Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# “திங்களை பாம்பு கொண்டற்று” என்ற குறள் எதை குறிப்பிடுகிறது – சந்திர கிரகணம்

# உடலை நீர் தூய்மை செய்யும், உள்ளத்தை எது தூய்மை செய்யும் – வாய்மை

# ஆய்த எழுத்து எந்த எழுத்து வகையை சேர்ந்தது – சார்பெழுத்து

# திரு.வி.க இயற்றிய பொதுமை வேட்டல் என்னும் தலைப்பில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 430

# திரு.வி.க . பிறந்த ஊர் – தண்டலம்

# உழவர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் நாடகங்களுக்கு பெயர் – பள்ளு

# நொண்டி வகை நாடகங்கள் எந்த காலத்தில் தோன்றின் – கி.பி.12

# அருணாசலக் கவிராயரின் ராம் நாடகம் தோன்றிய நூற்றாண்டு – கி.பி.18

# தெருக்கூத்து நாடகங்கள் எதை மையமாக வைத்து நடத்தப்பட்டன – புராணக்கதைகள்

# குறவஞ்சி நாடகங்கள் நடத்தப்பட்டது – நாயக்க மன்னர்கள் காலத்தில்

# ராஜராஜசோழன் காலத்தில் நடத்தப்பட்ட நாடகம் – ராசராசேச்சுவரம்

# மத்த விலாசம் என்ற நூலை எழுதியவர் – மகோந்திரவர்ம பல்லவன்

# மத்த விலாசம் எழுதப்பட்ட காலம் – கி.பி. 7

# நாடக கலையை பற்றியும், காட்சிகள் பற்றியும், நாடக அரங்கம் பற்றியும் விரிவாக கூறியுள்ள நூல் – சிலப்பதிகாரம்

# தனிப்பாடலுக்கு மெய்பாடு தோன்ற ஆடுவதற்கு – நாட்டியம் என்று பெயர்

# கூத்துவகைகள், நாடக நூல்கள் குறித்து யார் உரையில் குறிப்பிடப்பட்டுள்ளது – அடியார்க்கு நல்லார்

# நாட்டின் கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவது – நாடகம்

# மனித வாழ்க்கையும் காந்தியும் என்ற நூலின் ஆசிரியர் – திரு.வி.க

# திரு.வி.க சென்னையில் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பள்ளி – வெஸ்லி பள்ளி

# அக இருளை போக்கும் விளக்கு – பொய்யா விளக்கு

# நாயக்க மன்னர்கள் தமிழகத்தை எத்தனை பாளையங்களாக பிரித்தனர் – 72

# சார்பெழுத்துக்கள் எத்தனை வகை – 10

# அறிவுரைக் கோவை என அழைக்கப்படுவது – முதுமொழிக்காஞ்சி

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 100

# மோசிக்கீரனார் உடல் சோர்வால் முரசுக் கட்டிலில் தூங்கியபோது கவரி வீசிய மன்னன் – சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை

# நெல்லும் உயிரன்றே என்னும் பாடலை பாடியவர் – மோசிக்கீரனார்

# முதுமொழிக் காஞ்சியில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை – 10

# முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் – மதுரை கூடலூர் கிழார்

# கற்றலை விட சிறந்தது – ஒழுக்கமுடைமை

# மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பிறந்த ஆண்டு – 1815

# வனப்பு என்ற சொல்லின் பொருள் – அழகு

# “நில்லாமையுள்ளும் நெறிப்பாடும்” என்னும் வரியில் “வழி” என்பதன் பொருள் – உள்

# “பால் பற்றி செல்லா விடுதலும்” என்னும் வரியில் “பால்” என்பதன் பொருள் – ஒருபக்க சார்பு பற்றி

# காளமேகப் புலவர் பிறந்த ஊர் – நந்திக்கிராமம்

# சென்னை துறைமுகம் சார்பில் குடிநீர் கப்பலுக்கு பெயர் – சீனிவாச ராமானுஜம்

# ராமானுஜம் எழுத்தராக பணியாற்றிய இடம் – துறைமுகம்

# ராமானுஜர் உயர்கல்விக்காக சென்ற நாடு – இங்கிலாந்து

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 011
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 009
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply