Share on Facebook
Tweet on Twitter
General Knowledge Questions And Answers - VAO-TNPSC

General Knowledge Questions And Answers – VAO-TNPSC 

பொது அறிவு வினா விடைகள்

# வெகுளி என்ற சொல்லின் பொருள் – கோபம் (அ) சினம்

# விளக்கிலிருந்து கிடைப்பது ஒளியா? ஒழியா? – ஒளி

# குறுந்தொகை என்னும் தொகை நூலின் பாடிய புலவர்கள் – 205 புலவர்கள்

# குறிஞ்சித் திணைப் பாடல் பாடுவதில் வல்லவர் – கபிலர்

# குறுந்தொகையில் இடம் பெற்ற பாடல்கள் எத்தனை – 402 பாடல்கள்

# புறநானூறு என்னும் நூலில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் – ஜி.யூ.போப்

# புறநானூறு இடம் பெறும் தொகுப்பு – எட்டுத்தொகை

# சீத்தலைச் சாத்தனார் பாடல்கல் இடம் பெறும் சங்க இலக்கிய நூல்கள் – அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை

# சீத்தலை சாத்தனார் புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடும் மன்னன் – பாண்டியன் நன்மாறன்

# எந்த நூல் அரங்கேற்றத்தின்பொது குமரகுருபரருக்கு மீனாட்சியம்மை பெண் குழந்தை வடிவில் வந்து மாணிக்கமாலை பரிசளித்தார்? – மீனாட்சியம்மை குறம்

# குமரகுருபரர் வாய் ஊமை நீங்கிய உடன் இறைவனைப் பாடிய ிலக்கியம் – கந்தர் கலிவெண்பா

# குமரகுருபரரின் பேச்சுத்திறன் பெற்ற திருத்தலம் – திருச்செந்தூர் முருகன் திருக்கோவில்

# குமரகுருபரரின் காலம் – 17-ம் நூற்றாண்டு

# குமரகுருபரரின் பெற்றோர் – சண்முக சிகாமணி கவிராயர், சிவகாமி சுந்தரி அம்மையார்

# குமரகுருபரர் பிறந்த இடம் – திருவைகுண்டம் (நெல்லை மாவட்டம்)

# திரிகூடமலை என்பது எதனைக் குறிக்கிறது – திருக்குற்றால மலை

# மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்

# குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடமலை வளத்தை யார் கூறுகிறார் – குறத்தி

# குற்றாலக் குறவஞ்சி எவ்வகை இலக்கணம் – சிற்றிலக்கியம்

# குற்றாலக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவர் – திருக்குற்றால நாதர் (சித்திர சபை)

# குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர் – திரிகூட ராசப்பக் கவிராயர்

# நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவர் – நந்திவர்ம பல்லவன்

# நந்தித் கலம்பகத்தின் காலம் – கி.பி.9-ம் நூற்றாண்டு.

# நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் – ஆசிரியர் பெயர் இல்லை

# காவடிச் சிந்து இலக்கிய வகைகளுள் முதன்மையானது – அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து.

# அண்ணாமலை ரெட்டியாரின் பெற்றோர் – சென்னப்ப ரெட்டியார், ஒவு அம்மையார்.

# அண்ணாமலை ரெட்டியார் பிறந்த ஆண்டு 1861

# அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்துவில் பாடப்படும் இறைவன் – கழுகுமலை முருகப் பெருமான்

# அண்ணாமலை ரெட்டியார் ஊர் – சென்னிக்குளம் (திருநெல்வேலி மாவட்டம்)

# காவடிச் சிந்துவின் ஆசிரியர் – அண்ணாமலை ரெட்டியார்

# மூவேந்தர் – சேரர், சோழர், பாண்டியர்

# நான்கு வேதங்கள் – ரிக், யஜீர், சாமம், அதர்வணம்

# அறுசுவை என்பவை – கைப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு

# ஏழு கடல்கள் – உப்புக் கடல், நன்னீர், பால், தயிர், நெய், தேன், கரும்புச் சாறு கடல்.

# நவரசம் என்பவை – நகைப்பு, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி(சினம்), உவகை. சாந்தம்.

# ஐந்திலக்கணம் என்பவை – எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி

# எண் வகை மெய்ப்பாடுகள் எவை – நகைப்பு, அழுகை, இளிவு, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை.

General Knowledge Questions And Answers - VAO-TNPSC 013
General Knowledge Questions And Answers - VAO-TNPSC 011
SHARE
Facebook
Twitter
Previous article
Next article

NO COMMENTS

Leave a Reply