Share on Facebook
Tweet on Twitter

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# ஒட்டுநிலை என்பது தனிநிலை சொற்களோடு வேறு வேறு உறுப்புக்கள் சேர்ந்து சொற்களாவது. உதாரணம் : அறி = அறிந்தான், அறிஞன்

# உட்பிணைப்பு நிலை என்பது, ஒரு சொல்லோடு இன்னொரு சொல் சேர்ந்து பகுதி, விகுதி என்று பிரிக்க முடியாது பிணைந்து பிறிதொரு சொல்லாக மாறுவது. உதாரணம் : கோவன்-புத்தூர் = கோவைதி ன மணி

# உயர்ந்த குலமும், சிறந்த ஒழுக்கமும், பகுத்தறிவும் படைத்த இனப்பொருட்களை உயர்திணை என்பர்.

# உயிருள்ள பொருட்களையும், உயிர் இல்லாப் பொருட்களையும் அக்றிணை எனக் கூறுவர்.

# இரு திணைகளிலும் அடங்கிய உலகத்துப் பொருட்களை ஐம்பால்களாகப் பிரிக்கலாம்.

# பால் என்பதற்கு பகுப்பு எனப் பொருளுண்டு.

# பால் ஐந்து வகைப்படும், அவை ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்.

# உயர்திணைக்கு உரிய பால்கள் : ஆண்பால், பெண்பால், பலர்பால்

# அக்றிணைக்கு உரிய பால்கள் : ஒன்றன்பால், பலவின்பால்

# தமிழ் இலக்கணம் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

# தமிழில் முதலெழுத்து என்பது உயிரெழுத்து, மெய்யெழுத்து என இருவகைப்படும்.

# ஒன்றினை சுட்டிக் காட்ட வரும் எழுத்திற்குச் சுட்டெழுத்து என்று பெயர்.

# சொற்களின் உள்ளே சுட்டெழுத்து அடங்கி வந்தால் அது அகச்சுட்டு.

# சொற்களுக்கு வெளியே சுட்டெழுத்து நிற்குமாயின் அது புறச்சுட்டு.

# வினாப் பொருளைக் காட்ட வருகின்ற எழுத்துக்கு வினாவெழுத்து என்று பெயர்.

# சொற்களின் உள்ளேயே வினாவெழுத்து அமைந்து வந்தால் அது அகவினா எனப்படும்.

# சொற்களின் வெளியே வினாவெழுத்து அமைந்தால் அது புறவினா எனப்படும்.

# வல்லினம் – க, ச,ட, த, ப, ற

# மெல்லினம் – ங, ஞ, ண, ந, ம, ன

# இடையினம் – ய, ர, ல, வ, ழ, ள

# மொழி முதல் எழுத்துக்கள் – க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங

# மொழி முதலில வரக்கூடாத எழுத்துக்கள் – ட, ண, ர, ல, ழ, ள, ற, ன

# மொழி இறுதி எழுத்துக்கள் – ஞ், ண், ந், ம், ன், ய், ர், ல், வ், ழ், ள்

# இறுதியில் வரக் கூடாத எழுத்துக்கள் ஏழு. அவை – க், ங், ச், ட், த், ப், ற்

# ஒரு சொல் உயிரெழுத்தில் துவங்கி, உயிரெழுத்தில் முடியும்.

# மெய்யெழுத்தில் தொடங்காது, ஆனால் மெய்யெழுத்தில் முடியும்.

# உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும், ஆனால் உயிர்மெய்யில் முடியாது.

# மெய்யெழுத்தில் க், ச், த், ப் என்னும் நான்கும் தம்முடன் தாமே மயங்கும் எழுத்துக்களாகும்.

# போல இருத்தல் என்பதே போலி. இது முதற்போலி, இடைப்போலி, கடைப்போலி என மூன்று வகைப்படும்.

# சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது முதற்போலி.

# சொல்லின் இடையில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது இடைப்போலி.

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 034
மூன்றாம் பாகம் – கொலை வாள் ponniyin-selvan-part-3
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply