Tamil GK For Government Exams – 0079

0
1049
Share on Facebook
Tweet on Twitter

தமிழ் நாட்டின் ஜேன் ஆஸ்டின் என்று அழைக்கப் படுபவர் யார்

அநுத்தமா

திருக்குறள் குமரேச வெண்பா  எழுதியவர் யார்

ஜெக வீரபாண்டியர்

செல்லின் செல்வர் என அழைக்கப்படுபவர் யார்

ரா.பி. சேதுப்பிள்ளை

திராவிட சாஸ்திரி என அழைக்கப்படுபவர் யார்

சி.வை.தாமோதரம்பிள்ளை

செந்தமிழ் இதழ் எப்பொழுது தொடங்கப்பட்ட்து

1903

திருத்தொண்டர் திருவந்தாதி யார் பாடியது

நம்பியாண்டார் நம்பி

சேக்கிழார் இயற்பெயர் என்ன

அருண்மொழித் தேவர்

நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தைத் தொகுத்தவர் யார்

நாதமுனிகள்

திருமழிசை யாழ்வார் இயற்பெயர் யாது

பக்திசாரர்

கண்ணகி கதையை இளங்கோவடிகளுக்குக் கூறியவர் யார்

சீத்தலைச்சாத்தனார்

மயக்கும் கள்ளும் மன்னுயிர் கோறலும் கயக்கறு மாக்கள் கடிந்தனர்

கேளாய் என்று கூறும் நூல் எது

மணிமேகலை

நரி விருத்தம் யார் பாடிய நூல்

திருத்தக்கதேவர்

கம்பரை ஆதரித்த வள்ளல் யார்

சடையப்பவள்ளல்

நேமிநாதம் என்ற இலக்கண நூலை எழுதியவர் யார்

குணவீரபண்டிதர்

நளவெண்பா இயற்றியவர் யார்

புகழேந்திப்புலவர்

நன்னூல் யாரால் எழுதப் பெற்றது

பவணந்திமுனிவர்

ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தது யார்

சிந்தாதேவி

சங்கப்புலவர்களுக்குத் தனிக்கோயில் எங்குள்ளது

மதுரைமீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் உள்ளது.

புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் எது

பன்னிருபடலம்

யாப்பருங்கலம் என்ற இலக்கண நூலின் ஆசிரியர் யார்

அமிதசாகரர்

தஞ்சை வாணன்கோவை யாரால் பாடப் பெற்றது

பொய்யா மொழிப் புலவர்

பெண்களின் பருவங்கள் எத்தனை

ஏழு

மூவருலா பாடியவர் யார்

ஒட்டக்கூத்தர்

கலம்பகத்தில் உள்ள உறுப்புக்கள் எத்தனை

18

  • TAGS
  • Tamil GK
SHARE
Facebook
Twitter
Previous articleவிமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுக்க ஆய்வு : வருவாய்த்துறை அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகை
Next articleENGLISH GK FOR GOVT EXAMS – 0079

Leave a Reply