விருதுநகர் : ராஜபாளையம் அருகே கோயிலில் மக்களின் உள்ளிருப்புப் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். அனைவரும் இனைந்து செயல்படுவோம் என சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் 500 பெண்கள் உட்பட 800 பேர் போராட்டம் நடத்தி வந்தனர். 10 சமுதாய மக்களுக்கு சொந்தமான கோயிலை ஒரு சமூகத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் தெரிவித்துள்ளனர்.
Source: Dinakaran