‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் 517 அதிகாரி பணி: 14-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அழைப்பு

0
84
Share on Facebook
Tweet on Twitter

BOI-Recruitment

‘பேங்க் ஆப் இந்தியா’ வங்கியில் 517 கிரெடிட் ஆபீசர், மேலாளர், சீனியர் மேலாளர் உள்ளிட்ட அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்தம் காலியிடங்கள்: 517

பணி: ஆபீசர் (கிரெடிட்) – 217

பணி: மேலாளர் – 200

பணி: சீனியர் மேலாளர் – 100

வயது வரம்பு: 01.04.2016 தேதியின்படி கிரெடிட் ஆபீசர் பணிக்கு 30க்குள்ளும். மேலாளர் பணிக்கு 35க்குள்ளும், சீனியர் மேலாளர் பணிக்கு 38க்குள்ளும் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: 60 சதவீத மதிப்பெண்ணுடன் பி.காம் தேர்ச்சி பெற்று எம்.பி.ஏ., பி.ஜி.டி.பி.எம், பி.ஜி.டி.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. போன்றவற்றில் ஏதாவதொன்றை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2016

மேலும் விவரங்கள்அறிய
Source: maanavan tamil-employment-news

Leave a Reply