து செல்லும்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் லாபாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், நினைத்த காரியங்கள் நல்லபடி முடியும். திடீர் பணவரவுக்கு இடமுண்டு. மகளுக்கு நல்ல வரன் அமையும். அஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கு காய்ச்சல், தலைவலி வந்து போகும். அவசரப்பட்டு முடிவு எடுக்கவேண்டாம்.
உங்கள் ராசிக்கு 3-க்கும் 8-க்கும் உடைய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு பசியின்மை, வயிற்று வலி வந்து போகும். சொத்து வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியான 2-ம் வீட்டில் குரு அமர்வதால், ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மோதல்கள் விலகும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிலும் அவசரப்பட வேண்டாம். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும்.
வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். தரமான பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். ஏற்றுமதி-இறக்குமதி, பதிப்பகம், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள்.
உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போகக் கற்றுக் கொள்ளுங்கள். சந்தர்ப்பம் பார்த்து அதற்கேற்ப உங்களுடைய கருத்துக் களை மேலதிகாரிகளிடம் பதிவு செய்வது நல்லது. நீங்கள் செய்து முடித்த வேலைக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள். அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும், இடமாற்றங்களையும் சந்திக்க வேண்டி வரும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்தவேண்டியது அவசியம். உங்களுடைய தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.
கலைத்துறையினரே! உங்களின் படைப்பு களை ரகசியமாக வைத்திருங்கள். சிலர் உங் கள் மீது வழக்கு தொடுக்க வாய்ப்பு உள்ளது.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்கள் உடலையும் மனதையும் உரப் படுத்துவதுடன், தன் கையே தனக்கு உதவி என்பதை உணரவைப்பதாக அமையும்.
பரிகாரம்: தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஏலவார்குழலி சமேத ஸ்ரீஆபத்சகாயேஸ் வரரையும், குருபகவானையும் பௌர்ணமி திதி நாளில் பஞ்சாமிர்தம் தந்து வணங்கி வாருங்கள்.
நடுநிலைமை தவறாதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்துகொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றிய துடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும்.
மனக் குழப்பம் அதிகரிக்கும். பழைய கடன்களை நினைத்துக் கலக்கம் உண் டாகும். வருமானத்தை உயர்த்த கூடுதலாக உழைப்பீர்கள். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிய வாகனம் வாங்குவீர்கள். சிலர் வேறு ஊருக்கு இடம் மாறுவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்ப தால், மறைமுக எதிரிகளால் ஆதாயம் அடைவீர்கள். நீண்ட நாளாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாகும். புது வேலை கிடைக்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால், உங்களிடம் உண்மையான அன்பும் அக்கறையும் உள்ளவர்களைப் புரிந்து கொள்வீர்கள். வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் ஆதாயம் உண்டாகும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்களின் பாதகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும். ஆன்மிகப் பெரியோரை சந்தித்து ஆசி பெறுவீர்கள்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்களின் ஜீவனாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், சவாலான காரியங்களைக்கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். அடகிலிருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். மகளுக்கு திருமணம் முடியும்.
உங்கள் தனாதிபதியும் சப்தமாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், வருமானம் உயரும். குடும்பத்தில், கணவன்-மனைவிக் குள் இருந்து வந்த மோதல்கள் விலகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் உங்கள் ராசியில் குரு அமர்ந்து ஜென்ம குருவாக வருவதால், காய்ச்சல், சளித் தொந்தரவு, மஞ்சள் காமாலை போன்ற உடல் உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில், கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், நினைப்பது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருக்கும். வேலைச் சுமையால் அசதி உண்டாகும்.
வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் ஈட்டுவீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்பீர்கள். வங்கிக் கடன் பெற்று சிலர் புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். எனினும், எவ்வளவு உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க அரும்பாடு படவேண்டும். சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
மாணவ-மாணவிகளே! படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. உங்களின் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள். சிலருக்கு பள்ளி மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.
கலைத்துறையினரே! கிடைக்கின்ற வாய்ப்புகளைச் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீண் வதந்திகளும், கிசுகிசுக்களும் இருக்கத்தான் செய்யும். மனம் தளராமல் செயல்படுங்கள்; சாதிக்கலாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங் களுக்கு புதிய படிப்பினைகளைத் தருவதுடன், வாழ்க்கையை எப்படி எதிர்க்கொள்வது என்று கற்றுத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆதிநாத நாயகி உடனுறை ஸ்ரீஆதிநாதப் பெருமாளை ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் துளசி மாலை அணிவித்து வணங்குங்கள்.
கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சகோதர வகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். புகழும் செல்வாக்கும் கூடும். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டு. சிலருக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பிள்ளை களின் வருங்காலத்துக்காகச் சேமிக்கத் தொடங்குவீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால், உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வீடு, மனை வாங்குவது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
குரு பகவான் 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகளுக்கு வேலை கிடைக்கும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல குடும்பத்தி லிருந்து வாழ்க்கைத் துணை அமைவார். வழக்கில் வெற்றி கிடைக்கும். குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்தினருடன் சென்று நேர்த்திக் கடன் செலுத்துவீர்கள்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் 7-ம் வீட்டைப் பார்ப்பதால், மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வீட்டை அழகுபடுத்துவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். அரசாங்க விஷயங்கள் சுலபமாக முடியும். சிலர் சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பாக்கியாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், உங்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். நிரந்தர வருமானத்திற்கு வழி தேடுவீர்கள்.
உங்கள் ராசியாதிபதியும்-சஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், எதிர்ப்புகள் குறையும்.புதிதாக சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். கடனில் ஒரு பகுதி தீரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 12-ம் வீட்டில் குரு மறைவதால், எதிர்பாராத பயணங்கள் உண்டு. வீடு கட்டும் முயற்சியில் இறங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், மனக்குழப்பங் களும், தடுமாற்றங்களும் இருந்து கொண்டே யிருக்கும். ஆனால், பண வரவு குறையாது.
வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்துகொண்டு பெரிய முதலீடுகள் செய்வீர்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். துரித உணவகம், இரும்பு, ரியல் எஸ்டேட், கடல் வாழ் உயிரினங்களால் லாபம் பெருகும். கடையை பிரபலமான இடத்துக்கு மாற்றுவீர்கள்.
உத்தியோகத்தில் அதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சம்பள உயர்வு, பதவி உயர்வு உண்டு. தலைமைப் பொறுப்பு தேடி வரும்.
மாணவ-மாணவிகளே! உங்களுடைய தனித் திறமைகளை அதிகரித்துக் கொள்வீர் கள். விரும்பிய கோர்ஸில் சேருவீர்கள்.
கலைத்துறையினரே! விருதுகள் கிடைக்கும். உங்களின் கற்பனைத் திறன் பெருகும். சக கலைஞர்களை மதிப்பீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களை தலை நிமிரச் செய்வதுடன், வசதி, வாய்ப்புகளைத் தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: மகாபலிபுரத்துக்கு அருகிலுள்ள திருப்போரூரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுருகப்பெருமானையும் சிதம்பர சக்கரத்தையும் ஏதேனும் ஒரு செவ்வாய் கிழமை அல்லது சஷ்டி திதி நாளில் சென்று தரிசியுங்கள். செல்வம் பெருகும்.
வளைந்து கொடுக்கத் தெரியாதவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரியவேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வி.ஐ.பி.களை சரியாகப் பயன்படுத்தி முன்னேறுவீர்கள். புது வேலை அமையும்.
குருபகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். அவருடனான மோதல்களும் விலகும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். தாய்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வழக்கு சாதகமாகும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால், செயலில் வேகம் காட்டுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் அட்டமாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். அவ்வப்போது அடிவயிற்றில் வலி, ரத்த சோகை, கண் வலி வந்து போகும்.
உங்கள் பூர்வ புண்ணியாதிபதியும் விரயாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், மனோபலம் கூடும். புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேறும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 11-ம் வீட்டில் குரு அமர்வதால், எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்டும் பணிக்கு, வங்கிக் கடன் கிடைக்கும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.2017 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும், 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், சொன்ன சொல்லைக் காப்பாற்ற முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
வியாபாரம் சுமாராக இருக்கும். கொடுக்கல்-வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். வேலையாட்களால் விரயம் ஏற்படும். புது ஒப்பந்தங்கள் தாமதமாகும். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ், சிமென்ட் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால், உத்தியோகத்தில் இடமாற்றம், மறைமுக எதிர்ப்புகள் உண்டாகும். அதிகாரிகள் கூடுதல் வேலை கொடுத்தாலும் சலிக்காமல் முடித்துத் தருவது நல்லது.
மாணவ-மாணவிகளே! சாதிக்கவேண்டு மானால் ஊக்கத்துடன் படிக்கவேண்டும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் கூடுதல் கவனம் அவசியம். சிலரின் சிபாரிசு பெற்றே விரும்பிய பாடப்பிரிவில் சேர முடியும்.
கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். குறைந்த பட்ஜெட் படைப்புகள் வெற்றி பெறும். மூத்த கலைஞர்களின் நட்பால் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கடின உழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனை யாலும் புதிய அனுபவப் பாடங்களை அள்ளித் தருவதாக அமையும்.
பரிகாரம்: உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருளும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியை வியாழக்கிழமை அல்லது தசமி திதியில் கொண்டைக் கடலை மாலை அணிவித்து வணங்குங்கள். தடைகள் விலகும்.
மனச்சாட்சிப்படி நடப்பவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மனஇறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். அறிஞர்களின் நட்பால் மனத் தெளிவு கிடைக்கும். உங்கள் கல்வித் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடையில் மரியாதை கூடும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஷேர் லாபம் தரும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர் கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும்.
குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் பிறக்கும். தடைப்பட்ட சுப நிகழ்ச்சிகள் நல்லபடி நடைபெறும். வழக்கு சாதகமாகும். திருமணப் பேச்சு வார்த்தை நல்லபடி முடியும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால், மாறுபட்ட யோசனைகள் மனதில் உதயமாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். பழைய கடன் பிரச்னை தீரும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமையல றையை நவீனமாக்குவீர்கள்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திடீர் பயணங்களும், செலவுகளும் அதிகரிக்கும். அலைச்சல் அதிகமாகும். சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சப்தமாதிபதி யான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குரு செல்வதால், மதிப்பு, மரியாதை கூடும். உங்களுடைய திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார். வீடு, வாகன வசதி பெருகும்.
உங்கள் சுகாதிபதியும் லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல்வதால், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். மூத்த சகோதரர் உதவுவார். தாயாரின் உடல்நலம் சீராகும். அவருடனான மன வருத்தங்கள் நீங்கும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசியில் 10-ம் வீட்டில் குரு அமர்வதால், வேலைச்சுமை அதிகமாகும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சின்னச் சின்ன அவமானம் ஏற்படக்கூடும். வீண் பழி ஏற்படும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், அடிக்கடி ஒரு தேக்க நிலை உண்டாகும். அவ்வப்போது இனம் தெரியாத கவலை வாட்டும். வயிறு தொடர்பான உபாதைகள் வந்து போகும்.
வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். புது முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு கூடும். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, ஃபைனான்ஸ், லெதர், ஆடை வடிவமைப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள்.
உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை கூடும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். கூடுதல் சலுகைகளும் கிடைக்கும். மூத்த அதிகாரிகள் உங்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும்.
மாணவ-மாணவிகளே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். கல்வியிலும், கலைப் போட்டிகளிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் கனவை நனவாக்குவீர்கள்.
கலைத்துறையினரே! திரையிடாமல் தடைப்பட்டிருந்த உங்களுடைய படைப்பு இப்போது வெளி வரும். ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
இந்த குரு மாற்றம் தோல்வியால் துவண்டு கிடந்த உங்களுக்கு ராஜயோகத்தைத் தருவதுடன், எங்கும் எதிலும் வெற்றி வாகைசூட வைக்கும்.
பரிகாரம்: மதுரை மாவட்டம் பரவை எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீமுத்து நாயகி அம்மனை வெள்ளிக் கிழமையில் மல்லிகைப்பூ மாலை தந்து வணங்குங்கள். மேன்மேலும் முன்னேறுவீர்கள்.
மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்துகொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான் இப்போது 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்கவேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத் தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். வழக்குகளில் பிற்போக்கான நிலையே காணப்படும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால், பிரச்னைகள் வெகுவாகக் குறையும். வெளியூர்ப் பயணங்களால் நிம்மதி கிட்டும். வேற்று மொழியினரின் ஆதரவு கிட்டும். கடந்த காலத்தில் உங்களால் பயனடைந்தவர்கள் தற்சமயம் உங்களுக்கு உதவ வாய்ப்பிருக்கிறது. புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
குரு பகவான் ஏழாம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டைப் பார்ப்பதால், பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள், விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பெருகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 4-ம் வீட்டைப் பார்ப்பதால், எதிர்ப்புகள் குறையும். முடிக்க முடியுமா என்று நினைத்த பல காரியங்கள் இப்போது முடியும். தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல் விலகும். அடகிலிருந்த நகைகள், பத்திரங்களை மீட்க உதவிகள் கிட்டும். அரசு காரியங்கள் தாமதமாகி முடியும்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் சஷ்டமாதி பதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அவ்வப் போது இனம் தெரியாத அச்சம் ஏற்படும். சிலருக்கு அல்சர் வர வாய்ப்பிருக்கிறது.
உங்கள் தைரிய ஸ்தானாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குருபகவான் செல் வதால், நெருக்கடிகளைச் சமாளிப்பீர்கள். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும். இளைய சகோதர வகையில் மதிப்பு கூடும். வழக்குகள் சாதகமாகும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 9-ம் வீட்டில் குரு அமர்வதால், அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருகும். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், உங்களுக்கு சிலர் உதவுவதாகச் சொல்லி உபத்திரவத்தில் சிக்க வைப்பார்கள். அவ்வப்போது உணர்ச்சிவசப்படு வீர்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். ஆன்மித்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
வியாபாரத்தில், மற்றவர்களை நம்பி புது முயற்சிகளில் இறங்க வேண்டாம். போட்டிகளால் லாபம் குறையும். கடையை மாற்ற வேண்டிய நிர்பந்தம் சிலருக்கு உண்டாகும். கமிஷன், பெட்ரோ கெமிக்கல், மின்சார சாதனங்கள், மர வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை சேர்த்து பார்க்க வேண்டி வரும். சிலர் உத்தியோகத்தின் பொருட்டு அயல்நாடு செல்வீர்கள். நியாயமான பதவி உயர்வு, சம்பள உயர்வைக்கூட போராடிப் பெற வேண்டி வரும்.
மாணவ-மாணவிகளே! மறதி ஏற்படும் என்பதால், பாடங்களை கவனமாகப் படித்து, அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது அவசியம்.
கலைத்துறையினரே! சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள். சின்னச் சின்ன வாய்ப்பு களையும் அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, விடாமுயற்சியால் உங்களின் இலக்கை எட்டிப் பிடிக்க வைப்பதாக அமையும்.
பரிகாரம்: வேதாரண்யம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவேதநாயகி உடனுறை ஸ்ரீதிருமறைக்காடரை பூசம் அல்லது சுவாதி நட்சத்திர நாளில் பாலாபிஷேகம் செய்து வணங்குங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப் பதால், தன்னம்பிக்கை கூடும்.
தடைப்பட்ட திருமணம் கூடிவரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.
குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டைப் பார்ப்பதால், நினைத்த காரியம் சுலபமாக முடியும். ஷேர் மூலம் பணம் வரும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்.
குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால், துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகள் வீட்டில் ஏற்பாடாகும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சியை ஆதரிப்பார். அவரின் ஆரோக்கியம் சீராகும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.
குருபகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 3-ம் வீட்டைப் பார்ப்பதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் நன்மை உண்டாகும். வீடு, மனை வாங்கு வது, விற்பது லாபகரமாக முடியும்.
குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்
உங்கள் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரம் 2, 3, 4-ம் பாதம் கன்னி ராசியில் 2.8.16 முதல் 19.9.16 வரை குருபகவான் பயணிப்பதால், திட்டமிடாத செலவுகள் இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். இனம் தெரியாத கவலைகள் வந்து போகும்.
20.9.16 முதல் 24.11.16 மற்றும் 28.6.17 முதல் 14.7.17 வரை உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால், புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். மகனுக்கு நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். பூர்வீகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். சிலர் வீடு மாறுவீர்கள்.
உங்கள் தனாதிபதியும் பாக்கியாதிபதியு மான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம்
1, 2-ம் பாதம் கன்னி ராசியில் 25.11.16 முதல் 16.1.17 மற்றும் 15.7.17 முதல் 1.9.17 வரை குரு செல்வதால், எதையும் சாதிக்கும் துணிவு வரும். தந்தை மற்றும் தந்தைவழி உறவினர்களின் ஆதரவு பெருகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.
17.1.17 முதல் 21.2.17 வரை சித்திரை நட்சத்திரம் 3-ம் பாதம் துலாம் ராசி 8-ம் வீட்டில் குரு மறைவதால், எதிலும் ஆர்வ மின்மை, காரியத் தாமதம், சிறுசிறு விபத்துகள், வேலைச்சுமை வந்து போகும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.
குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
22.2.17 முதல் 2.5.17 வரை குருபகவான் சித்திரை நட்சத்திரத்திலும் 3.5.17 முதல் 27.6.17 வரை அஸ்தம் நட்சத்திரத்திலும் வக்கிர கதியில் செல்வதால், எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சொத்துப் பிரச்னை தலை தூக்கும். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டி வரும். சகோதரர்கள் அதிருப்தி அடைவார்கள்.
வியாபாரம் விறுவிறுப்படையும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் மதிப்பார்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஸ்பெக்குலேஷன், இறக்குமதி, ஜுவல்லரி வகைகளால் லாபமடைவீர்கள். வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும்.
உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். சக ஊழியர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். திறமைகளை வளர்த்துக் கொள்ள வாய்ப்பு கிட்டும். பதவி உயர்வு கிடைக்கும்.
மாணவ-மாணவிகளே! எண்ணங்கள் பூர்த்தியாகும். நீங்கள் விரும்பிய பாடப்பிரிவில், எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேருவீர்கள்.
கலைத்துறையினரே! வெளிநாட்டு நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மக்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கஷ்டங்களில் மூழ்கிக் கிடந்த உங்களை கலகலப்பாக்குவதுடன், வெற்றியையும், அதிரடி வளர்ச்சியை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: கும்பகோணத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகரும்பாயிரம் பிள்ளையாரை ஏதேனும் ஒரு சதுர்த்தி திதி நாளில் அருகம்புல் மாலை அணிவித்து வணங்குங் கள். சாதனை படைப்பீர்கள்.
இந்த வார ராசிபலன் 21-07-2016 முதல் 27-07-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். மக்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகமாகும். சாதுக்கள் தரிசனம் கிடைக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களின் எண்ணம் நிறைவேறும். மாணவர்களது நோக்கம் நிறைவேறும். வாரப் பின்பகுதியில் செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. ராசிநாதன் செவ்வாய் சனியுடன் கூடி 8-ல் இருப்பதால் உடல் நலனில் அக்கறை தேவை.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 24-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகள் நிறைவேறும். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் ஈடேறும். கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கணவன்-மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. 24-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் ஏற்படும்.
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பு. 24-ம் தேதி முதல் புதன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். தந்தை நலனில் கவனம் தேவை. வாரப் பின்பகுதியில் எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும். எதிர்ப்புகள் விலகும். பொருளாதார நிலை உயரும். திரவப் பொருட்களால் லாபம் கிடைக்கும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்கள், விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். இயந்திரப் பணியாளர்களுக்கு லாபம் கூடும். இஞ்ஜீனியர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 22, 24, 25.
திசைகள்: வடக்கு, தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 2-ல் குருவும் உலவுவது நல்லது. பெரியவர்களும் தனவந்தர்களும் உதவி புரிவார்கள். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் நிலை உயரப் பெறுவார்கள். தெய்வப் பணிகள் நிறைவேறும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் உலவுவதால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். விஷ பயம் உண்டாகும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியம். 24-ம் தேதி முதல் வியாபாரம், கணிதம், எழுத்து, விஞ்ஞானத் துறைகளைச் சேர்ந்தவர்கள் அனுகூலமான போக்கைக் காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 24 (பிற்பகல்), 25.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இள நீலம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: மகா கணபதியை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 12-ல் சுக்கிரன் உலவுவது ஒன்றே சிறப்பு. அவரும் சூரியனோடு கூடி இருக்கிறார். கோசாரம் சிறப்பாக இல்லை. ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் நலம் உண்டாகும். ஜாதக பலமும் இல்லாதவர்களுக்குச் சங்கடங்கள் ஏற்படும். அலைச்சல் கூடும். உடல் நலம் பாதிக்கும். வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். இடமாற்றமும் நிலைமாற்றமும் ஏற்படும். மனதில் ஏதேனும் கவலை இருந்துவரும். புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. வியாபாரிகள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றி வருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. அரசாங்கத்தாரால் தொல்லைகள் சூழும். தந்தை நலனில் கவனம் தேவை. நண்பர்கள், உறவினர்களால் மன வருத்தம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22.
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இள நீலம், வெண்மை.
எண்கள்: 6, 9.
பரிகாரம்: கோளறு திருப்பதிகம் வாசிப்பது நல்லது.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும், 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவதால் மன மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். வழக்கில் வெற்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்களுக்குப் பரிசுகளும் சன்மானங்களும் கிடைக்கும். நிலபுலங்கள் சேரும். சொத்துகளால் ஆதாயம் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபாடு கூடும். துணிச்சலான காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவி வரும். கலைஞர்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயரும். கணவன்- மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். 24-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. செய்துவரும் தொழிலில் கவனம் தேவை.
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியனும் புதனும், 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பு. தொழில்நுட்பத் திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். தெய்வானுக்கிரகம் உண்டாகும். பணப் புழக்கம் கூடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பயணம் சார்ந்த இனங்கள் ஆக்கம் தரும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். எதிரிகள் அடங்குவார்கள். அரசாங்க உதவி கிடைக்கும். தந்தையால் நலம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருமானம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.
திசைகள்: வடகிழக்கு, கிழக்கு, வடக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 3, 4, 5.
பரிகாரம்: விநாயகரை வழிபடுவது நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி-இறக்குமதி தொழிலில் லாபம் கிடைக்கும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். பெண்களின் நிலை உயரும். ஆராய்ச்சியாளர்களுக்கு வரவேற்பு கூடும். ஜன்ம ராசியில் செவ்வாயும்; சனியும், 4-ல் கேதுவும் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். இயந்திரப் பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. விவசாயிகளுக்குப் பிரச்சினைகள் சூழும். 24-ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இள நீலம், வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: ஜன்மச் சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. விநாயகர், ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் சுக்கிரனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. பணப் புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சாற்றல் கூடும். நல்லவர்கள் நலம் புரிவார்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காணச் சந்தர்ப்பம் கூடிவரும் . கலைஞர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அறப் பணியாளர்களின் நோக்கம் நிறைவேறும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். 8-ல் சூரியனும், 12-ல் செவ்வாய்; சனி உலவுவதால் உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைப்பது நல்லது. வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.
திசைகள்: வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.
உங்கள் ராசிக்கு 11-ல்செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பு. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். சட்டம், காவல், ராணுவம், பொறியியல் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும். பொது நலப் பணிகளில் ஆர்வம் கூடும். பூமியிலிருந்து வெளிவரும் பொருட்கள் லாபம் தரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் குடும்ப நலனில் கவனம் தேவை. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். விட்டுக் கொடுப்பது நல்லது. மக்கள் நலனில் அக்கறை தேவை. பொருள் கொடுக்கல் வாங்கலில் விழிப்பு அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 22, 24, 25.
திசைகள்: மேற்கு, தெற்கு.
நிறங்கள்: கரு நீலம், சிவப்பு.
எண்கள்: 8, 9.
பரிகாரம்: விநாயகர், துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவு தேவை.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும் புதனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாய்; சனி உலவுவது சிறப்பு. நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். தொழில்நுட்பத் திறமை கூடும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். பணப் புழக்கம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வாரப் பின்பகுதியில் வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சி காண்பார்கள். சுக்கிரன் 6-ல் இருப்பதாலும், ஜன்ம ராசியில் கேதுவும், 7-ல் ராகு உலவுவதாலும் வாழ்க்கைத் துணைவரால் சில இடர்ப்பாடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 22, 24, 25.
திசைகள்: வடக்கு, வட கிழக்கு, தெற்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, பொன் நிறம், சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 5, 8, 9.
பரிகாரம்: ஏழைப் பெண்களுக்கும், சுமங்கலிகளுக்கும் உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. கலைஞானம் பிரகாசிக்கும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவி வரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் கிடைக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. மக்களாலும் தந்தையாலும் பிரச்சினைகள் சூழும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. 24-ம் தேதி முதல் வியாபாரத்தில் வளர்ச்சி காண வழி பிறக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 21, 24 (பிற்பகல்), 25.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், புகைநிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடுவது நல்லது. பெரியவர்களிடம் நல்வாழ்த்துக்களைப் பெறவும்.
இந்த மாதத்தில் சற்று சவாலான சூழலை எதிர்கொண்டு வருவீர்கள். நினைத்த காரியம் ஒவ்வொன்றும் சிறிது போராட்டத்திற்கு பின்பு முடிவிற்கு வரும். ராசிநாதன் செவ்வாயோடு இணைவினைப் பெற்றிருக்கும் சனி பகவான் உங்கள் பணிகளில் சிறு சிறு இடையூறுகளை உண்டாக்குவார். ஆகஸ்டு மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் கிரக நிலை மாற்றம் நல்ல முன்னேற்றத்தினைத் தரும். குடும்பத்தில் சலசலப்பான சூழல் நிலவி வரும். பொருள் வரவு நிலையில் சிறிது சுணக்கம் உண்டாகலாம். உடன்பிறந்தோருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய வேண்டியிருக்கும். அடுத்தவர் மனம் கவரும் வகையிலான பேச்சுக்களை வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் சிரமத்தினையும், மாலை நேரத்தில் பயனுள்ள வகையிலும் அமையும். வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். இந்த மாதத்தில் பயன்தரும் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.
தகப்பனார் வழி உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். வண்டி வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். முன்னோர்கள் பற்றிய சிந்தனை அவ்வப்போது மனதினில் இடம்பிடிக்கும். எதிர்கால நலன் கருதி புதியதொரு சேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. அலர்ஜியின் காரணமாக உண்டாகும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளால் உடல்நிலையில் சிரமம் தோன்றக்கூடும். வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். புதிய நட்புறவு ஒன்றினால் அதிக செலவு களுக்கு ஆளாவீர்கள். கலைத்துறையினரின் கற்பனைகள் செயல்வடிவம் பெறும். தொழில்முறையில் இருந்து போட்டியான சூழலை சமாளித்து வெற்றி காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோருடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டியது அவசியம். போராட்டத்தினைக் கண்டாலும், வெற்றி பெறும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 16, ஆகஸ்டு 11, 12, 13 பஞ்சமுக ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.
ராசிநாதனின் சாதகமான சஞ்சார நிலையினால் இந்த மாதத்தில் உங்கள் மனதினில் மகிழ்ச்சி நிறைந்திருக்கக் காண்பீர்கள். உங்களைச் சுற்றிலும் கலகலப்பான சூழ்நிலையை உருவாக்கி வைத்திருப்பதில் அதிக அக்கறை கொள்வீர்கள். நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வகையில் நடந்தேறி வருவதால் மனநிம்மதிக்குக் குறைவிருக்காது. பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும்படியான வார்த்தைகள் நிறைந்திருக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் பொருள் வரவு சிறப்பாக இருந்து வரும். உடன்பிறந்தோரால் கௌரவம் உயரும்படியான சம்பவங்கள் நிகழும். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவினில் பயன் தரும் வகையில் அமையும். அவ்வப்போது சிறு சிறு பிரயாணங்களுக்கான வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு மாதத்தின் துவக்கத்தில் எதிர்பாராத வகையில் உண்டாகும் தொலைதூரப் பிரயாணத்தின் மூலம் எதிர்காலத்தில் சிறப்பான பலனைக் காண்பீர்கள்.
உறவினர்களின் வழியில் ஆதாயம் தரும் தகவல் வந்து சேரும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் செயல்களில் சிறிது மந்தத்தன்மையை உணரலாம். அவர்களின் செயல்கள் ஒரு சில இழப்புகளைத் தோற்றுவிப்பதோடு அதிகப்படியான செலவினையும் தரக்கூடும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவார். நெருங்கிய நண்பர் ஒருவருக்கு கடனுதவி செய்ய வேண்டியிருக்கும். தொழில்முறையில் தரகு, கமிஷன் ஆகியவற்றால் அதிக லாபம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நேரடியான அணுகுமுறையை கடைபிடித்து வருவது நல்லது. சுயதொழில் செய்வோர் நல்ல லாபத்தினைக் கண்டு வருவார்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்பினைப் பெறுவர். நற்பலனைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 17, 18, 19, ஆகஸ்டு 14, 15 வரலட்சுமி விரத நாளன்று சுமங்கலி பூஜை செய்வது நல்லது.
கிரக நிலை சாதகமாக உள்ளதால் இந்த மாதத்தில் சற்று நிம்மதியான சூழலைக் காண்பீர்கள். ராசிநாதன் புதனின் சாதகமான சஞ்சார நிலை ஏதேனும் ஒரு வகையில் பொருள் வரவினைத் தோற்றுவிக்கும். குருப்பெயர்ச்சியும் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்வியல் நிலைக்குக் குறைவிருக்காது. மனதில் மகிழ்ச்சி நிலவி வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்திற்கிணங்க புதிய சொத்து ஒன்றினை வாங்குவதற்கான வாய்ப்பு உண்டு. தேர்ந்தெடுத்துப் பிரயோகிக்கும் வார்த்தைகளால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் இரவு நேரத்தில் மிகுந்த பயனுள்ள வகையில் அமையும். ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் செயற்கரிய செயல் ஒன்றினைச் செய்து தனிப்பட்ட முறையில் பெயரும், புகழும் அடைவதற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். உறவினர்களுக்கு உதவி செய்யப்போய் ஒரு சில தர்மசங்கடங்களை எதிர்கொள்ள நேரிடலாம். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில் அமையும். நரம்பியல் சார்ந்த பிரச்சினைகளால் உடல்நிலையில் சிரமத்தினைக் காண நேரிடலாம். வாழ்க்கைத்துணையோடு அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களின் வழியில் கூடுதல் செலவினங்களுக்கு ஆளாக நேரிடும். அரசுத் தரப்பு காரியங்களில் இழுபறியினை சந்திக்க நேரிடும். கலைத்துறையினர் புதிய முயற்சியில் வெற்றி காண்பர். தொழில் முறையில் இருந்து வரும் அலைச்சல் நிலை தொடர்ந்து கொண்டிருக்கும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளோடு நேரடித் தொடர்பில் இருந்து வருவது நல்லது. நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 20, 21, ஆகஸ்டு 16 புதன்தோறும் பெருமாளுக்கு துளசிமாலை சாற்றி வழிபடுங்கள்.
இந்த மாதத்தில் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் வகையிலான கிரக அமைப்பு நிலவுகிறது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்களது கௌரவத்தினை உயர்த்திக் காட்டும் வகையில் அமையும். விவேகம் நிறைந்த செயல்களால் அடுத்தவர்களிடமிருந்து தனித்துவம் பெறுவீர்கள். இடம், பொருள் அறிந்து வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் மூலம் நினைத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். ஆகஸ்டு 1ம் தேதி முதல் வரவு நிலை உயரும். புதிதாக சொத்து ஒன்று வந்து சேர்வதற்கான வாய்ப்பும் உண்டு. உடன்பிறந்தோரின் முன்னேற்றத்திற்காக உதவி செய்ய வேண்டியிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது பழுதாகி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். முன்பின் தெரியாத நபர்களை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் அதிகரிக்கலாம். ஜூலை மாதத்தின் இறுதியில் எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.
மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் உயர்வினைக் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் வழியில் ஒரு சில செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். ஆயினும் அவர்களது செயல்கள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற் போல் அமைவது கண்டு மன நிம்மதி காண்பீர்கள். நினைத்த காரியத்தில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி கண்டு வரும்போதும் மனதின் மூலையில் ஒருவித குழப்பம் இடம்பிடித்திருப்பதைத் தவிர்க்க இயலாது. வாழ்க்கைத்துணையோடு சிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு புதிய உற்சாகத்தைத் தரும். தொழில்முறையில் தங்கள் திட்டங்கள் வெற்றி பெற்று வருவதை கண்கூடாகக் காண்பீர்கள். கலைத்துறையினருக்கு ஆடிமாதத்தின் முற்பாதியில் திட்டமிடுதலுக்கும், பிற்பாதியில் செயலில் இறங்குவதற்கும் காலநேரம் சாதகமாக அமையும். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 22, 23 திங்கள்தோறும் சிவாலயத்தில் அன்னதானம் செய்து வாருங்கள்.
இந்த ஆடி மாதத்தின் முற்பாதியில் சற்று சிரமத்தினையும், பிற்பாதியில் சாதகமான அம்சத்தினையும் அனுபவிக்க உள்ளீர்கள். ஆகஸ்டு 1ம் தேதி வரை எந்த ஒரு காரியத்திலும் அவசரப்படாது நிதானத்தினை கடைப்பிடிப்பது நல்லது. நினைத்த காரியத்தை செய்து முடிக்க கடுமையான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நினைப்பது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கக் கண்டு மனம் வருந்துவீர்கள். ஆகஸ்டு மாதத்தின் துவக்கத்தில் உண்டாகும் கிரக நிலை மாற்றம் உங்கள் பணிகளை எளிதாக்கும். குறிப்பாக குருப்பெயர்ச்சியினால் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். அதுவரை பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கருத்துக்கள் மற்றவர்களால் தவறாகப் பொருள் காணப்படலாம். குடும்பத்தில் சலசலப்பு நிலவி வரும். பொருள் வரவு நிலையில் ஒரு சில தடைகளைக் காண நேரிடும். உடன் பிறந்தோர் உதவிகரமாக செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணி நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் உதவிகரமாய் அமையும்.
பெண் நண்பர்களால் சாதகமான பலன்களைக் கண்டு வருவீர்கள். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முன்னிலை பெறுவார்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். ஆன்மிகம் பற்றிய சிந்தனைகள் மனதினை அதிகமாக ஆக்கிரமித்திருக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கும் நேரம் இது. கலைத்துறையினர் ஆகஸ்டு முதல் சிறப்பான ஆதாயம் காண்பர். சுயதொழில் செய்வோர், மற்றும் வியாபாரிகள் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். உத்யோகஸ்தர்கள் தங்களது உண்மையான உழைப்பிற்கான ஆதாயத்தினை அடைவர். துவக்கத்தில் சிரமத்தினையும், போகப்போக ஆதாயத்தினையும் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 24, 25 ஆடி அமாவாசை நாளில் முதியோர் இல்லத்தில் அன்னதானம் செய்யுங்கள்.
ராசிநாதன் புதனின் சாதகமான அமர்வு நிலை ஆடி மாதத்தின் துவக்கத்தில் சிறப்பான நற்பலன்களை ஏற்படுத்தித் தரும். ஜூலை 24ம் தேதி முதல் எடுத்த காரியம் எளிதில் முடியாமல் சற்று கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். ஜென்ம ராசியில் வந்து அமர உள்ள குருபகவான் உங்களை நேர்மையான பாதையில் வழிநடத்திச் செல்வார். ஆகஸ்டு 1ம் தேதி வரை நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வழியில் வெற்றிகரமாக நடந்தேறும். விவேகமான செய்கைகளின் மூலம் காரிய வெற்றியை சாத்தியமாக்கிக் கொள்வீர்கள். செலவுகளை சமாளிக்கின்ற வகையில் பொருள் வரவு தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். குடும்ப உறுப்பினர்களின் நீண்ட நாள் விருப்பத்திற்கேற்ப ஆடம்பரப் பொருள் ஒன்றினை வாங்கும் வாய்ப்பு வந்து சேரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் பொழுதினில் தடையாகவும், இரவு நேரங்களில் சாதகமாகவும் அமைந்திருக்கும்.
உறவினர்களுடனான சந்திப்பின் மூலம் குடும்பப் பாரம்பரிய சம்பிரதாயங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு உருவாகும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் காண்பார்கள். ஜூலை மாதத்தின் கடைசி வாரத்தில் எதிர்பாராத விதமாக தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு வந்து சேரும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் விதமாக அமையும். பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்சனைகள் தோன்றலாம். வழக்கு விவகாரங்கள் இழுபறியைத் தரும். கடன் பிரச்சனைகள் மீண்டும் தலையெடுக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணைநிற்பார். பிள்ளைகளின் செயல்களில் ஒருவித மந்தத்தன்மையை உணர்வீர்கள். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலைக் காண்பீர்கள். கலைத்துறையினர் ஜூலை இறுதிவரை தனலாபம் காண்பர். சுயதொழில் செய்வோர் சற்று நிதானித்துச் செயல்படுவது நல்லது. முயற்சியால் முன்னேறும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 26, 27, 28 குலதெய்வ வழிபாடு குடும்பத்திற்கு நன்மை சேர்க்கும்.
ராசிநாதன் சுக்கிரனின் சஞ்சார நிலை இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு நற்பலன்களைப் பெற்றுத் தரும். உழைப்பின் மீதான நம்பிக்கை கூடும். இதுநாள் வரை இருந்து வந்த மந்தமான மனநிலை மாறி எந்த ஒரு காரியத்தையும் துணிந்து சாதிப்பீர்கள். சுறுசுறுப்புடன் பணியாற்றி எடுத்த காரியத்தை விரைந்து முடித்து ஆதாயம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்து வரும் சலசலப்புகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் துவங்கும். செலவுகள் கூடினாலும் சமாளிப்பீர்கள். உங்கள் பேச்சினில் வெளிப்படும் வார்த்தைகள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்பட்டு சிறிது சிரமத்திற்கு ஆளாகலாம். உடன்பிறந்தவர்களோடு லேசான கருத்து வேறுபாடு உருவாகக் கூடும். தகவல் தொடர்பு சாதனங்கள் அவ்வப்போது செயலிழந்து காரியத்தடையை உருவாக்கக்கூடும். எந்த ஒரு காரியத்திலும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்குவது நல்லது. அந்நியப் பெண்களிடம் எச்சரிக்கையோடு பழக வேண்டியது அவசியம்.
குடும்ப விவகாரங்களை அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வது நல்லதல்ல. மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் செயல்கள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமையக்கூடும். அவர்களது வழியில் கூடுதல் செலவினத்தை சந்திக்க நேரிடலாம். மருத்துவ செலவுகள் உண்டாகும் வாய்ப்பு உள்ளதால் உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாய்த் துணை நிற்பார். சொத்து விவகாரங்களில் புதிய பிரச்னைகள் முளைக்கலாம். தான தர்ம காரியங்களுக்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் சிறப்பாக செயல்பட்டு நற்பெயர் காண்பார்கள். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காணும் நேரம் இது. கலைத்துறையினர் தொழில்முறையில் தனலாபம் காண்பர். நற்பலன்களைத் தரும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 29, 30 சனிதோறும் எள்ளுப்பொடி சாதம் நைவேத்யம் செய்து தானம் செய்திடுங்கள்.
எந்த ஒரு காரியத்திலும் விடா முயற்சியோடு செயல்பட்டு வெற்றி காணும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்களைத் தரும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தீவிரமாகச் செயல்படுவீர்கள். அரசுத்தரப்பிலிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஒரு சில காரியங்களில் உடனிருப்போராலேயே எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். எச்சரிக்கை தேவை. பொருள் வரவு நிலை நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி நிலவும். சுபகாரியங்கள் நிகழ்வதற்கான வாய்ப்பு உண்டு. பேசும் வார்த்தைகளில் அவ்வப்போது தத்துவம் நிறைந்த கருத்துக்கள் வெளிப்படக்கூடும். உடன்பிறந்தோரால் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் உரிய நேரத்தில் செயலிழந்து சற்று சிரமத்தினைத் தரக்கூடும். எந்த ஒரு காரியத்திலும் இடைத்தரகர்களை நம்பாது நேரடியாக செயலில் இறங்க வேண்டியிருக்கும். புதிய உறவு ஒன்றினால் நம்பிக்கை துரோகத்தினை சந்திக்க நேரலாம்.
வண்டி, வாகனங்களால் ஆதாயம் காண்பீர்கள். பிரயாண சுகம் உண்டு. ஆன்மிகப் பயணம் ஒன்றிற்கான வாய்ப்பு உருவாகும். நல்லோர்களின் சந்திப்பின் மூலம் மனமகிழ்ச்சி காண்பீர்கள். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தினைக் கண்டு வருவார்கள். பிள்ளைகளின் செயல்கள் மனமகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும், அவர்களது உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. பொதுக்காரியங்களில் ஈடுபடும்போது வீண் வம்பு விவகாரங்களில் சிக்க நேரிடலாம். தம்பதியருக்குள் அன்யோன்யம் கூடும். சம்பந்தமில்லாத, அர்த்தமற்ற செலவுகளால் சற்று பொருளிழப்பினை சந்திக்க நேரிடும். தொழில்முறையில் கடும் அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் அதற்குரிய தனலாபத்தினை உடனுக்குடன் காண்பீர்கள். கலைத்துறையினர் தங்கள் வாய்ப்பினைப் பயன்படுத்தி சாதிப்பர். உண்மையான உழைப்பினால் வெற்றியைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஜூலை 31, ஆகஸ்டு 1 கருமாரியம்மனை வணங்கி வாருங்கள். வெள்ளிதோறும் மாரியம்மன் ஆலயத்தில் எலுமிச்சை சாதம் தானம் செய்யுங்கள்.
இந்த மாதத்தில் மனதில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கக் காண்பீர்கள். தான, தர்ம காரியங்கள், ஆன்மீக விவகாரங்களில் அதிக நாட்டம் செல்லும். சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகள், குடும்பப் பெரியோர்களின் கருத்துக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு இடம்பிடிக்கும். அதே நேரத்தில் படபடப்பின்றி செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சீரான பொருள் வரவு நிலை தொடர்ந்து கொண்டிருக்கும். மனதில் இருந்து வரும் விடை தெரியாத வினாக்கள் அவ்வப்போது வார்த்தைகளாக வெளிப்படும். உடன்பிறந்தோர் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் செயல்படுவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பொது அறிவினை வளர்த்துக் கொள்ளும் வகையில் மிகுந்த பயனளிக்கும். தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. வண்டி, வாகனங்கள் தொழில் முறையில் உதவிகரமாக அமையும். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.
தகப்பனார் வழியில் உறவினர் ஒருவருடன் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் வாழ்வினில் சுபநிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிடும். கேளிக்கை, கொண்டாட்டங்கள், உல்லாசப் பயணம் சார்ந்த விவகாரங்களுக்காக அதிகமாக செலவழிக்க வேண்டியிருக்கும். கடன் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். முன்பின் தெரியாத பெண்களுக்கு உதவப்போய் தர்மசங்கடமான சூழலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்துக்களில் புதிய பிரச்சினைகள் தலையெடுக்கலாம். தொழில்முறையில் ஜூலை 24ம் தேதிக்குப் பிறகு சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவீர்கள். கலைத்துறையினர் ஆகஸ்டு 1 முதல் புதிய பாதையைத் தேர்ந்தெடுப்பர். சுயதொழில் செய்வோர் எதிர்பார்த்த லாபத்தினை அடைவார்கள். நற்பலன்களைத் தரும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 2, 3 ஞாயிறுதோறும் சரபேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.
இந்த ஆடி மாதத்தின் துவக்கத்தில் எண்ணிய காரியங்கள் எளிதில் நிறைவேறக் காணும் நீங்கள் பிற்பாதியில் அதிக அலைச்சலுக்கு ஆளாக நேரிடும். ஜூலை மாதம் வரை இருந்து வரும் சாதகமான கிரக சஞ்சார நிலை உங்கள் வெற்றிக்குத் துணை நிற்பதால் செய்ய நினைக்கும் காரியங்களை அதற்குள்ளாக செயல்படுத்திக் கொள்வது நல்லது. உங்களது செய்கைகளில் சற்று மந்தத்தன்மையை உணர்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். வாழ்க்கைத் துணையின் விருப்பங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்பட்டு வருவீர்கள். பொருள் வரவு நிலையில் அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழல் தோன்றக்கூடும். பேசும் வார்த்தைகளில் தத்துவம் நிறைந்த கருத்துக்கள் அதிகமாக வெளிப்படும். உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதாயம் தரும் வகையில் இருந்து வரும். பிரயாணத்தின்போது உங்கள் உடமைகளில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம்.
வண்டி, வாகனங்கள் சார்ந்த செலவினங்கள் கூடும். உறவினர்களுக்கு மத்தியில் இருந்து வரும் மனக்கசப்பினை போக்க முயன்று வருவீர்கள். குடும்ப விவகாரங்களில் பிள்ளைகளின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ஆடம்பர செலவுகள் சற்று அதிகரிக்கக் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் கவனம் தேவை. உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். சுயதொழில் செய்வோர் ஓய்வில்லாமல் உழைக்க வேண்டியிருக்கும். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் தனலாபத்தினை அடைய சிறிது காலம் காத்திருக்க நேரலாம். நெடுநாளைய விருப்பம் ஒன்று நிறைவேறும் நேரம் இது. சரிசம பலன்களைத் தரும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 4, 5 பௌர்ணமி நாளில் அம்பிகையை சிறப்பு ஆராதனை செய்து வழிபடுவது நல்லது.
ராசிநாதன் சனி பகவானோடு செவ்வாயின் இணைவு மனோ தைரியத்தை அதிகரிக்கச் செய்யும். கேதுவின் இணைவினால் மனதின் மூலையில் ஒருவித குழப்பம் இடம் பிடித்திருந்தாலும் செயலில் இறங்கும்போது மன உறுதியுடன் செயல்பட்டு வருவீர்கள். பிரச்னைகள் பல இருந்தாலும், தற்காலிகமாக சற்று விடுபட்டு இருப்பதைப் போன்று உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்குப் பக்கபலமாகத் துணை நின்று வருவார்கள். உடன்பிறந்தோரோடு இணைந்து செயல்படும் விவகாரங்களில் நல்ல வெற்றியினைக் காண்பீர்கள். பொருள் வரவு நிலை சீராக இருந்து வரும். நிலுவையில் இருந்து வரும் வரவேண்டிய பாக்கித்தொகைகள் வசூலாகும். பேச்சினில் வெளிப்படும் வார்த்தைகள் அடுத்தவர்களால் தவறாகப் பொருள் காணப்படலாம். தகவல் தொடர்பு சாதனங்கள் பயன் தரும் வகையில் அமையும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் உருவாகும்.
வீட்டு உபயோகம் சார்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்க கால நேரம் சாதகமாக அமையும். சிரமமமான சூழலிலும் வாழ்வியல் சுகத்திற்குக் குறைவிருக்காது. மாதத்தின் முற்பாதியில் உறவினர்களுடன் இணைந்து குலதெய்வ வழிபாடு செய்வதற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்களின் கல்வித்தரம் சிறப்பாக இருந்து வரும். வண்டி, வாகனங்களை புதிதாக வாங்கும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ஆடி மாதத்தின் பிற்பாதியில் வண்டி, வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்திருப்பது போல் தோன்றினாலும் அவர்களால் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள். ஆகஸ்டு மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உடல்நிலையில் சிறிது சிரமத்தினைக் காண நேரிடலாம். கலைத்துறையினர் தொழில்முறையில் போட்டியான சூழலைக் காண்பர். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்வர். சரிசம பலன்களைக் காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 6, 7, 8 வியாழன்தோறும் சாயிபாபா ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள்.
ராசிநாதன் குரு பகவானின் நிலை பல்வேறு சோதனைகளை தந்து கொண்டிருக்கும். ஆயினும் ஆகஸ்டு 2ம் தேதி அன்று நிகழ உள்ள குருப்பெயர்ச்சி சாதகமாக உள்ளதால் அதுவரை சற்று நிதானமாக செயல்பட்டு வாருங்கள். சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்றிக் கொள்வீர்கள். ஒவ்வொரு செயலில் இருந்தும் அனுபவப் பாடம் ஒன்றினை கற்றுக் கொண்டிருப்பதால் உங்கள் வெற்றிக்கான காலம் கனிந்து கொண்டிருக்கிறது. மனதின் ஓரத்தில் ஒரு வித விரக்தியான எண்ணம் குடி கொண்டிருந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாது கடமையைச் செய்து வருவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். பொருள் வரவு சீராக இருந்து வரும். அவசரப்பட்டு வாக்குறுதி அளித்து பின்பு சிரமப்படுவதைத் தவிர்க்க நிதானித்துப் பேசுவது நல்லது. உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணி நேரத்தினை மிச்சப்படுத்தும் வகையில் பயன் தரும்.
ஒரு சில விவகாரங்களில் இடைத்தரகர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் பெறக்கூடும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண சிரமப்பட்டு உழைக்க வேண்டியிருக்கும். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். அதே நேரத்தில் வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கை தேவை. வாழ்க்கைத்துணையோடு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய ஆடம்பரச் செலவுகள் அதிகரித்திருப்பதாக எண்ணி மனம் வருந்துவீர்கள். குடும்பப் பெரியவர் ஒருவருடனான சந்திப்பு மனதிற்கு நிம்மதியைத் தரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். கலைத்துறையினர் போட்டியான சூழலை சமாளிக்க வேண்டியிருக்கும். துவக்கத்தில் சற்று சிரமத்தினைக் கண்டாலும் இறுதியில் நன்மை தரும் மாதமே.
சந்திராஷ்டம நாட்கள் : ஆகஸ்டு 9, 10 குருப்பெயர்ச்சி நாளன்று அருகிலுள்ள ஆலயத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள்.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 4-ல் புதனும் சுக்கிரனும் 5-ல் குருவும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. முக்கியமானவர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். பயணத்தால் நலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு லாபம் அதிகமாகும். நல்ல காரியங்களில் ஈடுபாடு கூடும். தெய்வப் பணிகள் ஈடேறும். தர்மப் பணிகளில் நாட்டம் உண்டாகும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். 8-ல் சனியும் செவ்வாயும் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. உடன்பிறந்தவர்களாலும் வேலையாட்களாலும் சங்கடம் ஏற்படும். இயந்திரப் பணியாளர்கள், விவசாயிகள் ஆகியோர் விழிப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 20.
திசைகள்: கிழக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: சுப்பிரமணியர், ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 16-ம் தேதி முதல் சூரியன் 3-ம் இடம் மாறுவது சிறப்பாகும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். ஆன்மிகவாதிகள், அறப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாதர்களது நோக்கம் நிறைவேறும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரப் பெறுவார்கள். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 7-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது அவசியம். நண்பர்கள், கூட்டாளிகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15, 20.
திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இள நீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்வதும் கேட்பதும் நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் ராகுவும் 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பு. 16-ம் தேதி முதல் சூரியன் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பெண்களாலும் மனைவியாலும் அனுகூலம் உண்டாகும். பெண் குழந்தைகளால் நலம் பெறுவீர்கள். மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். விவசாயிகளுக்கு வருவாய் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். விருந்து, விழாக்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும்.
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் குருவும் உலவுவது நல்லது. 16-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு மாறுவது சிறப்பாகாது. நண்பர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் நலம் உண்டாகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். பேச்சில் திறமை வெளிப்படும். மக்களால் அளவோடு அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். சுப காரியங்கள் நிகழும். எதிர்ப்புகளின் கரம் வலுக்குறையும். வரவேண்டிய பாக்கி வசூலாகும். தொந்தரவு குறையும். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு உண்டாகும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியனும் 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. 16-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. உடன்பிறந்தவர்கள் உதவி புரிவார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நிகழும். நிர்வாகத் திறமை கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அலைச்சல் அதிகரிக்கவே செய்யும். அதனால் உடல் அசதியும் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். பிள்ளைகள் நலம் சீராகவே இருந்துவரும். வாழ்க்கைத் துணைவரால் அளவோடு நலம் உண்டாகும். 16-ம் தேதி முதல் உடல் நலனில் கவனம் தேவை. தந்தையாலும் அரசாங்கத்தாராலும் சில இடர்ப்பாடுகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15, 20.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இள நீலம், வெண்மை.
எண்கள்: 1, 6.
பரிகாரம்: சனி, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. 16-ம் தேதி முதல் சூரிய வழிபாடு செய்வது அவசியம்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் 10-ல் சூரியனும் 11-ல் புதனும் சுக்கிரனும் உலவுவதால் செல்வாக்கும் மதிப்பும் உயரும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டு, விநோதங்கள், வழக்கு, வியாஜ்ஜியங்களில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள், கலைஞர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்புக் கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். கடல் வாணிபம் லாபம் தரும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். சகோதர, சகோதரிகளால் நலம் உண்டாகும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்து உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
உங்கள் ராசிக்கு 10-ல் புதனும் 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வியாபாரத்தில் அபிவிருத்தி காண வாய்ப்பு உண்டாகும். பொருளாதார நிலை உயரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு ஆதாயம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். 16-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள் நிலை உயரப் பெறுவார்கள். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். திரவப் பொருட்களால் அதிக ஆதாயம் கிடைக்கும். 2-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15, 20.
திசைகள்: வட கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. சரஸ்வதி தேவியை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் சுப செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக்கொள்வீர்கள். இடமாற்றம் உண்டாகும். கலைத் துறையினருக்கு அனுகூலமான போக்கு நிலவிவரும். மாதர்களது நிலை உயரும். பயணத்தால் நலம் உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் இருப்பதால் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். அலைச்சலால் உடல் அசதி ஏற்படும். தலை சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. வாரப் பின்பகுதியில் பண வரவு சற்றுக் கூடும். குடும்ப நலம் சீராகவே இருந்துவரும். கணவன் மனைவி உறவு நிலை சீர்பெறும். 16-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடம் மாறுவதால் தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 15, 20.
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, இள நீலம், வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்:
சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 8-ல் புதனும் சுக்கிரனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் சில இப்போது நிறைவேறும். பொருளாதார நிலை உயரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் உதவுவார்கள். நற்காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும். கலைத் துறை ஊக்கம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். 12-ல் செவ்வாயும் சனியும் இருப்பதால் வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் செலவுகள் அதிகரிக்கும். தொழிலாளர்களும் விவசாயிகளும் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். இயந்திரப் பணியாளர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் வாரப் பின்பகுதியில் நல்ல திருப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 20.
திசைகள்: வட மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பு. எடுத்த காரியத்தில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். போட்டிப் பந்தயங்களிலும், வழக்கு வியாஜ்ஜியங்களிலும் வெற்றி காண சந்தர்ப்பம் கூடிவரும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் சுபிட்சம் கூடும். நண்பர்கள் நலம் புரிவார்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணைவராலும் மக்களாலும் சிறுசிறு இடர்ப்பாடுகள் உண்டாகும். பிற மொழி, மதக்காரர்களிடம் விழிப்புடன் பழகுவது நல்லது. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 16-ம் தேதி முதல் சூரியன் 7-ம் இடம் மாறுவதால் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15, 20.
திசைகள்: மேற்கு, தெற்கு.
நிறங்கள்: கருநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 8, 9.
பரிகாரம்: குரு, ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் புதனும் 7-ல் குருவும் 10-ல் செவ்வாய், சனி ஆகியோரும் உலவுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்களும் உறவினர்களும் நலம் புரிவார்கள். பொருளாதார நிலை உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெற வாய்ப்பு உண்டாகும். சுக்கிர பலம் குறைந்திருப்பதால் சுகம் குறையும். பெற்றோரால் சில இடர்பாடுகள் ஏற்படும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 15.
திசைகள்: வடக்கு, வட கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 5, 8, 9.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. 16-ம் தேதி முதல் சூரியன் 5-ம் இடம் மாறுவது குறை. வார முன்பகுதி சாதாரணமாகவே காணப்படும். மனதில் ஏதேனும் சலனம் ஏற்படும். காரியத்தில் தடைகளும் குறுக்கீடுகளும் உண்டாகும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. மக்களால் மன அமைதி குறையும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். தொழிலில் அதிக கவனம் செலுத்திவருவது நல்லது. வாரப் பின்பகுதி முன்பகுதியைவிடச் சிறப்பாக அமையும். முக்கியமான ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். பெண்களாலும் மனைவியாலும் நலம் உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். போக்குவரத்து இனங்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 15, 20.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இள நீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: குரு, சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் சுக்கிரனும் 4-ல் புதனும் 5-ல்குருவும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்களும் உறவினர்களும் பக்கபலமாக இருப்பார்கள். புதிய சொத்துக்கள் சேரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பணவரவு திருப்தி தரும். அதிர்ஷ்ட இனங்கள் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும்.
மாணவர்கள் வெற்றி நடைபோடுவார்கள். மாதர்களது எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். முக்கியப் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசு மூலம் எதிர்பார்த்த காரியம் இப்போது கைகூடும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். 8-ம் தேதி முதல் கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு, பொன்நிறம்.
எண்கள்: 1, 3, 5, 6, 7.
பரிகாரம்: செவ்வாய், சனிக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. 8-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடத்திற்கு மாறுவதும் சிறப்பாகும். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். நல்லவர்களின் தொடர்பு நலம் கூட்டும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.
வியாபாரிகள் அகலக்கால் வைக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறை தேவை. நண்பர்கள், உறவினர்களால் தொல்லைகள் அதிகரிக்கும். மக்கள் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். பக்குவமாகச் சமாளிக்கவும். தொலைதூரத் தொடர்புகள் உற்சாகம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: திருமாலை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 2-ல் புதனும் 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடம் மாறுவதும் நல்லது. பணவரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
விருந்து, உபசாரங்களில் ஈடுபாடு கூடும். பேச்சில் திறமை வெளிப்படும். தோற்றப் பொலிவு உண்டாகும். பிற மொழி, மத, இனங்களைச் சேர்ந்தவர்களது சந்திப்பும் அனுகூலமும் ஏற்படும். சிறு பயணம் ஒன்றை மேற்கொள்ள வேண்டிவரும். எதிர்ப்பு அடங்கும். வழக்குகள், போட்டிகளில் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: வடக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும் பெற்றோர்களையும் வணங்கி நல்வாழ்த்துகளைப் பெறவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. 8-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். திரவப் பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண நடமாட்டம் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
கலைஞர்களது நிலை உயரும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதியஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆன்மிகவாதிகள் நிலை உயரப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்களாலும் மக்களாலும் நலம் உண்டாகும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகிகள், வியாபாரிகள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். தந்தை நலனில் கவனம் தேவைப்படும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யவும். துர்க்கையை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன் ஆகியோர் உலவுவது சிறப்பாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும்.
தந்தையால் அனுகூலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். நிலபுலங்களால் லாபம் உண்டு. கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறையினர் விழிப்புடன் இருப்பது நல்லது. வியாபாரிகள் நஷ்டப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும். நண்பர்கள், உறவினர்களால் செலவுகளும் சங்கடங்களும் ஏற்படும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 6
பரிகாரம்: மகாவிஷ்ணு, துர்க்கையை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் 10-ல் சூரியனும் 11-ல் புதனும் உலவுவதால் பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கடல் வாணிபம் செய்பவர்களுக்கு வருவாய் அதிகரிக்கும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். நிர்வாகத்துறையினருக்கு வரவேற்பு கூடும். வியாபாரம் பெருகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். தந்தையால் நலம் உண்டாகும். ஆன்மிகப்பணிகளில் நாட்டம் கூடும். செலவுகள் சற்று அதிகரிக்கும். சிக்கன நடவடிக்கை தேவை. 8-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 10, 11.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பச்சை, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: குரு, ராகு ஆகியோருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரனும், 10-ல் புதனும் 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிறருக்குத் தாராளமாக உதவி செய்வீர்கள். சுபகாரியங்கள் நிகழும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும்.
பெரியவர்கள், தனவந்தர்கள் ஆசிகளும் ஆதரவும் பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். கடல் வாணிபம் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொழில் புரிபவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பயணத்தால் நன்மை உண்டு.
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவதால் தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். போக்குவரத்து இனங்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி ஆகியவை லாபம் தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியம் நிறைவேறும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவதால் கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும்.
மாதர்களது நிலை உயரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். ஜன்ம ராசியில் செவ்வாயும் சனியும் இருப்பதாலும், 4-ல் கேது உலவுவதாலும், சூரியன் 8-ல் இருப்பதாலும் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். பெற்றோர் நலனிலும் அக்கறை தேவைப்படும். அரசுப் பணிகளில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. அவசரம் கூடாது.
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். செய் தொழில் விருத்தி அடையும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். மாணவர்களது திறமை பளிச்சிடும். ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மேடைப் பேச்சாளர்கள் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள்.
உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். தகவல் தொடர்பு ஆக்கம் தரும். பொருளாதாரத் துறையினர் வளர்ச்சி காண்பார்கள். சுப காரியங்கள் நிகழும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவது நல்லது. கலைஞர்களுக்கு மந்த நிலை விலகும். மாதர்களுக்கு அனுகூலமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். பெரியவர்களது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 7.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல்செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்ப்புகள் விலகும். வழக்குகளிலும் பந்தயங்களிலும் வெற்றி காணச் சந்தர்ப்பம் உருவாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
இன் ஜினீயர்களது எண்ணம் நிறைவேறும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். சகிப்புத்தன்மை தேவை. கூட்டாளிகளால் பிரச்சினைகள் சூழும். உத்தியோகஸ்தர்கள், ஆன்மிகவாதிகள், ஆசிரியர்கள், பயணத் தொழில் புரிபவர்கள் ஆகியோருக்கெல்லாம் சோதனைகள் சூழும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் புதனும் 7-ல்குருவும், 10-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். அவற்றில் வெற்றியும் கிட்டும். மக்களாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். சுபகாரியங்கள் நிகழும். வியாபாரம் பெருகும். கடல் சார்ந்த பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள்.
வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். பயணம் உண்டு. எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு உருவாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவதால் பெண்களால் தொல்லைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 7, 9.
திசைகள்: வடக்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பச்சை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 5, 8, 9
பரிகாரம்: ஸ்ரீ மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். 8-ம் தேதி முதல் சுக்கிரன் 5-ம் இடம் மாறுவதும் நல்லதே. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் நன்மையும் உண்டாகும். அயல்நாட்டுத் தொடர்புடைய வர்த்தகம் லாபம் தரும். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். கேளிக்கை, உல்லாசங்களிலும், விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். பெண்களால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். பெற்றோராலும் மக்களாலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 10, 11.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், புகைநிறம்.
எண்கள்: 4, 6
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வருவது நல்லது.
2016 ஜூலை மாத பலன்கள் | Angila Madha Rasipalan | 2016 July Madha Rasipalan
கடின உழைப்பினால் வாழ்க்கையில் முன்னேறும் மேஷ ராசியினரே உங்களுக்கு திடீரென்று வரும் கோபத்தை கட்டுப்படுத்தினால் வெற்றி நிச்சயம். இந்த மாதம் சூரியன் – புதன் – சுக்கிரன் தைரிய ஸ்தானத்திலும் – பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு – ராகுவும் – அஷ்டமஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற ராசிநாதன் செவ்வாய் – சனியும், லாபஸ்தானத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். தைரிய ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் பெறுவதால் புத்திக் கூர்மையுடன் செயல்களை செய்து எதிலும் வெற்றி பெறுவீர்கள். வசதிகள் அதிகரிக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். ஆனால் வீண் செலவுகள் உண்டாகும். மனதுக்கு பிடிக்காத இடத்திற்கு சென்று வரவேண்டி இருக்கும்.
தொழில் ஸ்தானாதிபதி சனியின் சஞ்சாரத்தால் தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் சென்று வரவேண்டி இருக்கும். வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திப்பார்கள். குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகலாம் கவனம் தேவை.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற மன வருத்தம் உண்டாகலாம் கவனம் தேவை. மருத்துவம் தொடர்பான செலவும் ஏற்படலாம். ஆயுதம், நெருப்பு ஆகியவற்றை கையாளும் போது கவனமாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு புத்தி கூர்மையுடன் செயல்பட்டு காரியங்களை வெற்றி கரமாக செய்து முடிப்பீர்கள். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.
பரிகாரம்: முருகனுக்கு அரளிப்பூ சாற்றி அர்ச்சனை செய்து வணங்கி வழிபட மனக்கவலை தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் 14 – 15 – 16
அதிர்ஷ்ட தினங்கள் 29 – 30 – 31
அஸ்வினி:
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு மனவருத்தங்கள் ஏற்படும் வகையில் சூழ்நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் முன்னேற்றத்தில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது.
பரணி:
எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். நண்பர்கள் திடீர் டென்ஷனை உண்டாக்குவார்கள். உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது
கார்த்திகை 1ம் பாதம்:
தொழில் வியாபாரம் தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு காரியங்களை செய்து எதிர்பார்த்த வெற்றியை அடைவார்கள்.
எந்த நிலையிலும் அடுத்தவர் பற்றி ரகசியங்களை வெளியே சொல்லாமல் மனதில் வைத்துக்கொள்ளும் இயல்புடைய ரிஷபராசியினரே இந்த மாதம் மாதம் தனஸ்தானத்தில் சூரியன் – புதன் – ராசிநாதன் சுக்கிரன், சுக ஸ்தானத்தில் குரு – ராகு, சப்தம ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி, தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நகர்வுகள் இருக்கிறது. தனஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசிநாதன் சுக்கிரனால் எந்த ஒரு காரியமும் வெற்றியடைவதுடன் லாபகரமாகவும் இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். செயல்திறன் மேலோங்கும். இழுபறியாக இருந்த ஒரு சில விஷயங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீடு, வாகனங்கள் வாங்கும் நிலை உருவாகும்.
தொழில் ஸ்தானத்திற்கு ராசிநாதன் சுக்கிரன் திரிகோணம் பெற்றிருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் கேது இருக்கிறார். தொழில், வியாபாரம் முன்னேற்றம் காணப்படும். விவசாயம், ரியல் எஸ்டேட் தொழில் லாபம் தரும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். பயணங்களால் லாபம் கிடைக்கும்.
குடும்பாதிபதி புதன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த ஆடை, ஆபரணம் வாங்க நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளுக்கு சென்று வருவீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
பெண்களுக்கு பணவரத்து அதிகரிக்கும். எந்த ஒரு காரியமும் லாபகரமாய் நடந்து முடியும். செயல்திறன் கூடும்.
மாணவர்களுக்கு பாடங்களை மனநிறைவுடன் படிப்பீர்கள். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி பூஜை செய்ய பணவரத்து கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் 17 – 18
அதிர்ஷ்ட தினங்கள் 2 – 3
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் உண்டாகும். பிள்ளைகளுக்காக பாடுபடுவீர்கள். அவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களை இயக்கும் நிதானம் தேவை.
ரோகிணி:
வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை. பொருள் சேர்க்கை உண்டாகும். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். வியாபார செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதனால் களைப்பு ஏற்படலாம்.
எதையும் திட்டவட்டமாக பேசி காரியங்களில் குழப்பம் இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிக்கும் ஆற்றலை உடைய மிதுன ராசியினரே இந்த மாதம் ராசியில் சூரியன் – ராசிநாதன் புதன் – சுக்கிரன், தைரிய ஸ்தானத்தில் குரு – ராகு, ரண ருண ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி, பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் சஞ்சாரம் செய்கிறார்கள். ராசியாதிபதி புதன் ராசியில் சூரியனுடன் சேர்க்கை பெற்று நிபுணத்துவ யோகம் பெற்று சஞ்சாரம் செய்வதால் எதையும் ஆராய்ந்து பார்த்த பிறகே அதை செய்ய முற்படுவீர்கள். தொட்ட காரியம் வெற்றியில் முடிந்தாலும் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். பணவரத்து கூடும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
லாபாதிபதி செவ்வாய் ராசியைப் பார்க்கிறார். தொழில், வியாபாரம் மிகவும் சிறப்பாக நடைபெறும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலை விரிவுபடுத்துவது பற்றி திட்டங்களை செயல்படுத்துவீர்கள். பயணங்கள் சாதகமான பலனை தரும். உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வேலை பற்றிய கவலை நீங்கும். நிர்வாகத்தின் ஆதரவும் இருக்கும்.
குடும்பத்தில் வாக்குவாதங்கள் உண்டாகலாம். வாழ்க்கை துணையையும் குழந்தைகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டியது இருக்கும்.
பெண்களுக்கு எடுத்த காரியத்தை செய்து முடிக்க கால தாமதம் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும்.
மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் தோன்றும். கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள்.
பரிகாரம்: சனிக்கிழமையில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்து வெங்கடாஜலபதியை வணங்க பிரச்சனைகள் தீரும். பண கஷ்டம் தீரும்.
சந்திராஷ்டம தினங்கள் 19 – 20
அதிர்ஷ்ட தினங்கள் 4 – 5
மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்:
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி எல்லோரும் உங்களது வார்த்தைக்கு மதிப்பு தருவார்கள். ஆனால் யாரிடமும் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை நீடிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். செலவு கூடும்.
திருவாதிரை:
எல்லா முயற்சிகளும், காரியங்களும் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிக்கும் திறமை உண்டாகும். மனதில் இருந்த தயக்கம், பயம் நீங்கும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்ல எடுக்கும் முயற்சிகள் சாதகமான முடியும்.
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். லாபம் அதிகரிக்கும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும் கூடுதல் பொறுப்புகளும் கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும்.
கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களையும் கருத்துக்களை மாற்றிக் கொள்ளும் குணமுடைய கடக ராசியினரே நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். இந்த மாதம் தன ஸ்தானத்தில் குரு – ராகு, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி, அஷ்டம ஸ்தானத்தில் கேது, அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன் – புதன் – சுக்கிரன் என கிரகங்களின் அமைப்பு இருக்கிறது. சூரியனும், புதனும் இணைந்து புத ஆதித்ய யோகத்தை தருவதால் தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள். பிரச்சனைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேல் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.
பெண்களுக்கு நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதையும் புத்திசாதுரியத்தை பயன்படுத்தி சமாளிப்பீர்கள்.
மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர்களின் ஆதரவுடன் படித்து தேர்வில் வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: சரஸ்வதி தேவியை பூஜித்து வர காரியங்களில் வெற்றி உண்டாகும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
சந்திராஷ்டம தினங்கள் 21 – 22
அதிர்ஷ்ட தினங்கள் 6 – 7
புனர் பூசம் 4ம் பாதம்:
குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். சுப காரியங்கள் நடக்கலாம். சகோதரர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சந்தோஷமாக காணப்படுவார்கள். குழந்தைகள் மூலம் பெருமை கிடைக்கும். எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும்.
பூசம்:
எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரியங்களில் தடை தாமதம் உண்டாகும். எதிலும் தலையிடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் வலிய வந்து உங்களையும் இழுப்பார்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
ஆயில்யம்:
தொழில் வியாபாரம் மந்தமாக காணப்படும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், வேலை பளுவும் ஏற்படலாம்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)
கம்பீரமான தோற்றத்தை உடைய சிம்ம ராசியினரே நீங்கள் சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் பெற்று இருப்பீர்கள். இந்த மாதம் ராசியில் குரு – ராகு, சுக ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி, சப்தம ஸ்தானத்தில் கேது, லாப ஸ்தானத்தில் சூரியன் – புதன் – சுக்கிரன் என கிரகங்களின் அமைப்பு இருக்கிறது. ராசியாதிபதி சூரியன் ராசிக்கு 11ல் புதனுடன் சேர்ந்து நிபுணத்துவ யோகத்தை தருவதால் மனதில் தெளிவு உண்டாகும். ஆக்க பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும்.
தொழில் ஸ்தானாதிபதி சுக்கிரன் லாபஸ்தானத்தில் இருக்கிறார். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்காலம் பற்றிய திட்டங்களை வகுப்பார்கள். பணவரத்தும் இருக்கும்.
குடும்பாதிபதி புதன் லாபஸ்தானத்தில் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் இருப்பவர்களிடம் தன்மையாக பேசி பழகுவது நல்லது. தகப்பனாருடன் வீண் தகராறு ஏற்படலாம். கவனம் தேவை. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் பேசி செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். குழந்தைகளுடன் நிதானமாக பேசி அவர்களுக்கு எதையும் புரிய வைப்பது நல்லது. அவர்களது முன்னேற்றத்துக்காக பாடுபடுவீர்கள்.
பெண்களுக்கு மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பயணங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியை பற்றிய பயம் நீங்கும். குழப்பம் இல்லாத தெளிவான மனதுடன் பாடங்களை படித்து வெற்றி பெறுவீர்கள்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவனுக்கு வில்வ அர்ச்சனை செய்து வணங்க மனதில் தைரியம் பிறக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் 23 – 24 – 25
அதிர்ஷ்ட தினங்கள் 8 – 9 – 10
மகம்:
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். பிள்ளைகளுக்காக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்திற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மற்றவர்களின் பேச்சை கேட்டு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பண தேவை உண்டாகும்.
பூரம்:
பொருள்வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மற்றவர் களால் கைவிடப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் அனுகூலமாக நடந்து முடியும்.
உத்திரம் 1ம் பாதம்:
தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் சாதகமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் உண்டாகலாம்.
கலகலப்பாக பேசி பழகாமல் ஒதுங்கி இருப்பதை தவிர்த்து அனைவரிடமும் இயல்பாக பேசி வருவது கன்னி ராசியினருக்கு வெற்றிக்கு வழிவகுக்கும். இந்த மாதம் தைரிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி, ரண ருண ஸ்தானத்தில் கேது, தொழில் ஸ்தானத்தில் சூரியன் – ராசிநாதன் புதன் – சுக்கிரன், அயன சயன போக ஸ்தானத்தில் குரு – ராகு என கிரகங்கள் வலம் வருகிறார்கள். ராசியாதிபதி புதன் ராசிக்கு 10ல் சூரியனுடன் சேர்க்கை பெற்று சஞ்சாரம் செய்வது மற்றவர்களின் ஆதரவு கிடைக்க செய்யும். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். செயல்திறன் அதிகரிக்கும். ஆனால் பயணங்களின் போது உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் புதன் ஆட்சியாக இருக்கிறார். உடன் பாக்கியாதிபதி சுக்கிரன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதில் இருந்த தாமதம் நீங்கும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்லியபடி நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு நடப்பது நன்மை தரும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வார்கள். அது கிடைப்பது தாமதமாகலாம்.
குடும்பத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை துணை உங்களுக்கு பல விதத்திலும் உதவிகள் செய்வார். உறவினர் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அனுபவப் பூர்வமான அறிவுத் திறனை உபயோகித்து எதிலும் வெற்றி காண்பீர்கள்.
பெண்களுக்கு உங்களது செயல்களுக்கு மற்றவர்களின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மாணவர்களுக்கு பெற்றோர், ஆசிரியர் கூறியபடி செயல்படுவது கல்வியில் வெற்றி பெற உதவும். மனோ தைரியம் கூடும்.
பரிகாரம்: நரசிம்மரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். எதிலும் வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் 26 – 27
அதிர்ஷ்ட தினங்கள் 11 – 12
உத்திரம் 2, 3, 4 பாதம்:
குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். திருமணம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்
அஸ்தம்:
எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பணவரத்து வந்து சேரும். தோழிகள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரித்தாலும் கைக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சித்திரை 1, 2, பாதம்:
எந்த ஒருவேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. வீடு, வாகனம் மூலம் செலவுகள் ஏற்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். குரு சஞ்சாரத்தால் புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
எதையும் எதிர்த்து நின்று சமாளிக்கும் திறமை உடைய துலாம் ராசியினரே உங்கள் மனம் குழப்பம் இன்றி தெளிவாக இருக்கும். இந்த மாதம் தன ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது, பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் – புதன் – ராசிநாதன் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் குரு – ராகு என கிரகங்களின் இருப்பு இருக்கிறார்கள். ராசிநாதன் சுக்கிரன் பாக்கியஸ்தானத்தில் சூரியனுடன் சேர்க்கை பெற்று இருப்பது நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காரியம் சாதகமான பலன் தரும். திட்டமிட்டு செய்யும் பயணங்கள் வெற்றி பெறும். செலவு செய்வது பற்றி யோசனை செய்து தேவையென்றால் மட்டுமே செய்வீர்கள்.
தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பங்குதாரர்களுடன் ஆலோசனை செய்து வியாபாரத்தை மேற்கொள்வது கூடுதல் லாபம் கிடைக்க வழிசெய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து முக்கிய முடிவுகள் எடுப்பது நன்மை தருவதாக இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வது அமைதியை தரும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகளால் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
பெண்களுக்கு மற்றவர்கள் உதவியுடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற நண்பர்களின் உதவி கிடைக்கும். வீண் செலவை குறைப்பது நல்லது.
பரிகாரம்: வைஷ்ணவி தேவியை வழி பட்டு வர நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து கூடும்.
சந்திராஷ்டம தினங்கள் 1 – 28 – 29
அதிர்ஷ்ட தினங்கள் 13 – 14
சித்திரை 3, 4 பாதம்:
தொழில் வியாபாரத்தில் புத்திசாதூரியத்தால் முன்னேற்றம் காண்பீர்கள். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்பந்தமாக இடமாற்றம் அல்லது பணிமாற்றம் இருக்கலாம். உழைப்பு அதிகரிக்கும்.
சுவாதி:
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் குறையும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 1, 2, 3ம் பாதம்:
எந்த ஒரு வேலையை செய்யும் போதும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. செலவு அதிகரிக்கும். எந்த காரியத்தை செய்தாலும் தடை தாமதம் ஏற்படலாம். பணவரத்து குறையும். உடல் சோர்வு ஏற்படும்.
விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)
அறிவும், ஆற்றலும் ஒருங்கே பெற்ற விருச்சிக ராசியினரே நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் வெற்றி நிச்சயம். இந்த மாதம் ராசியில் வக்ர நிவர்த்தி பெற்ற ராசிநாதன் செவ்வாய் – சனி, சுக ஸ்தானத்தில் கேது, அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் – புதன் – சுக்கிரன், தொழில் ஸ்தானத்தில் குரு – ராகு என கிரகங்களின் சுழற்சி இருக்கிறது. ராசியாதிபதி செவ்வாய் வக்ர நிவர்த்தி பெற்று ராசிக்கு மாறியிருக்கிறார். புத்தி கூர்மையுடன் எதையும் செய்வீர்கள். எதிர்காலம் தொடர்பான திட்டங்கள் மனதில் தோன்றும். எதையும் முன்னேற்பாட்டுடன் செய்வீர்கள். விவேகம் உண்டாகும்.
தொழில் ஸ்தானத்தில் தன பஞ்சமாதிபதி குருவும் ராகுவும் இருக்கிறார்கள். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடந்து முடிய திறமையாக செயல்படுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் அவசரப்படாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நற்பலனை பெறுவார்கள்.
குடும்பத்தில் தாய்வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உயர்ந்த ஆடை ஆபரணங்கள் சேரும். நல்லது கெட்டது அறிந்து செயல்பட்டு நன்மை கிடைக்க பெறுவீர்கள். பணவசதி கூடும். குழந்தைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அவர்களிடம் அன்பு அதிகரிக்கும்.
பெண்களுக்கு எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் அதில் இருக்கும் நல்லது கெட்டதை ஆராய்ந்து பார்த்த பின் அதில் ஈடுபடுவது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
மாணவர்களுக்கு எதையும் அவசரமாக செய்யாமல் யோசித்து செயல்படுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை குறையும்.
பரிகாரம்: காசி விசாலாட்சியை வழிபட எதிர்ப்புகள் அகலும். காரிய தடை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள் 2 – 3 – 4 – 30 – 31
அதிர்ஷ்ட தினங்கள் 15 – 16 – 17
விசாகம் 4ம் பாதம்:
வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். நண்பர்கள் உறவினர்களுடன் மனவருத்தம் உண்டாகலாம். பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் உண்டாகும். வேலை பளு கூடும்.
அனுஷம்:
குடும்பத்தில் அடுத்தவர்களால் ஏதேனும் குழப்பம் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.
கேட்டை:
உறவினர்களிடம் பேசும் போது கவனமாக பேசுவது நல்லது. பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். பெரியோர் சொல்படி நடப்பது வெற்றிக்கு உதவும். சுக்கிரன் சஞ்சாரம் மூலம் பணவரத்து அதிகரிக்கும். கடன் பிரச்சனை தீரும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)
அடக்கமான சுபாவம் உடைய தனுசு ராசியினரே நீங்கள் தன்மையாக எல்லோரிடமும் பழக கூடியவர்கள். இந்த மாதம் தைரிய ஸ்தானத்தில் கேது, சப்தம ஸ்தானத்தில் சூரியன் – புதன் – சுக்கிரன், பாக்கிய ஸ்தானத்தில் ராசிநாதன் குரு – ராகு, அயன சயன போக ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனி என கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது. ராசிக்கு 12ல் செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் செலவு கூடும். வாகனங்களால் செலவு உண்டாகும். மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். ராசிக்கு 7ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் நெருக்கடியான சந்தர்ப்பத்தில் உதவிகள் கிடைப்பது கடினமாக இருக்கும். எந்த காரியங்களில் ஈடுபட்டாலும் மனத் தடுமாற்றம் இல்லாமல் இருப்பது நல்லது.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். வீண் அலைச்சல் எதிர்பாராத செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.
குடும்பத்தில் ஏதாவது ஒரு விஷயம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்படும். கணவன், மனைவி அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்கள் உறவினர்களுடன் மனஸ்தாபம் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் எதையும் செய்வது நல்லது. தேவையான உதவிகள் கிடைப்பது தாமதப்படும். வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மாணவர்களுக்கு கவன தடுமாற்றம் இல்லாமல் பாடங்களை படிப்பது நன்மை தரும். சக மாணவர்களிடம் எச்சரிக்கையாக பழகுவது நல்லது.
பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவது மன அமைதியை தருவதுடன் எல்லா நன்மைகளையும் தரும்.
சந்திராஷ்டம தினங்கள் 5 – 6
அதிர்ஷ்ட தினங்கள் 18 – 19
மூலம்:
தகராறு, வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கவுரவம் அதிகரிக்கும். மறைமுக நோய் ஏற்படலாம் கவனம் தேவை.
பூராடம்:
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். பண பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு குறையும். முயற்சிகள் காலதாமதமாக பலன் கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள்.
உத்திராடம் 1ம் பாதம்:
குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளிகுறையும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும்.
எந்த ஒரு வேலையையும் நுணுக்கமாக செய்து மற்றவர்களின் பாராட்டை பெறும் மகர ராசியினரே இந்த மாதம் தன ஸ்தானத்தில் கேது, ரண ருண ஸ்தானத்தில் சூரியன் – புதன் – சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் குரு – ராகு, லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – ராசிநாதன் சனி என கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது. ராசிக்கு பதினொன்றில் ராசிநாதன் சனி செவ்வாயுடன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் பல்வேறு நன்மைகள் உண்டாகும். கடினமான பணிகளையும் செய்து முடிக்கும் துணிச்சல் ஏற்படும். காரிய வெற்றியால் மனதில் சந்தோஷம் உண்டாகும். ஆறாமிடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்வதால் இருக்கும் இடத்தை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடும்.
தொழில் வியாபாரம் வேகம் பிடிக்கும். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் பற்றி மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகத்தில் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். அலுவலக வேலையாக வெளியூர் செல்ல நேரலாம்.
கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் குறையும். குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். பிள்ளைகளின் மீது கவனம் தேவை. வாகனங்களால் செலவு இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல் நிலையில் கவனம் தேவை.
பெண்களுக்கு மனதில் மகிழ்ச்சி உண்டாகும்படியான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம்.
மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பது மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கும். தேர்வில் அதிக மதிப்பெண் குறிக்கோளுடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம்: சனி பகவானை தீபம் ஏற்றி வணங்கி வழிபட உடல் ஆரோக்யம் பெறும். கஷ்டங்கள் குறையும்.
சந்திராஷ்டம தினங்கள் 7 – 8
அதிர்ஷ்ட தினங்கள் 20 – 21
உத்திராடம் 2, 3, 4 பாதம்:
எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும்.
திருவோணம்:
தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள்.
அவிட்டம் 1,2 பாதம்:
குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்
எடுத்த காரியத்தை எத்தனை குறுக்கீடுகள் வந்தாலும் அதை சமாளித்து செய்து முடிக்கும் திறன் உடைய கும்பராசியினரே இந்த மாதம் ராசியில் கேது, பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் – புதன் – சுக்கிரன், சப்தம ஸ்தானத்தில் குரு – ராகு, தொழில் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – ராசிநாதன் சனி என கிரகங்கள் அருளாட்சி செய்கிறார்கள். கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும் வாய்ப்பு உண்டு. சூரியன் சஞ்சாரம் பணவரத்தை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.
குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும் உதவி தாமதமாக கிடைக்கும். சகோதரர்களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.
பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.
மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது. பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள் 9 – 10 – 11
அதிர்ஷ்ட தினங்கள் 22 – 23
அவிட்டம் 3, 4 பாதம்:
புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும். செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம்.
சதயம்:
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
பூரட்டாதி 1, 2, 3 பாதம்:
குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும்.
மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
எதை செய்தாலும் தன்னம்பிக்கையை கொண்டு சொந்த முயற்சியிலேயே செய்து வெற்றி பெறும் மீன ராசியினரே இந்த மாதம் சூரியன் – புதன் – சுக்கிரன் சுக ஸ்தானத்திலும் – ரண ருண ஸ்தானத்தில் ராசிநாதன் குரு – ராகுவும் – பாக்கிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி பெற்ற செவ்வாய் – சனியும், விரைய ஸ்தானத்தில் கேதுவும் சஞ்சாரம் செய்கிறார்கள். தனாதிபதி செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார். பணவரத்து அதிகரிக்கும். அறிவு திறமை வெளிப்படும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு உண்டாகும். அடுத்தவர்களின் குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடலாம் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரம் ராசிக்கு நான்கில் இருப்பதால் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் சாமர்த்தியமாக பேசுவதன் மூலம் வியாபாரம் வளர்ச்சி பெறும். அடுத்தவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்கும் போது கவனம் தேவை. அவற்றை ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கலாம்.
குடும்பத்தில் வாக்குவாதத்தையும், கோபத்தையும் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் அனுசரித்து செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. விருந்தினர்கள் வந்து செல்வார்கள்.
பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்க கூடுதல் நேரம் உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதுடன் கல்வியிலும் கூடுதல் கவனம் நன்மை தரும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது வெற்றிக்கு உதவும். கடன் பிரச்சனை குறையும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.
சந்திராஷ்டம தினங்கள் 12 – 13
அதிர்ஷ்ட தினங்கள் 27 – 28
பூரட்டாதி 4ம் பாதம்:
முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள்.
உத்திரட்டாதி:
தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.
ரேவதி:
குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
இந்த வார ராசிபலன் 30-06-2016 முதல் 06-07-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும்; சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பு. அந்தஸ்தும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். உடல் நலம் சீராகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். பொருள் வரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முக வசீகரம் கூடும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளும் அரசுப்பணியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 8-ம் இடம் மாறி சனியோடு கூடுவதால் எக்காரியத்திலும் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. இயந்திரப்பணியாளர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் விழிப்புடன் செயல்படுவது அவசியம். 6-ம் தேதி முதல் புதன் 4-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: கிழக்கு, தென் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 6, 7.
பரிகாரம்: மாற்றுத் திறனாளிகளுக்கு உதவவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் செவ்வாயும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. பேச்சாற்றல் கூடும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்களின் நிலை உயரும். பொறியியல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும்.
சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல ஆற்றுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேர வழிபிறக்கும். சொத்துகள் மூலம் வருவாயும் கிடைக்கும். பக்திமார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் தெளிவு பிறக்கும். அலைச்சலும் உழைப்பும் கூடும் என்றாலும் அதற்கான பயனும் கிடைத்துவரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடம் மாறி சனியோடு கூடுவது சிறப்பாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை,பச்சை, இள நீலம்.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் சேர்க்கும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 6-ல் சனியும் உலவுவது சிறப்பு. முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். கலைத்துறையினருக்கு நற்பெயர் கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
நெருங்கிய நண்பர்கள் உதவுவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். கூட்டுத் தொழில் லாபம் தரும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் தங்கள் திறமைக்குரிய பயனைப் பெறுவார்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். எதிரிகள் விலகுவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். 6-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதால் பண வரவு கூடும்.
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். நிலபுலங்கள் சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பிள்ளைகளாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.
பொருளாதார நிலை உயரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். தெய்வப் பணிகள் நிறைவேறும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடம் மாறுவதால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். 6-ம் தேதி முதல் புதன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. 2-ல் ராகுவும், 12-ல் சூரியனும் இருப்பதால் கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 2, 6.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இள நீலம்.
எண்கள்: 3, 6, 9.
பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிப்பது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதும் சிறப்பு. துணிச்சலான காரியங்களில் ஈடுபடவும், அவற்றில் வெற்றி காணவும் சந்தர்ப்பம் கூடிவரும். எதிர்ப்புகள் விலகும். அரசு சம்பந்தமான காரியங்கள் இனிது நிறைவேறும். முக்கியமானவர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். மக்கள் நலம் சீராக இருந்துவரும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். பெண்களால் ஆடவர்களுக்கு அனுகூலம் உண்டாகும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடம் மாறுவதும் சனியோடு கூடுவதும் சிறப்பாகாது. 6-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதும் குறை ஆகும். நண்பர்கள், உறவினர்களால் சங்கடங்கள் சூழும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும் 10-ல் சூரியனும்; புதனும் உலவுவதால் தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை பளிச்சிடும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும்.
சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். திரவப்பொருட்கள் லாபம் தரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடம் மாறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். 6-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு ஆதாயம் அதிகம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்: துர்க்கை, தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் புதனும்; சுக்கிரனும், 11-ல் குருவும்; ராகுவும் உலவுவது சிறப்பு. நல்லவர்கள் உதவுவார்கள். நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கணவன்-மனைவி உறவு நிலை திருப்தி தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பொருளாதார நிலை உயரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். ஏற்றுமதி-இறக்குமதி தொழில் லாபம் தரும்.
வாரப் பின்பகுதியில் தொழில் ரீதியாக நல்ல திருப்பம் உண்டாகும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது என்றாலும் பணப் புழக்கம் அதிகரிக்கும். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. 6-ம் தேதி முதல் புதன் 10-ஆமிடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு லாபம் கூடும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 6.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், இள நீலம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவதால் எதிர்ப்புகளைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். நல்லவர்களின் நட்பு நலம் சேர்க்கும். நல்லவர் அல்லாதவர்களை இனம் கண்டு விலகுவது நல்லது. கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும்.
பண வரவு சீராக இருக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் 8-ல் சூரியனும் உலவுவதால் சில இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. 1-ம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் வீண் செலவுகள் குறையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 30, ஜூலை 2, 6.
திசைகள்: தென் மேற்கு, வடக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: ஆதித்தனை வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் குருவும் 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. மனதில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். தெய்வப் பணிகள் நிறைவேறும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். உடல் நலம் சீராக இருக்கும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும்.
கணவன்-மனைவி இடையே சிறுசிறு சச்சரவுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. 1-ம் தேதி முதல் செவ்வாய் 12-ம் இடம் மாறி, சனியோடு கூடுவது சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கனவு, தொல்லை தரும். உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். 6-ஆம் தேதி முதல் புதன் 8-ஆமிடம் மாறுவதால் வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம்.
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும்; புதனும், 10-ல் செவ்வாயும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். நிலம், மனை, வீடு போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலமும் ஆதாயமும் கிடைக்கும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும்.
அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். இயந்திரப்பணியாளர்கள், இன்ஜினீயர்கள், விவசாயிகள் ஆகியோர் தங்கள் நிலமையில் வளர்ச்சி காண்பார்கள். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடம் மாறுவது விசேஷமாகும். பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் சாதகமான திருப்பம் உண்டாகும். பூமியிலிருந்து வெளிப்படும் பொருட்கள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்:
ஜூன் 30, ஜூலை 2, 6.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: கரு நீலம், சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 5, 8, 9.
பரிகாரம்: ஸ்ரீ ரங்கநாதரை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் சனியும் சஞ்சரிப்பதால் வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் கிட்டும். பணப்புழக்கம் திருப்தி தரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் ஆகியோர் உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பு கூடும். இயந்திரப்பணிகள் ஆக்கம் தரும். 1-ம் தேதி முதல் செவ்வாய் 10-ம் இடம் மாறுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 5, 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடுவது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கை நிகழும்.
நண்பர்கள், உறவினர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். கலைஞர்கள், பெண்கள் வளர்ச்சி காண்பார்கள். 1-ம் தேதி முதல் செவ்வாய் 9-ம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது. என்றாலும் அவர் தன் சொந்த வீட்டில் உலவும் நிலை அமைவதால் தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உடன்பிறந்தவர்களின் பிரச்சினைகள் சற்று குறையும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 2, 6.
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெண்மை, இள நீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: குரு வழிபாடு நலம் தரும். வேத விற்பன்னர்கள், அந்தணர்களுக்கு உதவவும்.
இந்த வார ராசிபலன் 23-06-2016 முதல் 29-06-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும்; சுக்கிரனும், 5-ல் குருவும், 11-ல் கேதுவும் உலவுவதால் முக்கியமான காரியங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். நண்பர்களாலும் உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். வார நடுப்பகுதியில் ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
மனதில் துணிவு பிறக்கும். எதிர்ப்புகளை வெல்லும் சக்தி உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகரிக்கும். சுகம் குறையும். தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்துக்கு ஆளாகாமல் தப்பலாம். இயந்திரப் பணியாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோர் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் இருந்துவரும். கலைஞர்கள், அரசுப் பணியாளர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு, வட கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன்நிறம்.
எண்கள்:1, 3, 6, 7.
பரிகாரம்: அஷ்டமத்தில் வக்கிரமாக உள்ள சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவவும். காகத்துக்கு அன்னமிடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும்; சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். நல்ல தகவல் வந்து சேரும். செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம். உடன்பிறந்தவர்களால் ஓரிரு எண்ணங்கள் ஈடேறும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும்.
பேச்சாளர்கள், ஆசிரியர்கள், சட்ட வல்லுனர்கள் வளர்ச்சி காண்பார்கள். வியாபாரம் பெருகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற இனங்கள் ஆக்கம் தரும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடனாகக் கேட்ட பணம் கிடைக்கும். 28-ம் தேதி முதல் நிலபுலங்கள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, இளநீலம்.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்: கணபதியை வழிபடுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் ராகுவும், 6-ல்சனியும் உலவுவது சிறப்பு. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப நலனில் அக்கறை தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
அதன் பிறகு நல்ல திருப்பம் உண்டாகும். கலைத் துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். உழைப்பு வீண்போகாது. பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகள் உதவுவார்கள்.
புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவன்புடன் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 26, 27 (முற்பகல்).
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, இள நீலம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பேச்சில் திறமை வெளிப்படும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கலைத் துறையினருக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகள் பெருகும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் அனுகூலம் உண்டாகும். 2-ல் ராகு, 8-ல் கேது, 12-ல் சூரியன்; புதன் இருப்பதால் உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். விஷ பயம் உண்டாகும்.
அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை. வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். 28-ம் தேதி முதல் நிலபுலங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்).
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், வெண்மை, இளநீலம்.
எண்கள்: 3, 6.
பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும், 11-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமையால் ஓரிரு சாதனைகளை ஆற்றுவீர்கள். எதிரிகள் அடங்குவார்கள்.
வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள் சேரும். அவற்றால் ஆதாயமும் கிடைக்கும். அலைச்சல் கூடும். அதிகம் உழைக்க வேண்டிவரும்.
புதிய பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். வாரப் பின்பகுதியில் செலவுகள் அதிகமாகும். சிக்கனம் தேவை. 28-ம் தேதி முதல் சொத்துகள் சேரவும் சொத்துகள் மூலம் ஆதாயம் பெறவும் வாய்ப்பு உண்டாகும். பயணத்தால் சிறு சங்கடம் ஏற்பட்டு விலகும்.
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 6-ல் கேதுவும், 10-ல் சூரியனும்; புதனும் உலவுவது நல்லது. பொதுப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலாளர்கள், விவசாயிகளின் திறமை வீண்போகாது. ஆன்மிகவாதிகள், அறப் பணியாளர்கள், ஜோதிடர்களுக்கு வரவேற்பு கூடும்.
எதிரிகள் அடங்குவார்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். செய்துவரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும்.
வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் இடமாற்றமும் கிடைக்கும். 2-ல் செவ்வாயும், 12-ல் குரு; ராகுவும் உலவுவதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும். பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. அக்கம்பக்கத்தாரிடமும் உடன்பணிபுரிபவர்களிடமும் சுமுகமாகப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வடக்கு, வட மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 7.
பரிகாரம்:துர்க்கைக்கு நெய்தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது.
துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் புதன்; சுக்கிர, 11-ல் குரு; ராகு உலவுவது சிறப்பு. புனிதமான காரியங்களில் ஈடுபாடு கூடும் நேரமிது. சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.
பொருள்வரவு கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். கலைஞர்கள் புகழோடு பொருளும் பெறுவார்கள். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு குரு பலத்தால் விலகும்.
பெண்களின் நோக்கம் நிறைவேறும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். ஜன்ம ராசியில் செவ்வாயும் 2-ல் சனியும் இருப்பதால் குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படும் என்றாலும் சமாளிப்பீர்கள். எக்காரியத்திலும் பதற்றப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வட கிழக்கு, தென் கிழக்கு, வடக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம், இளநீலம், பச்சை.
எண்கள்: 3, 4, 5, 6.
பரிகாரம்: கணபதியை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் புதன்; சுக்கிரனும், 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. குரு 2, 4, 6-ம் இடங்களையும், கேதுவையும் பார்ப்பது சிறப்பு. குடும்ப நலம் சீராக இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும்
. கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். நல்ல தகவல் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். ராசிநாதன் செவ்வாய் 12-லும், ஜன்ம ராசியில் சனியும் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். மருத்துவச் செலவுகள் சற்று அதிகரிக்கும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை. உடன்பிறந்தவர்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். வேலையாட்களால் தொல்லைகள் ஏற்படும். அரசு விவகாரங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. தந்தையாலும், பிள்ளைகளாலும் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படும். மேலதிகாரிகளிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: தென் மேற்கு, வடக்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, வெண்சாம்பல் நிறம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: முருகனை வழிபடவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 9-ல் குருவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. பெரியவர்களும் தனவந்தர்களும் ஆசிபுரிவதுடன் உங்களுக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மனதில் துணிவு கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிலபுலங்கள் சேரும்.
சொத்துகளால் ஆதாயமும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது எண்ணம் ஈடேறும். மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர் களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். 7-ல் சூரியன், புதன், சுக்கிரன் ஆகியோர் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. கலைஞர்கள், மாதர்களுக்குப் பிரச்சினைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும். 28-ம் தேதி முதல் அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் கூடிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: வடமேற்கு, தெற்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, பொன் நிறம்.
எண்கள்: 3,7,9.
பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம் சொல்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும்; புதனும், 10-ல் செவ்வாயும், 11-ல் சனியும் உலவுவது சிறப்பு. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் உண்டாகும். நிர்வாகத் திறமை கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.
திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். இன்ஜினீயர்களது நிலை உயரும். சுரங்கப் பணியாளர்கள், ஆலைப் பணியாளர்கள், தோட்டப் பணியாளர்கள் ஆகியோருக்கெல்லாம் அனுகூலமான போக்கு தென்படும்
. முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். குரு, சுக்கிரன், ராகு, கேதுவின் நிலை சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். குடும்ப நலனில் கவனம் தேவை. பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் தொல்லைகள் சூழும். பக்குவமாகச் சமாளிக்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்), 26.
திசைகள்: மேற்கு, வடக்கு.
நிறங்கள்: கருநீலம், சிவப்பு, பச்சை.
எண்கள்:1, 5, 8, 9.
பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும். வேதம் பயின்றவர்கள், ஏழைப் பெண்களுக்கு உதவவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் சனியும் சஞ்சரிப்பதால் சுப காரியங்கள் நிகழும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார நிலையில் விசேஷமான வளர்ச்சி காண வழிபிறக்கும். கலைஞர்களுக்கு சுபிட்சம் கூடும். பெண்களுக்கு அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
பெரியவர்கள், தனவந்தர்கள் உதவுவார்கள். திறமைக்கும் உழைப்புக்கும் உரிய பயன் கிடைத்துவரும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பேச்சில் திறமை வெளிப்படும்.
முக வசீகரம் கூடும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். திரவப் பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். பக்தி மார்க்கத்திலும் ஞான மார்க்கத்திலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு கூடும். சாதுகள் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 25, 26.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 8, 9 .
பரிகாரம்: விநாயகர் அகவல் படிப்பது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும்; சுக்கிரனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. சுகமும் சந்தோஷமும் கூடும். மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். நண்பர்கள், உறவினர்கள் உதவுவார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். தாய் வழியினரால் நலம் கூடும்.
பயணம் பயன்படும். நிலபுலங்கள் சேரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். ராசிநாதன் குரு 6-ல் உலவுவது சிறப்பாகாது. சூரியன், செவ்வாய், சனி, கேதுவின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. தந்தை நலனில் அக்கறை தேவை. பிள்ளைகளின் நடத்தையில் கவனம் செலுத்துவது நல்லது. எக்காரியத்திலும் பதற்றப்படாமல் பலமுறை யோசித்து ஈடுபடுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 23, 24 (பிற்பகல்).
திசைகள்: வடக்கு, தென் கிழக்கு, தென் மேற்கு.
நிறங்கள்: பச்சை, வெண்மை, இள நீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி, அர்ச்சனை செய்வது நல்லது. பெரியவர்களிடம் பணிவு தேவை.
இந்த வார ராசிபலன் 16-06-2016 முதல் 22-06-2016 வரை | Weekly astrology forecast
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் சூரியனும் சுக்கிரனும் 5-ல்குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்களும், தொழில் கூட்டாளிகளும் உதவுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.
தகவல் தொடர்பு இனங்கள் லாபம் தரும். தந்தை நலம் சீராகும். மக்களால் முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். 8-ல் செவ்வாயும் சனியும் வக்கிரமாக இருப்பதால் எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. உடல்நலனில் கவனம் தேவை. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படவும். வாரப் பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவது நல்லது. எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தி பிறக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். பெண்களுக்கு மனமகிழ்ச்சி கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும்.
கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடத்திற்கு மாறுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 20-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறி பலம் பெறுவதால் பண நடமாட்டம் அதிகரிக்கும். பேச்சாளர்களுக்கு வரவேற்பு கூடும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைக்கும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 22 (இரவு).
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன்,வெண்மை, இளநீலம்.
எண்கள்: 6, 7.
பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும் சனியும் உலவுவது சிறப்பாகும். தோற்றப்பொலிவு கூடும். கலைஞானம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பயண விடுதிகள், பயண ஏற்பாடுகள் செய்வோர் அதிக வருவாய் பெறுவார்கள்.
19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 5-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. குரு பலமும் இல்லாததால் மக்கள் நலம் பாதிக்கும். பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும். நெருக்கமான நண்பர்கள் கூட உங்களுக்கு சங்கடத்தைத் தருவார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் அனுகூலமான சூழ்நிலை உருவாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22 (பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: கறுப்பு, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: திருமாலை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல்குருவும், 5-ல்செவ்வாயும், 11-ல் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு உதவிபுரிவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். குடும்ப நலம் சிறக்கும். மக்களால் ஓரளவு நலம் உண்டாகும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்பு கூடிவரும்.
கலைஞர்களது நிலை உயரும். 2-ல் ராகுவும், 12-ல் சூரியனும் இருப்பதால் கண் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தை விட்டுச் சிலர் பிரிந்திருக்க வேண்டிவரும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களால் தொல்லைகள் ஏற்படும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிர கதியில் 4-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகமாகும். 20-ம் தேதி முதல் புதன் 12-ம் இடத்திற்கு மாறுவதால் செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.
திசைகள்: வடகிழக்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன்நிறம், சிவப்பு, வெண்மை, இளநீலம்.
எண்கள்: 3, 5, 6, 9.
பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசிநாதன் சூரியன் 11-ல் உலவுவது சிறப்பாகும். புதன், சுக்கிரன் அனுகூலமாக உலவுவதால் முக்கியமான எண்ணங்கள் எளிதில் நிறைவேறும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்களுக்கு உதவுவார்கள். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். வியாபாரம் பெருகும். புதிய முயற்சிகள் கைகூடும். கலைஞர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். மாதர்களது நிலை உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில் வருவாய் வந்து சேரும். மாணவர்களது திறமை வெளிப்படும். தந்தையாலும், உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடத்திற்கு மாறுவதால் வெற்றி வாய்ப்புக்கள் அதிகரிக்கும். 20-ம் தேதி முதல் புதன் 11-ம் இடத்திற்கு மாறுவதும் விசேடமாகும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். வியாபார நுணுக்கம் தெரியவரும்.
உங்கள் ராசிக்கு 3-ல்செவ்வாயும் சனியும், 6-ல்கேதுவும் 10-ல் சூரியனும் உலவுவது நல்லது. புதன் 9-ல் உலவினாலும் சுக்கிரனுடன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் நலம் புரிவார். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண நடமாட்டம் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.
இயந்திரப்பணிகள் லாபம் தரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 2-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சில பிரச்சினைகள் தலைதூக்கும்.
கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. 20-ம் தேதி முதல் உங்கள் ராசிநாதன் புதன் 10-ம் இடத்திற்கு மாறுவது விசேடமாகும். செய்தொழிலில் நல்ல வளர்ச்சி காணலாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 20, 22.
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்:1, 5, 6, 7.
பரிகாரம்: குரு, ராகுவுக்கு பிரீதி செய்யவும்.
துலாம் ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 9-ல் சுக்கிரனும், 11-ல் குருவும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். கலைத்துறை ஊக்கம் தரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில்விருத்தி அடையும்.
மாணவர்கள் மேற்படிப்புக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு கூடிவரும். பொருளாதார நிலை திருப்தி தரும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிய முன்வருவார்கள். தெய்வப்பணிகள் நிறைவேறும்.
நல்ல தகவல் வாரப் பின்பகுதியில் வந்து சேரும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகைத் துறையினர் வளர்ச்சி காணுவர்.உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிக்கவும்.
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. இதர முக்கியமான கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் எதிலும் சிறப்பான நன்மைகளை இந்த நேரத்தில் எதிர்பார்க்க இயலாது. ஜாதக பலம் உள்ளவர்கள் கவலைப்படத் தேவையில்லை. பணவரவைக் காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.
மனத்தில் நிம்மதி குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிவரும். வீண் அலைச்சல் ஏற்படும். தலை, கால் பாதம் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. கலைத்துறையினருக்கு ஓரளவு வளர்ச்சி தெரியவரும். பயணம் சார்ந்த தொழில் லாபம் தரும்.
19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 12-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. மதிப்பும் அந்தஸ்தும் குறையும். 20-ம் தேதி முதல் புதன் 8-ம் இடத்திற்கு மாறுவது நல்லது.
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 6-ல் புதனும் 9-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். நல்லவர்கள் உங்களுக்கு நலம்புரிய முன்வருவார்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனம், சாது தரிசனம் ஆகியவை கிடைக்கும். வியாபாரம் பெருகும். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பொருளாதார நிலை திருப்தி தரும்.
எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் கூட ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாகும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. அடிவயிறு, முதுகு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். இயந்திரப்பணியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவதுஅவசியமாகும். 19-ம் தேதி முதல் செவ்வாய் 11-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. மக்களாலும் உடன்பிறந்தவர்களாலும் நலம் உண்டாகும். 20-ம் தேதி முதல் புதன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்:ஜூன் 16, 20, 22.
திசைகள்: வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு.
நிறங்கள்:மெரூன், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 7.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
மகர ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியனும், 11-ல் செவ்வாயும், சனியும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். எரிபொருள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறைகள் மூலம் லாபம் கிடைக்கும். இயந்திரப்பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.
தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் அனுகூலமான சூழ்நிலை நிலவிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 10-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. செய் தொழில் வளர்ச்சி பெறும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 20-ம் தேதி முதல் புதன் 6-ம் இடத்திற்கு மாறுவது நல்லது. வியாபாரிகளுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் கணிதத்துறையாளர்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 16, 22 (இரவு).
திசைகள்: மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: கருநீலம், சிவப்பு, பச்சை.
எண்கள்: 1, 5, 8, 9.
பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
செய்தொழில் விருத்தி அடையும். சொத்துகளின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். பண நடமாட்டம் திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வாரப் பின்பகுதியில் கூடிவரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, விஞ்ஞானம், மருத்துவம், ரசாயனம் தொடர்பான துறைகள் லாபம் தரும். இயந்திரப்பணியாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும்.
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும், 6-ல்ராகுவும் உலவுவது சிறப்பாகும். வாரப் பின்பகுதியில் சந்திரனும் சாதகமாக உலவுகிறார். இதனால் கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப்பொருட்களும் சேரும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மாதர்களது நோக்கம் நிறைவேறும்.
பயணத்தால் அனுகூலம் ஏற்படும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் உடல் ஆரோக்கியம் கவனிக்கப்பட வேண்டிவரும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. மக்களால் மன அமைதி குறையும். பெற்றோர் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 19-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிரமாக 8-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. எக்காரியத்திலும் வேகத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 20, 22.
திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு.
lநிறங்கள்: வெண்மை, இளநீலம், புகைநிறம்.
எண்கள்: 4, 6.
பரிகாரம்: குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி நல்லாசிகளைப் பெறவும்.
Aani Madha Rasipalan | ஆனி ராசிபலன் 15.6.2016 முதல் 15.7.2016 வரை
ராசிநாதன் செவ்வாய் ஆட்சி பலம் பெற்றிருந்தாலும் சிரமத்தினைத் தரும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் பணிகளில் ஒரு சில இடைஞ்சல்கள் உண்டாகக் காண்பீர்கள். எளிதில் முடிந்துவிடும் என்று எண்ணிய காரியங்கள் இழுபறியைத் தரக்கூடும். கூடுதல் செலவினங்களின் காரணமாக கையிருப்பு கரையும். தனாதிபதி சுக்கிரனும் ஜூலை 8ம் தேதி வரை சாதகமில்லா நிலையில் சஞ்சரிப்பதால் செலவினை ஈடுகட்டும் வகையில் வரவினத்தைக் காண இயலாது போகலாம். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு கலகங்களை சந்திக்க நேரிடும். பேசும் வார்த்தைகளில் வெளிப்படும் கடுமையான கருத்துகள் அடுத்தவர் மனதினை புண்படுத்தக்கூடும். உடன்பிறந்தோரால் ஒரு சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். முக்கியமான பணிகளுக்கு அடுத்தவர்களை நம்பியிராது தாமே நேரடியாகச் செயலில் இறங்குவது அவசியம். பிரயாணத்தின்போது சக பயணியிடம் அதிக எச்சரிக்கையுடன் நடந்துகொள்வது அவசியம். வண்டி, வாகனங்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு மாறாக அமைவதைக் கண்டு மன வருத்தம் உண்டாகும். அவர்களது நலனுக்காக கூடுதலாக செலவழித்து வருவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றி மறையும். நண்பர்களை நம்பி ஒப்படைத்த காரியங்களில் சுணக்கத்தினைக் காண்பீர்கள். பூர்வீக சொத்துகளில் புதிய பிரச்னைகள் தோன்றக்கூடும். சிரமமான கிரக நிலையிலும் தொழில்முறையில் கொண்டிருக்கும் ஈடுபாடு காரணமாக வெற்றி கண்டு வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் நற்பெயர் பெறுவார்கள். சுயதொழில் செய்வோர் ஓய்வின்றி செயல்படுவதன் மூலம் முன்னேற்றத்திற்கான பாதையைக் கண்டு கொள்வார்கள். மொத்தத்தில் இந்த மாதம் அதிகப்படியான இடையூறுகளைக் கடந்து செல்ல வேண்டிய மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 18, 19, ஜூலை 15.
பரிகாரம்: ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வணங்கி வாருங்கள்.
இந்த ஆனி மாத கிரக நிலை சிறப்பான தனலாபத்தினைத் தரும் வகையில் அமைந்துள்ளது. ராசிநாதன் சுக்கிரனின் அமர்வு நிலை தன ஸ்தானத்தில் தொடர்வதால் எதிர்கால வளர்ச்சி பற்றிய சிந்தனை சதா மனதினில் இடம்பிடித்து வரும். ஒவ்வொரு செயலையும் ஆதாயம் பெறுகின்ற வகையில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். ஆயினும் மறுபுறம் தான தர்ம சிந்தனைகளும் மனதில் இடம்பெறக் காண்பீர்கள். தன்முயற்சியின் மூலம் முன்னுக்கு வரமுடியும் என்ற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு செயல்பட்டு வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றினாலும் கலகலப்பிற்குக் குறைவிருக்காது. உடன்பிறந்தோர் சாதகமாக செயல்பட்டு வருவார்கள். முக்கியமான நேரத்தில் பெண்களால் உதவி கிடைக்கக் காண்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் துணைநிற்கும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள்.
புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு நேரம் சாதகமாக உள்ளது. ஆடம்பரம் நிறைந்த ஃபர்னிச்சர் சாமான்கள் சேரும். எந்த ஒரு விஷயத்திலும் அகலக்கால் வைக்கலாகாது என்பதை நினைவில் கொண்டு தனக்குரிய வரையறைக்குள் செலவு செய்ய முற்படுவது நல்லது. பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். உங்களுடைய சிறுபிராயத்து விருப்பம் ஒன்றினை நிறைவேற்றிக் கொள்ள கால நேரம் சாதகமாக அமையும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்கு பக்கபலமாகத் துணை நின்று வருவார். தொழில்முறையில் புதிய போட்டியினை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அதிகம் பேசுவதை விட உங்கள் திறமைகளை நிரூபித்துக் காட்டுவது நல்லது. இந்த மாதம் ஆதாயம் காணும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 20, 21.
பரிகாரம்: வெள்ளிதோறும் கோபூஜை செய்து வழிபடுங்கள்.
ஜூன் மாதம் 21ம் தேதி முதல் ராசிநாதன் புதனின் ஆட்சி பலத்தினால் இந்த மாதத்தில் உங்களது எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள கால நேரம் கூடி வரும். நினைத்த காரியங்கள் ஏதேனும் ஒரு வழியில் நடந்தேறும். மற்றவர் மத்தியில் தனிப்பட்ட முறையில் உங்கள் கௌரவமும் அந்தஸ்தும் உயரக் காண்பீர்கள். இடம், பொருள் அறிந்து பேசி சூழ்நிலையை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் திறன் உண்டாகும். குடும்பத்தில் சலசலப்புகள் தோன்றினாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. பொருள்வரவு தொடர்ந்து கொண்டிருப்பதால் சேமிப்பில் ஈடுபடுவது நல்லது. ஒரு சிலருக்கு வீடு, மனை வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். ஜூன் மாதத்தின் இறுதியில் எதிர்பாராத பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைக்கின்ற வகையில் மிகுந்த பயனைத் தரும். வீட்டிற்குத் தேவையான மரச்சாமான்கள் வாங்க முற்படுவீர்கள்.
மாணவர்களின் கல்வித்தரம் உயர்வடையும். உறவினர்களுக்கு இடையே தோன்றும் பிரச்னைக்கு மத்யஸ்தம் செய்து வைக்க வேண்டிய நிலை உண்டாகக் கூடும். தரகு, கமிஷன் போன்ற தொழிலில் உள்ளோருக்கு கால நேரம் சிறப்பாக இருந்து வரும். தொழில்முறையில் போட்டியான சூழலைச் சந்திக்க நேர்ந்தாலும் உங்களது முகராசியினைக் கொண்டு ஜெயித்து வருவீர்கள். உத்யோகஸ்தர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிவோரின் ஆதரவுடன் முன்னேற்றம் காண வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். நண்பர்கள் இக்கட்டான சூழலில் துணை நிற்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அமையும். வாழ்க்கைத்துணை உங்களின் தேவையறிந்து செயல்பட்டு வருவார். சர்க்கரை வியாதிக்காரர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் கொள்ள வேண்டியது அவசியம். இம்மாதம் நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 22, 23, 24.
பரிகாரம்: பௌர்ணமி நாளில் சிவாலய பிரதட்சிணம் செய்வது நல்லது
இந்த மாதத்தில் வீண் விரயத்தினை உண்டாக்கக் கூடிய 12ம் இடம் வலிமையுடன் இருந்தாலும், அசாத்தியமான தைரியமும், விவேகத்துடன் செயல்படும் குணமும் துணை நிற்பதால் எந்த ஒரு பிரச்னையையும் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பீர்கள். எந்த ஒரு காரியத்தையும் தன்னால் செய்ய இயலும் என்ற தன்னம்பிக்கை மனதில் உறுதியாக இடம்பிடிக்கும். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தினையும் விவேகத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள். ஆளுக்குத் தகுந்தாற்போல் வார்த்தைகளை வெளிப்படுத்தி எல்லோரிடமும் நன்மதிப்பினைப் பெற்று வருவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்தாலும் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. செலவுகள் அதிகரித்தாலும் அவற்றை சமாளிக்கின்ற வகையில் ஏதேனும் ஒரு வழியில் பொருள்வரவு தொடர்ந்து கொண்டிருக்கும். தகவல் தொடர்பு சாதனங்கள் உங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பயன் தரும்.
உடன்பிறந்தோர் உங்கள் உதவியை நாடி வரக்கூடும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்களின் கல்வித்தரம் உயர்வு காணும். உறவினர்களின் வருகை குடும்பத்தில் கலகலப்பை அதிகரிக்கச் செய்யும். தொழில்முறையில் கூடுதல் அலைச்சலை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். அலுவல் பணியில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் அடுத்தவர்களின் உதவிக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கும். வியாபாரிகள் அதிக லாபம் காண இயலாது. உடல்நிலையில் வயிறு சார்ந்த உபாதைகளை உடனுக்குடன் கவனித்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நல்வாழ்விற்காக கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். முன்பின் தெரியாதவர்களுக்கு உதவப்போய் பொருளிழப்பிற்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. செலவினங்கள் அதிகரிக்கும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 25, 26.
பரிகாரம்: வெள்ளி தோறும் தனலட்சுமி பூஜை செய்து வாருங்கள்.
இந்த ஆனி மாதத்தில் நினைத்த காரியங்கள் வெகுவிரைவாக நடைபெற்று வருவதை அனுபவ பூர்வமாக உணர்வீர்கள். தனிப்பட்ட முறையில் உங்களின் செயல்வேகமும் அதிகரித்துக் காணப்படுவதால் பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வரும். அதே நேரத்தில் அதிகப்படியான அலைச்சலின் காரணமாக உடல்நிலையில் ஒருவித சுணக்க நிலை உண்டாகலாம். அவசியம் செய்து முடித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பணிகளை இந்த மாதத்திலேயே காலதாமதம் செய்யாது நடத்தி முடித்துக் கொள்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒரு சில பிரச்னைகள் புதிதாகத் தோன்றக்கூடும். குடியிருக்கும் வீட்டினில் ஆல்ட்ரேஷன் பணிகள் செய்தல், ஃபர்னிச்சர் சாமான்கள் வாங்குதல் ஆகியவற்றால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வழியில் கலகத்தினை சந்திக்க நேரிடலாம். முக்கியமான பிரச்னைகளில் உடன்பிறந்தோருடன் இணைந்து செயல்பட வேண்டியிருக்கும்.
மாணவர்கள் கல்வி நிலையில் முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டியது அவசியம். வண்டி, வாகனங்களை இயக்கும்போது நிதானமும் அதிகப்படியான கவனமும் கட்டாயமாகிறது. பிள்ளைகளின் செயல்பாடுகள் உங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றாற்போல் அமையும். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் காண்பார்கள். ஒருசிலர் தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடலாம். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காணும். அதே நேரத்தில் அடையும் லாபத்தினை அனுபவிக்க இயலாது. மீண்டும் தொழிலிலேயே முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளுக்குத் துணை நிற்பார். அலைச்சல் அதிகமாய் இருந்தாலும் எண்ணங்கள் நிறைவேறும் மாதமிது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 27, 28.
பரிகாரம்: விஷ்ணு துர்கைக்கு எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள்.
ராசிநாதன் புதன் பகவானின் சாதகமான சஞ்சார நிலை துணை நிற்பதால் கன்னி ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் நினைத்த காரியத்தை தங்களின் உழைப்பின் மூலம் சாதித்துக் கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். ராசிநாதனோடு இணைவினைப் பெற்றிருக்கும் சூரியன் உங்கள் பணிகளில் சுறுசுறுப்பினை வெளிப்படுத்தச் செய்வார். மேற்கொண்ட பணியினை காலதாமதம் செய்யாது விரைவாகச் செய்து முடிப்பதில் கவனம் செலுத்தி வருவீர்கள். பொருள் வரவு சீராக இருந்து வரும். சிறுசேமிப்பில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவி வரும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களாகப் பயன்படும். வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். இந்த மாதத்தில் தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு. மாணவர்கள் கல்வி நிலையில் நல்லதொரு முன்னேற்றம் காண்பார்கள்.
புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி சார்ந்த கடனுதவிகள் கிட்டும். தொழில்முறையில் உங்களது செயல்திட்டங்கள் சிறப்பான வெற்றி காணும் நேரம் இது. உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் பதவி உயர்விற்கான வாய்ப்பினைத் தக்க வைத்துக்கொள்வார்கள். சுயதொழில் செய்வோர் தங்கள் எண்ணங்களை நடைமுறைப்படுத்தி வெற்றி காண வாய்ப்புகள் கூடி வரும். உணவுப் பொருட்களை வியாபாரம் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். பிள்ளைகளின் செயல்கள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் அமையும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. கேளிக்கைகள், கொண்டாட்டங்கள், விருந்து உபசாரங்கள் ஆகியவற்றில் பங்கேற்க அழைப்பு தேடி வரும். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 29, 30.
நவகிரகங்களின் சாதகமான நிலை இந்த மாதத்தில் உங்கள் காரியங்கள் எளிதாக முடிவடையத் துணைநிற்கிறது. நினைத்த காரியங்கள் நடைபெறும் நேரம் இது என்பதால் இந்த நேரத்தினை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும். தனிப்பட்ட முறையில் உங்கள் செயல் வேகம் அதிகரித்திருப்பதோடு, செய்யும் காரியங்களில் விவேகத்தினையும் வெளிப்படுத்தி நற்பெயர் காண்பீர்கள். பொருள் வரவு நிலை தொடர்வதால் சேமிப்பு உயர்வதற்கான வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவி வரும். மனதில் இருக்கும் மகிழ்ச்சி பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டு வரும். உடன்பிறந்தோர் உங்கள் பணிகளுக்கு சாதகமாகத் துணை நிற்பார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் பயன் தரும். இந்த மாதத்தில் எதிர்பாராத தொலைதூரப் பிரயாணத்திற்கான வாய்ப்பு உண்டு.
புதிய வீடு வாங்கும் முயற்சியில் உள்ளோருக்கு வங்கி மூலமான கடனுதவி கிட்டுவதில் தடையேதும் இருக்காது. வண்டி, வாகனங்கள் ஆதாயம் தரும் வகையில் அமையும். மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றம் கண்டு வருவார்கள். தகப்பனார் வழி உறவினர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உருவாகும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்னைகள் விலகும். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வருவார்கள். கடன்பிரச்னைகள் முற்றிலுமாகக் கட்டுக்குள் இருக்கும். தொழில்முறையில் சிறப்பான முன்னேற்றம் உண்டாகும் நேரம் இது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்விற்கான வாய்ப்பினை வலுப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிட்டும். சுயதொழில் செய்வோர் சிறப்பான தனலாபத்தினைக் காண்பார்கள். சிறப்பான நற்பலன்களை அனுபவிக்கும் மாதமாக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 1, 2.
பரிகாரம்: வெள்ளிதோறும் மாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம் செய்து வரவும்.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நற்பலன்களைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த ஆனி மாதத்தின் துவக்கம் சிறிது சிரமமான சூழலைத் தரக்கூடும். ஒவ்வொரு காரியத்தையும் செய்து முடிக்க சிறிது போராட்டத்தினை சந்திக்க நேரிடும். ஒரு சில காரியங்களில் உடனிருப்போராலேயே தடைகள் உண்டாகக் காண்பீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் தர்மசங்கடமான நிலைக்கு ஆளாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பொருள் வரவும் சேமிப்பு நிலையும் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும். நெடுநாளாக விருப்பம் கொண்டிருந்த ஆடம்பரப் பொருள் ஒன்றினை இந்த மாதத்தில் என்ன விலை கொடுத்தேனும் வாங்கி விடுவீர்கள். பேச்சுக்களில் கலகலப்பான வார்த்தைகள் இடம்பெறும். உடன்பிறந்தோரின் விருப்பத்தினை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பகல் நேரத்தில் சரிவர இயங்காமலும், இரவு நேரத்தில் சாதகமாகவும் செயல்பட்டு வரும்.
அவ்வப்போது சிறிது தூரப் பிரயாணங்களைச் செய்ய வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வி நிலையில் தங்கள் எழுத்துத் திறனின் மூலம் நல்ல முன்னேற்றம் கண்டு வருவார்கள். உறவினர்களின் சந்திப்பின் மூலம் மனமகிழ்ச்சி காண்பீர்கள். பிள்ளைகள் உங்கள் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு செயல்பட்டு வருவார்கள். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் உடல்நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கடன் கொடுக்கல் வாங்கலை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையின் பெயரில் புதிய சொத்துகள் வாங்குவதற்கு கால நேரம் சாதகமாக அமையும். குடும்பப் பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மிகுந்த மதிப்பளித்து செயல்பட்டு வருவீர்கள். தொழில்முறையில் மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவும். உத்யோகஸ்தர்கள் உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். அடுத்தவர்களுடன் எச்சரிக்கையுடன் பழக வேண்டிய மாதம் இது.
தன்னம்பிக்கையும், சுயமுயற்சியும் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் எந்த ஒரு செயலையும் செய்து முடிக்க சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். ஓரிடத்தில் செய்யும் பணிக்கு மற்றோர் இடத்தில் பலன் கிட்டும். ஆகவே பலனை உடனடியாக எதிர்பாராது தொடர்ந்து கடமையச் சரிவர செய்து வாருங்கள். ராசிநாதன் குரு பகவானோடு இணைவினைப் பெற்றிருக்கும் ராகுவினால் தைரியமும், மன உறுதியும் அதிகரிக்கக் காண்பீர்கள். அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தினையும் மிகுந்த தைரியத்துடன் செய்து முடிப்பீர்கள். புதிய சொத்துகளை வாங்க எண்ணும் வகையில் பொருள் வரவு நிலை உயரத் துவங்கும். புதிய வீடு, வாகனம் வாங்க முயற்சிப்போருக்கு வங்கி ரீதியாக கடனுதவி கிடைப்பதில் தடையேதும் இராது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவி வரும். பேசும் வார்த்தைகளில் நகைச்சுவை உணர்வு அதிகமாக வெளிப்படும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும்.
ஏ.சி., ஃப்ரிட்ஜ் போன்ற குளிர்சாதனப் பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டு. உடன்பிறந்தோரால் ஒரு சில உபத்திரவத்தினை சந்திக்க நேரிடும். தகவல் தொடர்பு சாதனங்கள் சமயத்தில் செயலிழந்து ஒரு சில இழப்புகளைத் தோற்றுவிக்கலாம். முன்பின் தெரியாத நபர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பது கூடாது. வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகிய இனங்களில் ஆதாயம் காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். உஷ்ண உபாதையால் உடல்நிலையில் பிரச்னைகள் தோன்றலாம். தொழில்முறையில் ஒரு சில இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும். உத்யோகஸ்தர்கள் கீழ்நிலைப் பணியாளர்களிடம் அளவோடு பழகுவது நல்லது. அலைச்சலைக் கண்டாலும் வெற்றி காணும் மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 5, 6, 7.
பரிகாரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை மானசீகமாக வணங்கி வாருங்கள்.
இந்த ஆனி மாதத்தின் துவக்கத்தில் எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானத்துடன் முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். ஜூலை 8ம் தேதிக்குப் பிறகு உங்களது எண்ணங்கள் முழுமையான வெற்றியினைக் காணும் என்பதில் சந்தேகமில்லை. அதுவரை தேவையற்ற விரயத்தினைத் தவிர்க்க அணுகுமுறையில் பொறுமையை அவசியம் கடைபிடித்து வரவும். உங்களது ஆலோசனையை எதிர்பார்த்துக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிகப்படியான செலவினங்களால் கையிருப்பு கரையக் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவி வரும். உங்களது திட்டங்கள் செயல்வடிவம் பெறுவதில் காலதாமதம் உண்டாகும். அடுத்தவர்களின் ஒத்துழைப்பின்றி நீங்களே தனித்துச் செயல்பட வேண்டிய சூழல் உருவாகலாம். முக்கியமான பணிகளுக்கு இடைத்தரகர்களை நம்பாது நேரடியாகச் செயலில் இறங்குவது நல்லது. தகவல் தொடர்பு சாதனங்கள் முக்கியமான நேரத்தில் செயலிழந்து உங்களுக்கு சிரமத்தினைத் தரலாம்.
மாணவர்கள் கல்விநிலையில் நல்லதொரு முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டாகும். தொழில்முறையில் புதிய முயற்சிகளைப் புகுத்த முற்படுவீர்கள். உத்யோகஸ்தர்கள் அலுவல் பணியில் கீழ்நிலைப் பணியாளர்களை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியம். உயர்பதவியில் உள்ளோர் அடுத்தவர்களின் பணியையும் சேர்த்துச் செய்ய வேண்டியிருக்கும். சுயதொழில் செய்வோர் அதிகப்படியான அலைச்சலை சந்திக்க நேர்ந்தாலும் சிறப்பான தனலாபத்தினைக் கண்டு வருவார்கள். உங்களுக்குத் தெரிந்த நபர் ஒருவருக்கு மருத்துவச் செலவிற்காக நிதியுதவி செய்ய வேண்டியிருக்கும். நண்பர் என நினைத்திருந்த ஒரு நபர் உங்களுக்கு எதிராகச் செயல்படும் வாய்ப்பு உண்டு. நிதானத்துடன் செயல்பட்டு வெற்றி காண வேண்டிய மாதம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூலை 8, 9.
பரிகாரம்: விநாயகப்பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைத்து செயலைத் துவக்குங்கள்.
ராசிநாதன் சனியின் சாதகமான சஞ்சார நிலை துணை நிற்பதால் எண்ணிய காரியங்கள் எளிதில் நடந்தேறும். நினைத்த காரியத்தை நடத்தி முடிப்பதில் வேகம் காட்டி வருவீர்கள். இக்கட்டான சூழலில் நட்புமுறையில் நிறைய பேர் உங்களுக்குத் துணை நிற்பார்கள். பலருக்கும் பலவிதமாக இதுநாள் வரை உதவி செய்து வந்ததற்கான பிரதிபலனைக் காண உள்ளீர்கள். ஒரு சில செயல்களில் பிடிவாதத்தினைத் தவிர்த்து ஆளுக்குத் தகுந்தாற்போல் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வரவிற்கு முன்னதாக செலவினங்கள் வரிசையில் காத்து நிற்கும். தனாதிபதி குரு ராகுவோடு இணைந்திருப்பதால் பொருளாதார நிலையில் இறக்கம் உண்டாகாது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவி வரும். உறவினர்களுடனான சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். உடன்பிறந்தோர் உதவிகரமாகச் செயல்பட்டு வருவார்கள். தகவல் தொடர்பு சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சமாகப் பயன் தரும்.
மாணவர்கள் கல்வி நிலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டு வருவார்கள். வண்டி, வாகனங்கள், பிரயாணங்கள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டாகும். முக்கியமான பிரச்சினைகளில் பிள்ளைகளின் ஆலோசனைகள் பயன் தரும். அவர்களது செயல்கள் உங்கள் கௌரவத்தினை உயர்த்தும் வகையில் அமையும். வாழ்க்கைத்துணை உங்கள் எண்ண ஓட்டத்தினைப் புரிந்து கொண்டு செயல்பட்டு வருவார். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்வதற்கான வாய்ப்பு உண்டு. பெற்றோரின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. தொழில் முறையில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரிடும். உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் கருத்து வேறுபாடு கொள்ளும் வாய்ப்பு உண்டு. சுயதொழில் செய்வோர் நல்ல லாபம் கண்டு வருவார்கள். நற்பலன்களைக் காணும் மாதம் இது.
ராசிநாதன் குரு பகவானின் ஆறாம் இடத்துச் சஞ்சாரம் சற்று சிரமத்தினைத் தந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் மற்ற கிரகங்களின் துணையோடு பொறுமையினைக் கடைப்பிடித்து வருவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் பதறாது செயல்படுவதன் மூலம் வெற்றி காண இயலும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்து வருவீர்கள். அதிகமாகப் பேசுவதை விட அளவாகப் பேசுவதே நல்லது என்பதை நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நிற்பீர்கள். உங்கள் கருத்துகளை எழுத்துக்களாக வெளிப்படுத்துவதன் மூலம் நற்பெயர் காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவி வரும். பொருள் வரவு நிலை ஏற்றத்தாழ்வு இன்றி சீராக இருந்து வரும். தகவல் தொடர்பு சாதனங்கள் தொழில்முறையில் துணை நிற்கும். வண்டி, வாகனங்களை இயக்கும்போது கூடுதல் கவனம் தேவை.
பிரயாணத்தின்போது பொருளிழப்பு உண்டாவதற்கான வாய்ப்பிருப்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். பண விவகாரங்களில் மிகுந்த கவனம் தேவை. அடுத்தவர்களை நம்பி கடன் கொடுப்பதை சிறிது காலத்திற்குத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத்துணையோடு சிறுசிறு கருத்து வேறுபாடு தோன்றி மறையும். மருத்துவச் செலவுகள் தோன்றும் வாய்ப்பு உண்டென்பதால் உடல்நிலையில் கவனம் தேவை. முக்கியமான பணிகளில் நண்பர்களின் உதவியை சார்ந்திருக்க வேண்டியிருக்கும். கௌரவம் கருதி செய்ய வேண்டிய செலவுகள் அதிகரிக்கக் கூடும். தொழில்முறையில் புதிய நண்பர்களின் இணைவு பல புதிய பாடங்களைக் கற்றுத் தரும். சுறுசுறுப்பான செயல்பாடுகளின் மூலம் அலுவலகத்தில் நற்பெயர் கண்டு வருவீர்கள். சரிசம பலன்களைக் காணும் நேரம் இது.
சந்திராஷ்டம நாட்கள்: ஜூன் 15, 16, 17, ஜூலை 13, 14.